செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

நீங்களும் மூவி செய்யலாம்

உங்களுக்கு கணினி கீபோர்டில் தட்டத்தெரிந்தால் போதும். உங்களால் ஒரு கார்டூன் மூவியையே உருவாக்க முடியும் என்கின்றது இந்த தளம் xtranormal.com. IF YOU CAN TYPE,YOU CAN MAKE MOVIES என்பது தான் அவர்கள் கோஷம். TEXT-TO-MOVIE என்கின்றார்கள். கற்பனை வளம் மிக்கவர்கள் இனி ஓடுபடங்களை எளிதாக உருவாக்கி யூடியூபில் ஏற்றி மகிழலாம். அதிகம் பேர் பார்வையிட்டால் யூடியூப் வேறு உங்களுக்கு காசு கொடுக்கின்றேன் என்கின்றது பின்னே எதற்கு வெயிட்டிங். ஒரு நிமிடம். உங்கள் வேலை மட்டும் பறிபோகாமல் பார்த்துக்கொள்ளவும். இப்படித்தான் பெஸ்ட்பை அங்காடியில் வேலை பார்த்த ஒரு நபர் iPhone4 vs HTC Evo என்ற கீழ்கண்ட வீடியோவை உருவாக்கி யூடியூபில் வெளியிட இரண்டே வாரத்தில் சூப்பர் ஹிட்டாக 3,847,381 பேர் பார்வையிட்டிருக்கின்றார்கள். ஏதோ கடுப்பில் பெஸ்ட்பை அவரை வேலையை விட்டு தூக்கிவிட்டது.வாழ்க ஜனநாயகம்.


http://www.youtube.com/watch?v=FL7yD-0pqZg





வெளிநாடுகளில் வேலை தேடுவோர்கள் வசதிக்காக அவர்கள் ஏமாந்து போகாமல் இருக்க ஃபிராடு கம்பெனிகளின் பெயர்களை இந்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மலேசியாவில் தான் இந்த மாதிரி ஃபிராடுகள் அநேகம் பேர் இருக்கின்றார்களாம். நீங்களும் உஷாராக இருக்க அந்த கோப்புக்கான சுட்டியை இங்கே கொடுத்துள்ளேன்.

http://www.moia.gov.in/writereaddata/pdf/PAC_LIST.pdf

ஆண்ட்ராய்‌ட் போன்களுக்கான மொபைல் பிரவுசரை அறிமுகம் செய்தது மோசில்லா

பெங்களூரு : கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்ட மொபைல் போன்களுக்கான மொபைல் பிரவுசரை மோசில்லா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, மோசில்லா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : ஆண்ட்ராய்ட் மொபைல் போன்கள் மற்றும் நோக்கியா நிறுவனத்தின் என்900 மாடல் போன்களுக்காக, மோசில்லா நிறுவனம் ஆல்பா பதிப்பிலான பென்னக் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய மொபைல் பிரவுசரை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், இந்த புதிய பிரவுசர் எலெக்ட்ரோ லைசிஸ் மற்றும் லேயர்ஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பிரவுசரில் ஆட் ஆன்ஸ், பார் பிரவுசிங் ஹிஸ்ட்ரி, புக்மார்க்ஸ், பாஸ்வேர்ட்ஸ், பார்ம் பில் டேட்டா உள்ளிட் சிறப்பம்சங்கள் இதில் அடங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நினைவகம் வினாடி-வினா

கம்ப்யூட்டர், நினைவகம் இல்லாமல் செயல்பட முடியாது. இதில் உள்ள நினைவக வகைகளை எல்லாரும் அறிந்திருப்பதில்லை. ஆனால் அறிந்து கொள்வது, கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதில் உள்ள தயக்கத்தினை விடுவித்து, சிறப்பாக அதனைப் பயன்படுத்த வழி வகுக்கும். நினைவகம் குறித்த தகவல்களை நாம் எந்த அளவிற்கு தெரிந்து வைத்திருக்கிறோம் என அறிய இந்த வினாடிவினா தரப்படுகிறது. ஒவ்வொரு கேள்விக்கும் தரப்படும் விளக்கம் நம் நினைவக அறிவை வளர்க்கும்.


1. எந்த வகை கம்ப்யூட்டர் மெமரி நிலையானதும், மாறா நிலை கொண்டதுமான தன்மையுடையது?

அ. RAM,, ஆ.ROM, இ.Cache

ஆ. ROM எனப்படும் Read Only Memory . . இதனைப் படிக்கத்தான் முடியும். இந்த நினைவகத்தில் உள்ள தகவல்களை மாற்றி எழுத முடியாது. இது ஒரு புரோகிராம் செய்யப்பட்ட மின் சுற்று. மின் சக்தி இந்த சுற்றுக்குச் செல்வதை நிறுத்தினாலும், புரோகிராம் மூலம் பதியப்பட்ட தகவல்கள் மாறா நிலையில் இருக்கும்.

2. கம்ப்யூட்டரின் நினைவகங்களின் அடுக்கில், டேட்டா முதலில் எந்த நினைவகத்திற்குச் செல்லும்?

அ.RAM, ஆ.ROM, இ. BIOS

அ. RAM.. மவுஸ் அல்லது கீ போர்டாக வெளி சாதனமாக இருந்தாலும், அல்லது கம்ப்யூட்டரின் உள்ளிடத்திலிருந்து வரும் டேட்டாவாக இருந்தாலும், அவை RAM ஐத்தான் முதலில் அடையும்.

3. BIOS என்பது எதனைக் குறிக்கிறது?

அ. Biological Internet Operating System

ஆ. Binary Inner/Outer Stages

இ. Basic Input Output System.

இ. Basic Input Output System கம்ப்யூட்டருக்கான அடிப்படைத் தகவல்களை இது முதலில் கம்ப்யூட்டரின் சிபியுவிற்கு அனுப்புகிறது. கம்ப்யூட்டரில் எங்கு டேட்டா ஸ்டோர் செய்யப்படுகிறது, எந்த வரிசையில் கம்ப்யூட்டர் பூட் ஆகிறது, சிஸ்டத்தின் பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் சில அடிப்படைத் தகவல்களை இது அனுப்பும்.

4. ஒரு கம்ப்யூட்டரின் செயல் வேகம் குறையும் போது, மெமரியின் எந்த பகுதி அதிக வேலையைப் பெறுகிறது?

அ. RAM, ஆ.ROM, இ. Flash Memory

அ. RAM. கம்ப்யூட்டர் புரோகிராம்கள் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் RAM மெமரியில் தான் லோட் செய்யப்படுகின்றன. எனவே ஒரே நேரத்தில், பல புரோகிராம்களின் செயல்பாடுகள் மேற்கொள்ளப் பட்டால், ராம் நினைவகம் அதிக வேலைப் பளுவினைப் பெறுகிறது. இதனால் கம்ப்யூட்டரின் செயல் வேகம் குறையும். சில வேளைகளில் தவறான செயல்பாடு கூட ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.

5. Clock Cycle என்பது என்ன?

அ. கம்ப்யூட்டரின் கடிகாரத்தின் துல்லிய தன்மை

ஆ. சிபியுவின் செயலாற்றும் வேகம்

இ. பூட் செய்த பின்னர், மெமரியில் இருந்து சிலவற்றைப் பெற்று, கம்ப்யூட்டர் தன் செயல்பாட்டினை மீளப் பெற எடுக்கும் கால அவகாசம்.

ஆ. சிபியுவின் செயலாற்றும் வேகம். இது hertz என்ற அலகினால் அளக்கப்படுகிறது. இப்போதைய ப்ராசசர்கள் கிகா ஹெர்ட்ஸ் என்ற அதிவேக அளவில் செயல்படுகின்றன.

6. Memory Cache என்பது என்ன?

அ. ஒரு குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள கம்ப்யூட்டருக்கு ஒதுக்கப்பட்ட நினைவக இடம்.

ஆ. இப்போது பயனற்ற நிலையில் உள்ள மெமரி சாதனம்

இ. தற்காலிக நினைவக இடம். உடனடியாகச் செயலாற்ற சில டேட்டாக்கள் இங்கு தங்கவைக்கப்படும்.

இ. இது டேட்டா தருவதற்கான ஒரு தற்காலிக நினைவக இடம். சிபியுவின் செயல் வேகம் மிக அதிகமாக இருக்கையில், RAM மெமரியிலிருந்து வழங்கப்படும் டேட்டா பற்றாக்குறையாக ஆகிவிடும். இந்நிலையில் Cache Memory உதவுகிறது. இதில் தற்காலிகமாகத் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன. இதனால், RAM மெமரி செல்லாமல், சிபியு கேஷ் மெமரியிலிருந்தே தனக்கு வேண்டிய தகவல்களை எடுத்துக் கொள்கிறது. இதனால் RAM மெமரியிலிருந்து டேட்டா எடுக்கப்படும் நேரம் மிச்சமாகிறது. கம்ப்யூட்டரின் சிபியு வேகமாகச் செயல்பட முடிகிறது.

7. கம்ப்யூட்டர் உலகில் Bus Width என்பது எதனைக் குறிக்கிறது?

அ. கம்ப்யூட்டரை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்கையில் பயன்படுத்தும் வாகனத்தின் அளவு.

ஆ. கம்ப்யூட்டர் போர்ட்டில் உள்ள பின்களின் எண்ணிக்கை

இ. சிபியுவிற்கு ஒரே நேரத்தில் அனுப்பப்படும் தகவல் பிட்(Bit)களின் எண்ணிக்கை

இ. கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் ராம் மெமரியின் வேகம் இரண்டு செயல்பாடுகளில் அடிப்படையில் உள்ளது. அவை Bus Width மற்றும் Bus Speed. . இதில் Bus Width என்பது சிபியுவிற்கு RAM எந்த அளவில் தகவல்களை அனுப்ப முடியும் திறன் கொண்டதாய் உள்ளது என்பதைக் காட்டுகிறது.

8. கம்ப்யூட்டர் ஒன்று தன் பணியினைத் தொடங்குகையில் எந்த மெமரி முதலில் இயங்கத் தொடங்குகிறது?

அ. RAM, ஆ .ROM, இ. BIOS

இ. BIOS கம்ப்யூட்டர் பூட் ஆகும்போதே, BIOS தான் முதலில் இயங்கி கம்ப்யூட்டர் குறித்த அடிப்படைத் தகவல்களைத் தருகிறது.

15வது ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்

சென்ற ஆகஸ்ட் 16ல் தன் பதினைந்தாவது பிறந்த நாளை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் கொண்டா டியுள்ளது. நிறுவனங்கள் பயன்பாடு, விண்டோஸ் சிஸ்டத்துடன் இணைந்து தரப்படுவது போன்ற பல கூறுகளால், இன்னும் தன் முதல் இடத்தைப் பிரவுசர் சந்தையில் தக்கவைத்துள்ள இந்த பிரவுசர், இதற்கென தொடர்ந்து மேற்கொண்டு வரும் போராட்டம் கவனிக்கத்தக்கதாகும்.


2001 ஆம் ஆண்டில் விண்டோஸ் எக்ஸ்பி அறிமுகப்படுத்தப்பட்ட போது, மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் குறித்த தன் நடவடிக்கை களில் சிறிது மந்த நிலையை மேற்கொண்டது. அந்த இடைப்பட்ட காலத்தில் பயர்பாக்ஸ் பிரவுசர் வெளியாகி, நல்லதொரு இடத்தைப் பிடித்துக் கொண்டது. தொடர்ந்து கூகுளின் குரோம் பிரவுசரும் வெளியாக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தன் இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்களுக்குத் தரத் தொடங்கியது. இதனால் தன் 15 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த மாதத்தில், பிரவுசர் சந்தையின் முதல் ஹீரோவாக இருந்தாலும், சுற்றிலும் பல போட்டியாளர்களைச் சந்திக்கும் நிலையிலேயே இ.எ. பிரவுசர் உள்ளது. ஜூலை இறுதியில் இ.எ. பிடித்துள்ள இடம் 60%; பயர்பாக்ஸ் 23%, குரோம் 7% மற்றும் சபாரி 5%.

கூகுள் தன் பிரவுசரான குரோம் தொகுப்பின் தன்மையை வேறு எந்த பிரவுசரும் கொண்டிருக்கவில்லை என்று பெருமைப்படுகிறது. இணைய வழி சேவைகள் என்று பார்க்கையில் கூகுள் தான் மிக அதிகமாக சேவைகள் தருவதாகவும், அதனாலேயே இதன் பிரவுசர் தனித்தன்மை கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது. குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படையில் நெட்புக் கம்ப்யூட்டர்கள் வெளியாகும்போது, இந்த உண்மை தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனைச் சமாளிக்கும் வகையில் இ.எ. பிரவுசர் பதிப்பு 9 வெளியாக உள்ளது. தற்போதைய கம்ப்யூட்டர்களில் முக்கிய இடத்தைக் கொண்டிருக்கும் கிராபிக்ஸ் பயன்பாட்டினை இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் இணைத்து, இதன் வலிமையை நிரூபிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சில சோதனைப் பதிப்புகளையும் காட்டியுள்ளது.

இந்நிலையில் ஒரு கேள்வி நம் மனதில் எழுகிறது. எது முக்கியம்? ஆப்பரேட்டிங் சிஸ்டமா? பிரவுசரா? மைக்ரோசாப்ட் எப்போதும் ஒரு பிரவுசர், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும் என்ற கருத்தினை வெளியிட்டு வருகிறது. இங்கு தான் பிரச்னையே எழுகிறது. ஏன் மைக்ரோசாப்ட் இந்த நிலையை எடுக்கிறது என்று பார்க்கலாம்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ல் வெளியானது. தன் விண்டோஸ் 95 தொகுப்பினை வெளியிட்டு ஒரு மாதம் கழித்து இந்த பிரவுசரை வெளியிட்டது. விண்டோஸ் 95 சிஸ்டத்தின் ஆட் ஆன் தொகுப்பாகத் தந்தது. இணையத்தின் வலிமையை, திறனைத் தான் தெரிந்து கொண்ட தாகவும், அதனால் தன் அனைத்து சாதனங்களிலும், இணையப் பயன்பாட்டினை இணைக்க இருப்ப தாகவும் அறிவித்தது. அப்போது பிரவுசர் உலகில் கொடி கட்டிப் பறந்த நெட்ஸ்கேப் பிரவுசரை, இன்டர்நெட் எக்ஸ்புளோரரால் உடனே வெளியே தள்ள முடியவில்லை. 1997 ஆண்டு, முதல் ஆறு மாதம் வரை இ.எ. பிரவுசர் 50% இடத்தை மட்டுமே கொண்டிருந்தது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 3, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டு வெளியானபோதுதான், இ.எ. பிரவுசருக்கு நல்ல காலம் ஏற்பட்டது. உடனே இது போல இணைத்துத் தருவது, நிறுவனக் கொள்கைகளைக் காற்றில் பறக்க விடுவதாகும், எல்லை மீறிய செயல் என்று அப்போது ஐரோப்பிய கூட்டமைப்பு வழக்கு தொடுத்தது. சென்ற ஆண்டு தான் இந்த வழக்கு முடிவு மைக்ரோசாப்ட் நிறுவனத்தைத் தண்டிக்கும் வகையில் வெளியானது.

ஐரோப்பிய நாடுகளில் மட்டும் தன் பிரவுசரைக் காட்டாமல் இருக்கப்போவதாக, மைக்ரோசாப்ட் அச்சுறுத்திப் பார்த்தது. இறுதியில் மற்ற பிரவுசர்களையும் வாடிக்கையாளர்கள் விரும்பினால், டவுண்லோட் செய்து பயன்படுத்த வழிகளைத் தருவதாக அறிவித்தது.

நெட்ஸ்கேப் பிரவுசரைப் பின்னுக்குத் தள்ளி, இருக்கும் இடம் காணாமல் ஆக்கியபின், மைக்ரோசாப்ட் சற்று நிதான போக்கினைக் கடைப்பிடித்தது. அடுத்த புதிய வசதிகள், இ.எ. பதிப்பு 6ல் தான் தரப்பட்டது. இந்த வேளையில் பயர்பாக்ஸ் டேப் பிரவுசிங் உட்பட பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியது. இது போன்ற சில புதுமைகள் எதனையும் தராததால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சற்றுத் தள்ளாடியது.

இதனால், தன் இ.எ. பிரவுசர் பதிப்பு 8 மற்றும் பதிப்பு 9ல், இன்டர்நெட் உலகம் எதிர்பார்க்கும் நவீன வசதிகளைத் தர முனைந்து செயல்பட்டது. தொடர்ந்து இந்த முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது.



1995: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 1.0

விண்டோஸ் 95 வந்த பின் ஒரு மாதம் கழித்து “Internet Jumpstart Kit” என அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பகுதியாக வெளியாகவில்லை.

1995: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 2.0.

அந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. மேக் மற்றும் விண்டோஸ் ஆகிய இரு சிஸ்டங்களையும் இது சப்போர்ட் செய்தது.

1996: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 3.0.

1996 ஆகஸ்ட்டில் வெளியானது. இமெயில் சப்போர்ட் தரப்பட்டது. இமேஜ் பைல்கள் காட்டப்பட்டன. ஆடியோவும் இதிலேயே இயக்கப்பட்டது.

1997: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 4.0.

வாடிக்கையாளர்களுடன் தகவல் சேர்க்கும் வகையில், இன்ட்ராக்டிவ் இணைய தளங்கள் சப்போர்ட் செய்யப்பட்டன. மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் 4.0. இமெயில் சேவையை வழங்கும் வகையில் வெளியானது.

1998: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 5.0.

தொழில் நுட்ப ரீதியாகச் சில திறன்கள் மேம்பாடடைந்தன.

2001: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6.0.

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பகுதியாக வெளியானது. பல ஆண்டுகள் இதன் கூறுகளே, பிரவுசர் ஒன்றின் வரையறைக்கப்பட்ட கூறுகளாக இருந்து வந்தன.

2006: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0.

2006 அக்டோபர் மாதம் வெளியானது. விண்டோஸ் சர்வீஸ் பேக் 2 பயன்படுத்துபவர்களுக்கென உருவாக்கப்பட்டு கிடைத்தது. பின்னர் விஸ்டாவின் ஒரு பகுதியானது. டேப் பிரவுசிங் வசதி தரப்பட்டது.

2009: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8.0.

மார்ச், 2009ல் வெளியானது. தன் பிரவுசிங் இன் ஜினை, நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கியது மைக்ரோசாப்ட். இந்த பிரவுசரின் ஒரு பகுதி விண்டோஸ் 7 சிஸ்டத்தின் ஒரு பகுதியானது.

2011? இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9.0.

பெரிய அளவிலான அடுத்த அப்டேட் இதுவாகத்தான் இருக்கும். எச்.டி.எம்.எல்.5 தொழில் நுட்பத்திற்கான மேம்படுத்தப்பட்ட சப்போர்ட் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகமாக இயங்கும் ஜாவா ஸ்கிரிப்ட் இன் ஜின் கிடைக்கும். கம்ப்யூட்டரின் கிராபிக்ஸ் சிப்பின் திறனைப் பெற்று, டெக்ஸ்ட் மற்றும் கிராபிக்ஸ் திறனை மேம்படுத்திக் காட்டப்படும் வசதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னஞ்சல் பிழைச் செய்திகள்

சாப்பிடுகிறோமோ இல்லையோ, அன்றாடம் நமக்கு வந்திருக்கும் மின்னஞ்சல்களைப் பார்ப்பதுவும், அவற்றிற்கான பதில்களை அனுப்புவதும் நம் அன்றாட வேலையாக மாறி வருகிறது. இவை எல்லாம் சரியாகச் செல்லும் வரை நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் பல வேளைகளில், மின்னஞ்சல் பரிமாற்றத்திலும் நமக்குப் பல பிழைச் செய்திகள் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.


1.Delivery Error:: இந்த பிழைச் செய்தி சில வேளைகளில் 550 அல்லது 554 என்ற எண்ணுடன் குறிப்பிடப்படும். இது பொதுவாக அடிக்கடி பெறப்படும் பிழைச்செய்தியாகும். இதன் பொருள்: நீங்கள் பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரி என ஒன்று இல்லவே இல்லை. இதற்கு எந்த மெயிலையும் அனுப்ப முடியாது என்பதுவே. இதற்குக் காரணம், முகவரி அமைப்பதில் ஏதேனும் சில எழுத்துப் பிழைகள் ஏற்பட்டிருக்கலாம். முகவரியில் உள்ள எண்கள் அல்லது வேறு குறியீடுகள் விடுபட்டிருக்கலாம்.

2.Unknown host: இதற்கான எண் எதுவும் இருக்காது. காரணங்கள்:1) முகவரியில் இறுதியில் உள்ள சர்வரின் பெயரில் எழுத்துப் பிழை, 2) அந்த பெயரில் இப்போது எந்த சர்வரும் இல்லை, அல்லது 3) அந்த சர்வரின் அமைப்பு இப்போது வேறாக இருக்கலாம்.

எனவே இந்த மின்னஞ்சல் முகவரியினை முழுமையாகச் சோதனை செய்திட வேண்டும். இதுவும் தீர்வு தரவில்லை என்றால், அஞ்சல் முகவரிக்கானவரை, வேறு வழிகளில் தொடர்பு கொண்டு சரியான முகவரியினைப் பெறவும்.

3. Mail not accepted: பிழை எண் 550 அல்லது 554 ஆக இருக்கலாம். யாருக்கு இந்த அஞ்சலை அனுப்பு கிறீர்களோ, அவருக்கான இந்த முகவரிக்கு ஒரு சிலர் மட்டுமே அஞ்சலை அனுப்பும் வகையில் வரையறை செய்யப்பட்டிருக்கலாம். அல்லது ஒரு குழு மட்டுமே அனுப்பும் வகையில் இருக்கலாம். இந்த அமைப்பினை அவர் மாற்றினால் தான் இந்த முகவரியினைப் பயன்படுத்தி, அஞ்சல் அனுப்ப முடியும்.

4. Service Unavailable: சில வேளைகளில் இது 550 என்ற எண்ணுடன் இருக்கும். அல்லது எண் இல்லாமல் இருக்கும். தற்போதைக்கு, இந்த முகவரிக்கான சர்வர் அஞ்சல் எதனையும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை; அல்லது பராமரிப்பு காரணமாக அஞ்சல் பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கலாம். சில மணி நேரம் காத்திருந்த பின்னர், அஞ்சலை அனுப்பலாம்.

5. Sender’s address rejected:பிழை எண் 550 அல்லது 554 ஆக இருக்கலாம். இது உங்களுக்கு ஒரு மோசமான செய்தி. உங்கள் முகவரியினை ஸ்பேம் மெயில் அனுப்பும் முகவரியாக, உங்கள் அஞ்சலைப் பெறுபவர் வரையறை செய்துள்ளார். அல்லது அவர் சார்ந்துள்ள குழு அது போல அமைத்திருக்கும். அவரை வேறு வழியில் தொடர்பு கொண்டு, கறுப்பு பட்டியலில் இருந்து உங்களின் முகவரியினை நீக்குமாறு கேட்டுக் கொள்ளலாம்.

6.Inbox Full : சில வேளைகளில் 552 என்ற எண்ணுடன் இந்த பிழைச் செய்தி இருக்கலாம். குறிப்பிட்ட கால அவகாசத்தில், அஞ்சலைப் பெற வேண்டிய நபர், அதிக பட்ச மெயில்களைப் பெற்றிருக்கலாம். அவரின் அஞ்சல் பெறும் பெட்டியில் கொள்ளும் அளவிற்கு அஞ்சல்கள் பெறப்பட்டுள்ளதால், உங்கள் மெயில் திருப்ப அனுப்பப்பட்டுவிட்டது. எனவே மெயிலைப் பெற இருப்பவர், அவராக இந்த பாக்ஸில் உள்ள மெயில்களை நீக்கினால்தான், மேலும் அவருக்கு மெயில்கள் சென்றடையும்.

7.Message exceeds maximum file size: இந்த பிழைச் செய்தி சில வேளைகளில் 552 என்ற எண்ணுடன் தரப்படும். நீங்கள் உங்கள் அஞ்சலுடன் இணைத்துள்ள பைலின் அளவு, அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகமானதாக இருப்பதாக பொருள். எனவே இணைக்கப்படும் பைலின் அளவை குறைக்க வேண்டும். அல்லது இணைப்பையே நீக்க வேண்டும். பைலின் அளவைக் குறைக்க இயலவில்லை என்றால், பைலை வேறு வழிகளில் அனுப்பலாம். வெளியாக பைல் மாற்றும் சேவைகள் தரும் பல தளங்கள் இதற்கென உள்ளன. இன்னும் பல பிழைச் செய்திகளை, மின்னஞ்சல் அனுப்பும்போது நாம் பெறலாம். இருப்பினும் மேலே காட்டப்பட்டுள்ள செய்திகளே நாம் அடிக்கடி சந்திக்கும் செய்திகளாகும்.

ஆங்கில அகராதியில் புதிய தகவல் தொடர்பு சொற்கள்

ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் தயாரித்து வழங்கும் ஆங்கில அகராதி உலகப் புகழ் பெற்றது. குறிப்பிட்ட கால அளவில் இந்த அகராதியின் ஆசிரியர் குழு, புதிதாக ஆங்கில மொழியில் புழங்கும் சொற்களை அகராதியில் அதிகார பூர்வமாக இணைக்கும். அந்த வகையில் அண்மையில் வெளிவந்த புதிய அகராதி பதிப்பில், 2,000 சொற்கள் அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் தகவல் தொடர்பு மற்றும் கம்ப்யூட்டர், இன்டர்நெட் பிரிவுகளில் புதிதாக உருவாகிப் பயன்படுத்தப்படும் பல சொற்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம். Tweetup Tweetமற்றும் Meetup என்ற சொற்களின் இணைப்பு. Twitter தளம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் என்பது இதன் பொருள்.


Defriend: இன்டர்நெட், மெயிலிங் லிஸ்ட் ஆகியவற்றில் நீங்கள் ஏற்படுத்திய உங்கள் நண்பர்கள் பட்டியலில் இருந்து ஒருவரை நீக்குவதனை இந்த சொல் குறிக்கிறது.

Chillax: சற்று குளிர்ச்சியாகவும் ஓய்வாகவும் (Chill + Relax) இரு Micor Blogging: ஒரு இணைய சேவை. சேவை ஒன்றில் சிறிய செய்தியினை அந்த சேவையைப் பெறும் அனைவருக்கும் அனுப்புவது.

Paywall: குறிப்பிட்ட இணைய தளத்தில் உள்ள தகவல்களை, கட்டணம் செலுத்திய பின்பே அனுமதிக்கும் சாப்ட்வேர் சுவர்.

Netbook: நெட்புக் கம்ப்யூட்டர் இன்னும் பெரிய அளவில் புழக்கத்திற்கு வரவில்லை என்றாலும், ஆக்ஸ்போர்ட் அகராதி இதற்கு அங்கீகாரம் தந்து எடுத்துக் கொண்டுள்ளது.

சில சொற்கள், மொழி இலக்கணப்படி முறையாக இல்லை என்றாலும், அகராதியில் இணைக்கப் பட்டுள்ளன. மொழியியலாளர்கள் இவற்றைக் கண்டு முகம் சுழித்தாலும், இவை அகராதியில் இடம் பிடிக்கின்றன. அவற்றில் சில, Wurfing: வேலை (Work+Surfing) பார்க்கும் போது, திருட்டுத்தனமாக இணையத்தில் உலா வருவது.

Earworm: சில ட்யூன்கள் நம் மனதில் இடம் பிடித்து, நம் தலைக்குள்ளாக ரீங்காரம் செய்து கொண்டே இருக்கும். அதனை இச்சொல் குறிக்கிறது.

Nonversation: வெட்டி அரட்டை என்று நம் மக்கள் கூறுவார்கள் இல்லையா? அதனை இந்த சொல் குறிக்கிறது. இப்படி பல சொற்கள் இணைக்கப்பட்டுள்ளன

புதன், 18 ஆகஸ்ட், 2010

உலகில் பெருகி வரும் அகதிகளே இன்றைய பூகோள சிக்கல் - ஐ.நா

புதிதாக இலங்கையிலும் பாகிஸ்தானிலும் பெருகியுள்ள அகதிகளின் எண்ணிக்கை காரணமாக இவ்வருட மத்தியிலேயே உலகம் முழுதும் உள்ள மொத்த அகதிகளின் எண்ணிக்கை சென்ற வருடத்தை விட அதிகரிக்கும் வாய்ப்பு பெருகி விட்டது என்றும்




இதுவே முக்கிய பூகோள சிக்கலாகத் தற்போது உருவெடுத்துள்ளதாகவும் ஐ.நாவின் அகதிகள் முகவர் பிரிவு தெரிவித்துள்ளது.



அகதிகளுக்கான ஐ.நா இன் உயரதிகாரி அந்தோனியோ கட்டெரிஸ் செய்தி வெளியிடுகையில் இன்று சற்றும் தளர்வில்லாத உள்நாட்டு பிரச்சனைகள் மில்லியன் கணக்கான அகதிகளை உருவாக்கி வருவதைத் தான் நாம் கண்கூடாகப் பார்க்கிறோமே என்று கூறுகிறார்.



2008ம் ஆண்டு வீடிழந்த மக்களின் மொத்த எண்ணிக்கை 42 மில்லியன் எனவும் இது 2007ம் ஆண்டை விட 700,000 குறைவு என்றும் ஐ.நாவின் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுவரைக்கும் முறையான கணிப்பீடுகள் மேற்கொள்ளப்படாத 2009 ஆண்டின் கணக்கெடுப்பு இலங்கை,பாகிஸ்தான்,சோமாலியா ஆகிய நாடுகளில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களால் நிச்சயம் தலையெடுக்கும் என கட்டெரிஸ் தெரிவித்துள்ளார்.



2008ம் ஆண்டின் கணிப்பின் சில குறிப்புக்கள் -



வீடிழந்த மக்களின் எண்ணிக்கையில் (42 மில்லியன்) 15.2 மில்லியன் பேர் அகதிகள், 26 மில்லியன் பேர் உள்நாட்டில்



இடம்பெயர்ந்தவர்கள்,827 000 பேர் மனநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள்



மொத்த வீடிழந்தோர் எண்ணிக்கையில் (42 மில்லியன்) வீடு திரும்பியவர்கள் வெறும் 2 மில்லியன் மக்கள் (2007ஐ விட 1.4 மில்லியன்



குறைவு) - ஆகவே 2007 ஐ விட சென்ற வருடமே அதிக எண்ணிக்கை அகதிகள் எஞ்சியுள்ளனர்.



அகதிகள் எண்ணிக்கையில் 5 இல் 1 பங்கு வளர்ந்து வரும் நாடுகளுக்கு சொந்தம்



இவ்வெண்ணிக்கையில் 47 வீதம் பெண்களும் சிறுவர்களும் அடங்குவர்



ஸ்வாட் பள்ளத்தாக்கில் தலிபான்களுக்கு எதிரான யுத்தம் ஆரம்பிக்கவிருந்ததால் 2008 செப்டம்பரில் இருந்து இடம்பெயர ஆரம்பித்த மக்கள் தொகை காரணமாக பாகிஸ்தானே வளர்ச்சியுறும் நாடுகளில் அதிக எண்ணிக்கை அகதிகளைக் கொண்டிருந்தது. (1.8 மில்லியன்)



ஆப்கானிஸ்தானும் ஈராக்கும் மொத்த அகதிகள் எண்ணிக்கையில் அரைப்பங்கைக் கொண்டிருந்தன.



2009 ஆண்டு இதுவரை மேற் கொள்ளப்பட்ட உத்தியோகப் பற்றற்ற தகவல்கள் -



2004இல் சுனாமி ஏற்பட்டதிலிருந்து இன்று வரை உள்நாட்டு யுத்தம் காரணமாகவும் சிறிலங்காவில் இடம்பெயர்ந்தோர் 5 இலட்சத்திற்கும் அதிகம். இதில் ஐ.நா அறிக்கைப் படி 2009 இன் முதல் 3 மாதங்களில் மட்டும் இடம்பெயர்ந்த அகதிகள் எண்ணிக்கை 2 இலட்சத்திற்கும் அதிகம்.



பாகிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான யுத்தத்தால் தற்போது இடம்பெயர்ந்துள்ள மக்களின் மொத்த எண்ணிக்கை 30 இலட்சம்.



சோமாலியாவில் 17 வருடங்களுக்கு முன் உடைந்த மத்திய அரசாங்கத்தால் அங்கு இரு தலைமுறைகளாக அகதி முகாமிலேயே வசித்து வரும் மக்கள் தொகை தற்போது 13 இலட்சம். மேலும் 4 இலட்சம் சோமாலியர்கள் கென்யா யேமென் போன்ற அயல் நாடுகளில் உள்ளனர்.

காந்திய அரசியல் இயக்கம் மக்கள் இயக்கமாக மாற்றம்

தமிழருவி மணியன் தலைமையில் இயங்கி வரும் காந்திய அரசியல் இயக்கம், காந்திய மக்கள் இயக்கமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.




காந்திய மக்கள் இயக்கத்தின் துவக்க விழா திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.



இயக்கத்தின் தலைவராக தமிழருவி மணியனும், மாநில துணைத் தலைவர்களாக நாமக்கல் நரசிம்மன், ஓ.கே.எஸ்.கந்தசாமி, மாநில பொதுச் செயலராக வழக்கறிஞர் துறையூர் கணேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இப்புதிய இயக்கம் குறித்து தமிழருவி மணியன் செய்தியாளர்களிடம் கூறியது: சென்னையில் கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் 2ல் துவங்கப்பட்ட காந்திய அரசியல் இயக்கம் மதுரை, திருச்சி, நாமக்கல் மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டது.



இந்த இயக்கம் அரசியல் கட்சியைப்போல் தெரிவதால் காந்திய மக்கள் இயக்கம் எனப் பெயர் மாற்றம் செய்து திருப்பூரில் துவங்கப்பட்டுள்ளது.



தனிப்பட்ட எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ இந்த இயக்கம் செயல்படாது. மாறாக, ஊழல், ஆடம்பர அரசியல், அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படும். அரசியல் களத்துக்கு வெளியே நின்று அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியில் அமரும் கட்சியின் தவறுகளை விமர்சிப்பதும், அவற்றுக்கு எதிராக மக்களின் சக்தியை திரட்டுவதுமே இந்த இயக்கத்தின் நோக்கம். இந்த இயக்கத்தில் எந்த கட்சியைச் சேர்ந்தவர்களும் உறுப்பினராகலாம். ஆனால், எந்தக் கட்சியையும் சாராதவர்களே பொறுப்புக்கு வர முடியும்.



ஆனால், காந்தியின் கனவும், நேருவின் நோக்கமும் இன்றுவரை நிறைவேறவில்லை.அதிகாரப் பரவலும், கிராமம் சார்ந்த சிறு மற்றும் குடிசைத் தொழில், தற்சார்பு பொருளாதாரமுமே காந்தியின் லட்சியமாக இருந்தது.



ஆனால், காந்தியின் வாரிசுகளாக ஆட்சிக்கு வந்தோர் அதிகாரக் குவியல், பெருந்தொழில் உற்பத்தி என்ற தவறான பாதையில் நாட்டை திசை திருப்பியதால் இப்போது நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என்றார் அவர்.

ஓர் எச்சரிக்கை!

சிப்ஸ், பிஸ்கட், காபி மற்றும் பருப்பு வகைகளில் தயாரிக்கப்படும் நொறுக்குத் தீனிகள் சாப்பிட்டால் புற்று நோய் ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. நொறுக்குத் தீனி களில் இருக்கும் அக்ரிலமைடு என்னும் இரசாயனப் பொருளால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.




உலக சுகாதார நிறுவனமும் (W.H.ஓ), ஜ‌.நா.வின் உணவுத்துறை வல்லுநர்களும் இணைந்து, விலங்குகளை வைத்து நடத்திய ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கை’ வைத்தால் போதும் சார்ஜ் ஆகும் செல்பேசி

செல்போன்களில் வசதிக் குறைவாகத் தோன்றுவது பேட்டரியின் சார்ஜ் பிரச்சினைதான். மனம்விரும்பிய வசதிகள் நிறைய இருப்பதால் அதிகமான நேரம் செல்போனில் செலவழிக்கப்படுகின்றன. இதனால் அடிக்கடி சார்ஜ் தீர்ந்து போகும். பிறகு சார்ஜ் போட வேண்டும். சார்ஜ் இல்லாமல் சுவிட்ச்ஆப் ஆகிப்போனால் அந்த நேரத்தில் வரும் முக்கியமான அழைப்புகளையும் ஏற்க முடியாமல் சிரமப்பட நேரிடும்.




இதுமாதிரியான சிக்கலைத் தவிர்க்கவும், எளிமையான முறையில் சார்ஜ் செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த புதுமை மொபைல். இதில் சார்ஜ் தீர்ந்துபோனால் அதில் உள்ள துளையில் விரலை நுழைத்து செல்போனை சில சுற்றுகள் சுற்றினால் போதும் தற்காலிகமாக பேசும் அளவுக்கு சார்ஜ் ஆகும். உங்கள் வேகத்துக்கு ஏற்றபடி கூடுதல் அளவு சார்ஜும் செய்து கொள்ளலாம். பிறகு வழக்கமான முறையிலும் சார்ஜ் செய்ய முடியும். விரலை பயன்படுத்துவதை விரும்பாதவர்களுக்கு அதற்கென தனி குச்சி ஒன்று தரப்படும். அதில்வைத்து செல்போனை சுழற்றினாலும் சார்ஜ் ஆகும்.



வேகமாகப் பரவும் அதிநவீன மொபைல் இது. எண்களை அழுத்தாமலே, தொடுவதை உணர்ந்தே செயல்படுவதால் ஆறாம் அறிவுடைய மொபைல் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிக்ஸ்த் சென்ஸ் வசதியை நாம் பயன்படுத்த விரும்பினால் நமது உள்ளங்கையில் எண்கள் ஒளிவடிவில் விழும்படி செய்து கொள்ளலாம். பிறகு அந்த எண்களை தொடுவதன் மூலமே செல்போனை இயக்க முடியும். இந்த மாதிரி மொபைல்கள் விற்பனைக்கு வந்துவிட்டன.

குறட்டையை கட்டுப்படுத்த புதிய கருவி!

குறட்டையை கட்டுப்படுத்த புதிய கருவி ஒன்றை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். லண்டனை சேர்ந்த விஞ்ஞானிககள் தீப்பெட்டி அளவில் ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர். இதை தூங்குபவர் மார்பில் பொருத்தும் போது, இதன் செயல்பாடுகள் இதய தசைகளை இயங்க செய்கிறது

இலங்கையில் இணையதளங்களுக்கு தடை?

மொபைல் போன் மூலம் பார்க்கப்படும் ஆபாச இணைய‌தளங்களைத் தடை செய்ய கொழும்பு சிறுவர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.




இது தொடர்பாக மொபைல் போன் நிறுவனங்களுடன் பேசி தடை ஏற்படுத்த வேண்டுமென்று மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



பெற்றொர்களின் வேண்டுகோளை ஏற்று இந்த பிரச்சினைக்கு நீதிமன்றம் மூலமாக தீர்வு காணப்பட்டுள்ளது என மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு காவல் துறை தெரிவித்துள்ளது.



பாகிஸ்தனை தொடர்ந்து இலங்கையிலும் இணையதளங்களுக்கு தடை?



சென்ற வாரத்தில் 450 இணையதளங்களை பாகிஸ்தான் தடை செய்தது.இஸ்லாமிய விரோத கருத்துக்கள் அதில் இடம் பெற்றதாலேயே இத்தடை என சொல்லப்பட்டாலும், பாகிஸ்தான் நலனுக்கு ஏதிரான கருத்துக்களை அந்த தளங்களில் தரவிறக்கப்பட்டிருந்ததாவும் கருத்து நிலவுகிறது.



அதை போல் இலங்கையிலும், ”இலங்கையின் நலனை பாதிக்கும் வகையில் செயல்படும் இணையதளங்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாவும், அப்படிப்பட்ட இணையதளங்கள் கண்டறியப்பட்டு வருவதாவும் இந்த தடை நீதிமன்றம் மூலமோ அல்லது சம்மந்தப்பட்ட துறையிலிருந்தோ விரைவில் வரலாம்” என்று கொழும்பு ஊடகவியளாலர்கள் நான்கு நாட்களாகவே ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்தியாக சொல்லிவருகிறார்கள்.

கூகுள் அண்ட்ரோயிட்டைத் தாக்கும் புதிய ‘ட்ரொஜன்’

கூகுள் அண்ட்ரோயிட் மொபையில் எனப்படுவது கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளத்தின் மூலம் இயங்கும் கையடக்கத் தொலைபேசிகளாகும்.




இக்கையடக்கத் தொலைபேசிகளானது உலகம் பூராகவும் மிகவும் வேகமாக விற்பனையடைந்து வருவதும் போட்டியாளர்களை தனது வேகமான விற்பனை மூலம் அதிர்ச்சியடையச் செய்துவருவதும் நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.



இந்நிலையில் முதல் முறையாக அக் கையடக்கத் தொலைபேசிகளது ‘ட்ரொஜன்’ எனப்படும் தீங்கு நிரலினால் (மெல்வெயார்) தாக்கப்பட்டுள்ளதாக பிரபல மென்பொருள் பாதுகாப்பு நிறுவனமான கெஸ்பர்ஸ்கை அறிவித்துள்ளது.



இது ‘ட்ரொஜன்’- எஸ்எம்எஸ்.அண்ட்ரோயிட் ஒஸ்.பேக்பிளேயர் என்று பெயரிடப்பட்டுள்ளது.



மேற்படி ‘ட்ரொஜன்’ ஆனது மீடியாபிளேயர் மென்பொருள்போல தோற்றமளிக்கும் ஒரு தீங்கு நிரலாகும். குறுந்தகவல்கள் மூலம் பாவனையாளரின் கையடக்கதொலைபேசியை அடையும் மேற்படி தீங்கு நிரலானது 13 கெபி அளவினைக்கொண்டதாகும்.



பிறகு அதன் பாவனையாளர்கள் அதனை தமது கையடக்கதொலைபேசிகளில் நிறுவும் (இன்ஸ்டால்) படி அறிவுறுத்தப்படுவர்.



அவ்வாறு அதனை நிறுவியதும் பாவனையாளர்கள் அறியாத வண்ணம் இரகசியமாகக் குறிப்பிட்ட பாவனையாளரின் கையடக்கதொலைபேசியிலிருந்து பல்வேறு பாவனையாளர்களுக்கு அது குறுந்தகவல்களை அனுப்பத் தொடங்கும்.



அந்த ஒவ்வொறு குறுந்தகவல்களும் 5 டொலர்கள் வரை நட்டத்தினை ஏற்படுத்தக்கூடியதாகும்.



இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பெருந்தொகையை இழக்கநேரிடும். தற்போது இந்த ‘ட்ரொஜன்’ ரஸ்யாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



இதனால் இவ்வகை கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் அவதானமாக இருக்கவேண்டுமென கெஸ்பர்ஸ்கை நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் `பிளாக்பெர்ரி’ செல் போன்களுக்கு தடையில்லை

`பிளாக்பெர்ரி’ செல் போன்களில், தகவல் சேவை மூலம் பெறப்படும் மற்றும் அனுப்பப்படும் தகவல்கள், சங்கேத குறியீடுகளாக இருப்பதால், அவற்றை உளவுத்துறை இடைமறித்து படிக்க முடியவில்லை.




இது தீவிரவாதிகளுக்கு வசதியாக அமைந்துவிடும் என்பதால், இந்த தொழில் நுட்பத்தை மாற்ற ஆகஸ்டு 31ஆம் தேதி வரை, `பிளாக்பெர்ரி’ செல்போன்களை தயாரிக்கும் ரிசர்ச் இன் மோஷன் நிறுவனத்துக்கு மத்திய அரசு `கெடு’ விதித்திருந்தது. அப்படி மாற்றாவிட்டால், `பிளாக்பெர்ரி’ செல்போன்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது. இந்த நிலையில், செப்டம்பர் ஒன்றாம் தேதிக்குள், தகவல்களை உளவுத் துறை படிக்கும் வகை யில் தொழில் நுட் பத்தை ஓரளவு மாற்று வதாக ரிசர்ச் இன் மோஷன் நேற்று அறி வித்தது. இந்த ஆண்டு இறுதிக்குள் தொழில் நுட்பத்தை முற்றிலும் மாற்றுவதாக உறுதி அளித்துள்ளது.

Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

சில வேளைகளில் நம் நண்பர்களில் சிலர் Yahoo Messenger இல் Onling இல் இருந்தாலும் நமக்கு தெரியாதபடி appear offline (அதாவது Invisible) இல் இருப்பார்கள். அப்படிப்பட்ட Online இல் இருந்தும் Offline இல் இருப்பது போல நடிப்பவர்களைக் கண்டு பிடிப்பதற்கும் ஒரு வழி உண்டு.




முதலில் உங்கள் Yahoo Messenger அய் Open பண்ணி அதில் நீங்கள் யாரை Check பண்ணப் போகிறீர்களோ அவரின் பெயரை Double Click பண்ணவும். அதில் உள்ள IM Vironment தெரிவு செய்து அதில் See all IMVironments ,இல் Yhaoo! Tools அல்லது Interactive Fun அய் click பண்ணி Doodle அய் தெரிவு செய்யவும். அப்போது படத்தில் காட்டியவாறு “waiting for your friend to load Doodle” என்ற திரை தோன்றும்.



அதில் ஏதாவது type செய்து send பண்ணும் போது அந்த நபர் அந்த appear offline இல் இருந்தால் “waiting for your friend to load Doodle” என்ற எழுத்துக்கள் மறைந்து வெள்ளை நிற திரை தோன்றும். நிஜமாகவே அவர் இல்லையென்றால் அந்தத் திரை மாறாது அப்படியே இருக்கும்.



இதில் இருந்து அவர் Online இல் இருந்துகொண்டு Offline போல நடிக்கிறாரா அல்லது அவர் நிஜமாகவே இல்லையா என்பதைக் கண்டுபிடிக்கலாம்

புதிய இலவச தமிழ் அகராதி

தமிழர்களின் பயன்பாட்டிற்காக இணையத்தில் இலவச தமிழ் அகராதியை அண்ணா பல்கலைக்கழகம் துவக்கியுள்ளது.




அண்ணா பல்கலைக்கழக ஆசிரியரும், மதன் கார்க்கி (கவிஞர் வைரமுத்துவின் மகன்), ஆசிரியர்கள் கீதா, ஷோபா, ரஞ்சனி ஆகியோரும் சேர்ந்து இணையதளத்தில் இலவச தமிழ் அகராதியை உருவாக்கியுள்ளனர். இதன் முகவரி www.agaraadhi.com



ஏற்கனவே, இணையதளத்தில் பல தமிழ் அகராதிகள் இருக்கின்றன. ஆனால், அவை அளித்திடாத 20 சேவைகளை இந்த புதிய அகராதி அளிக்கிறது. தமிழ்ச் சொல் உருவாக்கம், பிழைத்திருத்தம், மாற்றுச் சொற்கள், சொற்கள் பயன்பாடு, தொடர் சொற்கள், திருக்குறள் பயன்பாடு, பாரதியார் மற்றும் ஔவையார் பாடல்களில் உள்ள சொற்களின் பயன்பாடு உள்ளிட்ட பல பயன்பாடுகள் இதில் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதாக பயன்படுத்தும் வகையில் இந்த அகராதி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



சில சொற்களுக்குப் பொருத்தமான தமிழ்த் திரைப்படப் பாடல்களின் வரிகளையும் இதனுடன் இணைத்துள்ளது வித்தியாசமாக உள்ளது.

ஒன்ரூஃப் நிறுவனத்தின் புதிய சாஃப்ட்வேர் அறிமுகம்

அமெரிக்காவின் சான்ஃபிரான்ஸிஸ்கோ நகரில் செயல்படும் ஒன்ரூஃப் சாஃப்ட்வேர் நிறுவனம் “சைபர்கேஃபுரோ 6.0′ என்ற பெயரிலான புதிய சாஃப்ட்வேரை அறிமுகப்படுத்தியுள்ளது. இணையதளம் சார்ந்த இந்த சாஃப்ட்வேர் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியது.




சேவை மையங்கள், டெலி சென்டர்கள், நூலகம், பள்ளி, கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம். மையங்களை செயல்படுத்துவது, வருமானம் கணக்கிடுவது, இணையதளத்தில் நகல் எடுப்பது போன்ற தகவல்கள், ஊழியர்கள் பற்றிய தகவல்களை பதிவு செய்வது, விற்பனை மற்றும் பில் போடுவது, கணக்கெடுப்பு உள்ளிட்ட பல பணிகளுக்கும் இந்த சாஃப்ட்வேரைப் பயன்படுத்த முடியும்.



http://www.oneroof.com இணையதளம் மூலமான இந்த சாஃப்ட்வேரை சோதனை அடிப்படையில் பயன்படுத்திப் பார்ப்பதற்கான வசதியையும் இந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் இப்புதிய சாஃப்ட்வேரை ஒரு மாதத்திற்கு இலவசமாகப் பயன்படுத்திப் பார்க்கலாம்

இந்தியா, சீனாவை முந்துவதற்கு கூடுதல் பட்டதாரிகள் தேவை : ஒபாமா

இந்தியா, சீனா ஆகிய நாடுகளை முந்துவதற்கும், உலக அளவிலான போட்டியில் சிறப்பிடம் பெறவும் அமெரிக்காவில் மேலும் அதிக எண்ணிக்கையிலான பட்டதாரிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.




இதுகுறித்து ஆஸ்டினில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரியாரையாற்றி அவர், “பீஜீங்கில் முதல் பெங்களூரில் தொடங்கி சியோல் முதல் சாவ் பவ்லோ வரை தொழில்களில் புதிய தொழில்நுட்பமும், புத்தாக்கங்களும் புகுத்தப்படுகின்றன. நமது போட்டி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது,” என்றார்.



அமெரிக்க பொருளாதாரத்தை தொடர்ந்து உயர்த்த வேண்டும் என்ற அவர், “மூன்று சொற்கள் கொண்ட வாக்கியத்தை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படவேண்டும். “மேட் இன் அமெரிக்கா”.. இதுவே அந்த மந்திரச் சொல்.



நாம் இரண்டாவது இடத்தைப் பெறுவதற்காக ஆடுகளத்தில் இல்லை. நாம் யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா… நாம் முதலிடத்தில் தான் இருக்க வேண்டும்.



2020 ஆம் ஆண்டுக்குள் மேலும் 80 லட்சம் கல்லூரி பட்டதாரிகளை உருவாக்க வேண்டும் என உறுதிபூண்டுள்ளேன். ஏனெனில், நம் போட்டி நாடுகளுடன் ஒப்பிடும்போது, அதிக எண்ணிக்கையிலான பட்டதாரிகள் தேவைப்படுகிறார்கள்,” என்றார் ஒபாமா.



மேலும், ஒரே தலைமுறையில் கல்லூரிப் பட்டதாரிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து 12-வது இடத்துக்கு அமெரிக்கா தள்ளப்பட்டதையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.



இந்தியா,சீனாவுக்கு இனி அவுட்சோர்ஸிங் பணி இல்லை…



முன்னதாக, டெக்சாஸ் மாகாணத்தில் தனது கட்சிக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று பே‌சிய அவர், “அமெரிக்காவிலும் வேலையில்லாத் திண்டாட்டம் முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. இதனை எதிர்கொள்வது அரசுக்கு பெரும் சவாலாகவே உள்ளது.



எனினும், இப்பிரச்னைக்கு தீர்வுகாண அரசு உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது. அமெரிக்காவில் இருந்து பெரும்பாலான பணிகள் இந்தியா, சீனா, ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்குப் பணிகள் ஒப்படைக்கப்படாது. இதில் அரசு உறுதியாக உள்ளது.



அத்துடன், புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. நான் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தினேன். நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்தக் கொள்கை வகுக்கப்பட்டது.



ஆயினும், நாட்டில் ஏற்பட்ட எதிர்பாராத பொருளாதார நெருக்கடியால் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளதை நன்கு அறிவேன். இது தாற்காலிகமானதே. இதில் இருந்து விடுபட அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது,” என்றார் ஒபாமா.



இன்றைய உலகில்(இணையத்தில் படித்தது)

கல்வி விழிப்புணர்வு ஏற்படவேண்டும் என்பதற்காக இந்த கட்டுரை மீண்டும் பதியப்படுகிறது




இக்கட்டுரையை படிக்க இருக்கும் சகோதர, சகோதரிகளுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் மற்றும் இளையவர்கத்தினருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.



நமதூரில் 90% சதவிகிதத்திற்கும் மேல் அனைத்து தரப்பு மக்களும் அவர்கள் எழையாக இருக்கட்டும், நடுத்தர வர்க்கமாக இருக்கட்டும் அல்லது வசதிபடைத்தவர்களாக இருக்கட்டும் நாம் யாவரும் ஒன்றில் மட்டும் பாகுபாடு இல்லாமல் ஒன்றுபட்டுள்ளோம். அது என்னவெனில் நம் பிள்ளைகள் நன்கு படித்து இருந்தாலும், அரைகுறையாக அல்லது முற்றிலும் படிக்காதவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. அவர்களை எப்படியாவது கடன், உடன் வாங்கியாவது அயல் நாட்டிற்கு அது எந்த நாடாக இருந்தாலும் சரி எப்படியாவது முயற்சி செய்து அவர்களை அனுப்பி வைத்து குடும்பத்தின் அனைத்து சுமைகளையும், பொறுப்புகளையும் அவர்கள் தலையில் கட்டிவிடுவதில் தான். காலமெல்லாம் நாம் இப்படி சரிவர படிக்காமல் அயல் நாட்டிற்கு வந்து சாதாரன உழைப்பாளிகளாய், கூலித்தொழிலாளிகளாய், ஹோட்டல்களில் சர்வர்களாய், சித்தாள், கொத்தனார் வேலைகளெல்லாம் பார்த்தது போதும் இனியாவது நம் இளைய தலைமுறையினருக்கு முறையான கல்வி புகட்டுவதில் நாம் ஆர்வம் செலுத்த கடமைப் பட்டுள்ளோம்.



இக்காலத்தில் ஆங்கிலக் கல்வி என்பது அனைவருக்கும் வயது வித்தியாசமில்லாமல், பணக்கார எழை என்ற பாகுபாடு இல்லாமல் நம் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இதில் நாம் அலட்சியம் காட்டுவதால் எவ்வித பலனும் கிடைக்கப்போவதில்லை நஷ்டத்தை தவிர. ஆங்கிலக் கல்வி அதிகம் படிப்பதற்கு நம் மார்க்கம் எவ்விதத்திலும் தடையாக இருக்கவில்லை. மார்க்கக் கல்வியுடன் ஆங்கிலப் புலமை இருப்பதால் டாக்டர் ஜாக்கிர் நாயக் போன்றோர்களெல்லாம் எப்படி தன் திறமையின் மூலம் இஸ்லாத்தை இந்தியாவிற்குள் மட்டுமல்ல உலகத்திற்கே எத்திவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.



ஒரு காலத்திலெல்லாம் வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்ட பத்தாம் வகுப்பு வரை படித்திருந்தால் போதும் என்றார்கள், பிறகு பன்னிரண்டாம் வகுப்பு வரை அவசியம் என்றார்கள். அதுவே இன்று குறைந்தது ஒரு முதுகலைப் பட்டமாவது ஒவ்வொருவருக்கும் அவசியம் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது காலத்தின் கட்டாயத்தால். ஆங்கிலத்தின் அத்தியாவசியத்தை நம் இளைஞர்கள், குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகள் சென்று வந்த, இன்னும் இருந்து வேலை செய்து கொண்டிருப்பவர்களைக் கேட்டால் மிகவும் விளங்கும்.



ஆஸ்திரேலியா, அமெரிக்க நாடுகளை விடுங்கள். குறிப்பாக தமிழகத்தின் தலைநகராம் சென்னையிலேயே ஒரு தொழிலை தொடங்கினாலோ அல்லது ஒரு நிறுவனத்திற்கு பணிக்குச் சென்றாலோ ஆங்கில அறிவு இல்லையேல் மிகவும் அதாவது சொல்லயியலாத்துயரத்தை சந்திக்க நேரிடுகிறது. காலச் சூழ்நிலையால் நம் குழந்தைகளை சென்னையில் உள்ள பள்ளியில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டால் பள்ளியில் சேர இருக்கும் குழந்தைக்கு முன் அதன் பெற்றோர்களுக்குத்தான் ஆங்கில அறிவு பரிசோதனை பள்ளி நிர்வாகத்தால் நடத்தப் படுகிறது. (இது என் அனுபவத்தில் இருந்து எழுதுகிறேன்.)



ஒருவன் தன் மனைவி மக்களுடன் அயல்நாட்டில் சந்தோசமாக பொழுதைக் கழிக்கிறான் என்பதை பார்த்து நமக்கெல்லாம் முதலில் பொறாமைதான் வருகிறது. அந்த நிலைக்கு அவனைக் கொண்டு வந்தது எது? என நாம் சிந்திக்க மறந்து விடுகிறோம். நிச்சயம் அது அவன் படித்த முறையான கல்வியாகத்தான் இருக்க முடியும். அதுவும் குறிப்பாக அவன் பயின்ற ஆங்கிலக் கல்வியாகத்தான் அது இருக்கும்.



உலகில் இன்று சாதாரன மனிதர்களெல்லாம் தங்களின் சாதனைகளாலும், தன்னிகரில்லாத்திறமையாலும் புகழின் உச்சிக்கே செல்வதற்கெல்லாம் அடிப்படை பக்கபலமாக அவர்களுக்கு இருந்து கை கொடுப்பது நிச்சயம் அவர்கள் பெற்றிருக்கும் ஆங்கில மொழி அறிவு தான்.



நம் சமுதாய மக்களுக்கு உலக வாழ்க்கையும் (இம்மை) இல்லை; மறு உலக வாழ்க்கையும் (மறுமை) இல்லை என்ற சூழ்நிலை எக்காலத்திலும் ஏற்பட்டுவிடக் கூடாது.



உதாரணத்திற்காக இங்கு ஒன்று கூற விரும்புகிறேன். ஆங்கிலம் பேசும் நாட்டில் வேலை செய்யும் நமதூரைச் சேர்ந்த ஒருவன் சூழ்நிலையால் நம் மக்களிடமிருந்து தனிமைப் படுத்தப் படுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு இரவிலோ அல்லது பகலிலோ ஏற்படும் பிரச்சினைகள், விபத்துக்கள் அல்லது ஏதேனும் விபரீதங்கள் பற்றி அவன் தன் முதலாளியிடமோ அல்லது கூட பணியாற்றும் சக ஊழியனிடமோ எப்படி? எந்த மொழியில் அவன் முறையிடுவான்? ஆங்கில மொழி அறிவு இல்லாததால் அவன் உயிருக்கே ஆபத்து வரலாம். அந்த சூழ்நிலையில் அவன் அங்கு தன் வாய் இருந்தும் ஊமையனாய், இரு கண் இருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய் தான் இருக்க முடியும் ஆங்கில மொழி அறிவு இல்லாததால் இந்த அவல நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம்.



ஒரு சமயம் சென்னையில் படித்து வருட விடுமுறையில் நம்மூருக்கு வரும் பணக்காரர்களின் பிள்ளைகள் மட்டும் சரளமாக ஒருவருக்கொருவர் ஆங்கிலத்தில் உரையாடிக்கொள்வார்கள். அதை பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்ப்பது போல் நான் சிறுவனாக இருக்கும் பொழுது பார்த்திருக்கிறேன்.



என்னடா எங்கு பார்த்தாலும் ஆங்கிலம், ஆங்கிலம் என்கிறார்களே??? ஆங்கிலம் அதிகம் படித்தவனெல்லாம் பெரிய டாட்டா, பிர்லா போன்றும், லட்சுமி மிட்டல் அல்லது முகேஷ் அம்பானி போன்றும் பெரிய,பெரிய தொழில் அதிபர்களாகி இந்தியாவின் தலையெழுத்தையா மாற்றப் போகிறார்கள்??? என்று பலர் கேட்பது காதில் விழுகிறது. ஆங்கிலம் அதிகம் கற்றுக் கொள்வதால் நாம் அவர்களைப் போல் ஆகா விட்டாலும், குறைந்தது நம் குடும்ப வாழ்க்கைச் சக்கரமாவது சிக்குண்டு நின்றுவிடாமல் தடையின்றி தொடர்ந்து ஓடிட உதவிடும் அல்லவா?? இன்று ஆங்கில மொழி அறிவை வளர்க்க பல்வேறு வழிகளில் மற்றும் முறைகளில் எளிய பாடத்திட்டங்களின் மூலம், கம்ப்யூட்டர் மூலம், கைப் புத்தகங்களின் மூலம் பல இடங்களில் பயிற்று விக்கப் பட்டு வருகின்றன. அதில் ஏதாவது ஒரு எளிய முறையைக் கடைப் பிடித்து நாம் நம் ஆங்கில அறிவை வளர்ப்போம்.



எனவே நம் ஆங்கில கல்வி அறிவை வளர்க்கும் ஒரு பகுதியாக நமதூர் மக்களின் (உள்ளங்களின்) இணைப்புப் பாலமாய் விளங்கும் இந்த அதிரை எக்ஸ்பிரஸ் இணைய தளத்தின் மூலம் துபாயில் பணிபுரிந்து வரும் நமதூர் சகோதரர். அப்துல் ராஜிக் அவர்கள் நம் மக்களுக்கு எளிய முறையில் தமிழ் வழி ஆங்கிலக் கல்வியை இப்பகுதியில் படிப்படியே வழங்க ஆர்வமுடன் முன் வந்துள்ளார்கள். அவர்களின் ஆலோசனைப் படி அதிரை எக்ஸ்பிரஸ் அதற்கு முயற்சி எடுத்து இப்பகுதியில் சிறுக, சிறுக வழங்கினால் அது படிக்கும் நம் அனைவருக்கும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். ஆங்கில மொழி அறிவை வளர்க்க மேலே சொல்லப் பட்டக் கருத்துக்களும், உதாரணங்களும் இதைப் படிக்கும் உங்களுக்கு மட்டுமல்ல இதை எழுதிய எனக்கும் சேர்த்துத்தான் எழுதியுள்ளேன்.



எனவே தராசின் இரு தட்டுக்களைப் போல் மார்க்க மற்றும் ஆங்கில மொழி அறிவை வளர்த்து நாம் இம்மையிலும், மறுமையிலும் எல்லா வளங்களும் பெற்று செழிப்புடன் வாழ வல்ல இறைவனைப் பிராத்தித்து என் கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.

ஒற்றை நிலா யாருக்குச் சொந்தம்?

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் "உலகம்" இன்று ஒரு "குளோபல் வில்லேஜ் "உலகின் எங்கோ ஒரு மூலையில் ஏதோ நடக்கிறது ...நாம் இங்கே பாதுகாப்பாகத் தான் இருக்கிறோம் ,என்ற உணர்வு சாகடிக்கப் பட்டு நெடு நாட்கள் ஆகின்றன.எங்கே எது நடந்தாலும் அது மற்றவர்களை பாதிக்கவே செய்கிறது .வாழ்வின் மேடு பள்ளங்களை...அபாயக் குழிகளை ...தடுக்கி விழச் செய்யும் சமத்கார சூழ்ச்சிகளை ...ஸ்திரத் தன்மை நீடிக்காத மிக மிக லேசான "ம்" என்றால் உடைபடும் உறவுக்கோளங்களை முன்னெப்போதையும் விட இந்த நூற்றாண்டில் மனித இனம் மிக அருகாமையில் பல முறை தரிசிக்க வேண்டிய ஒரு சூழல் இன்று நிலவுவதென்னவோ வாஸ்தவமே!




அங்கே அமெரிக்காவில் என்ன நடந்தாலும் இங்கே இந்தியப் பொருளாதாரம் பாதிக்கிறது ,இலங்கையில் தமிழன் சித்திரவதை செய்யப் பட்டால் இங்கே"முத்துக் குமரன்கள் " தீக்குளிக்கிறார்கள். அதனால் தமிழர்கள் இலங்கையில் சுகப்பட்டார்களா ? என்றால் அது தான் இல்லை?! என்றும் போல் சுடப்பட்டுக் கொண்டே தான் சிதறிக் கொண்டிருக்கிறார்கள்.



சர்வ தேச அளவில் கவனம் கலைக்கவே தனது மரணம் என்று முத்துக் குமரன் எண்ணியிருந்தால் அவருக்காக வருந்துவதில் தவறே இல்லை.நிச்சயமாக உன் மரணத்திற்கு வேறு முலாம் பூசிப் பார்க்க இங்கே மட்டும் அல்ல எங்கேயும் மனிதர்கள் இருக்கிறார்கள் .உன் வீரமரணம் சீக்கிரமே வலுவிழந்து புறக்கணிக்கப் படலாம், எதுவும் இங்கே நிலைத்த ஆதரவைப் பெறுவதில்லை.காந்தியைக் கொன்ற கோட்சேவின் செயலுக்கும் நீதி தேடிய உலகம் இது!



ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவனது செயல்பாட்டில் அது சரியோ தவறோ நிச்சயம் ஒரு நியாயம் கண்டுபிடிக்கப் பட்டிருக்கும் .கோணங்கள் இங்கே பல் கோணங்களாகி பல்கிப் பெருகி மூச்சு திணறச் செய்கின்றன பல வேளைகளில் !ஒவ்வொருவருக்கும் ஒரு கோணம் கடைசியில் வெற்று கூச்சல்கள் ...கலவரங்கள்...போராட்டங்கள்...போர்.இன்று இந்தியா ஒரு வன்முறை பூமியாக மற்றப் பட்டுக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் வேர் விடத் துவங்கி விட்டது.



இலங்கையைப் போல இந்தியா "யுத்த பூமி ஆக வேண்டாம் .அமெரிக்காவைப் போல அல்ட்ரா மாடர்ன் ஆக வேண்டாம் .வளைகுடாக்களைப் போல தீப்பிடித்து எரிய வேண்டாம் ..சீனாவைப் போல மலிவு விலை சாம்ராஜ்ய ஏகபோகத்தில் திளைக்க வேண்டாம் .உலகில் எந்த நாட்டைப் போலவும் இந்தியா ஆக வேண்டிய அவஷியமும் இல்லை. இந்தியா இந்தியாவாகவே இருக்கட்டும்.



வல்ல பாய் படேல் பாடு பட்டு இரும்பு மனம் கொண்டு ஒன்றிணைத்த இந்தியா அப்படியே இருப்பதில் எந்த வித கெடுதலும் இருப்பதாகத் தெரியவில்லை.திபெத்தை தனதாக்கிக் கொண்ட சீனா இன்று அஸ்ஸாமை திபெத்தின் ஒரு பகுதி என்று கூறி இந்தியப் எல்லையை சுருக்க தன் மூளையில் குறுக்கு வழி தேடிக் கொண்டிருக்கிறதாம்.



பாகிஸ்தானுக்கோ "காஷ்மீரின் " மீது தீராத முரட்டுக் காதல்.ஆந்திராவில் தனித் தெலுங்கான கேட்டு போராட்டம்,இங்கே நினைவு கூறப் பட வேண்டிய விசயங்களில் மற்றுமொன்று உண்டு. திராவிட நாடு கோரிக்கையை " முன் வைத்துப் பிரபலமான திராவிடக் கட்சிகளின் கட்டுப் பாட்டில் தான் தமிழக அரசியல் இன்றும் சிக்கி நிற்கிறது.



அணைந்த கொள்ளி என்று ஆசுவாசம் தேவை இல்லை.கொள்ளிகள் கொழுத்தப் படலாம் ஆட்சி மாறி அதிகாரம் மாறும் ஒரே நாளில் ! கர்நாடகாவில் எதற்கெடுத்தாலும் தமிழர்களே பலியாடுகள்! எதற்காகவும் அவர்கள் தமிழர்களை துன்புறுத்த தயங்கியதே இல்லை...தண்ணீரிலிருந்து தரமான நடிகனின் தள்ளாத வயது சாவு வரை அவன் தட்டி...முட்டி அடக்குவது தங்கத் தமிழனையே.கர்நாடகாவில் வேறு மாநிலத்தவர் எவருமே இல்லையா?



இங்கே கேரளம் மட்டும் சும்மா இருந்து விட்டால் சுவாரஷ்யத்திற்கு பஞ்சமாகி விடாதோ?! அவர்கள் பங்கிற்கு "பெரியார் டேம் ...தமிழக ஆறுகளின் மணல் திருட்டுக்கு உடந்தை...இப்படி எதையோ அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.மகாராஷ்ட்ரா (மும்பை) பத்திரிகைகள் சித்தரிக்கும் மும்பை என் போன்ற நடுநிலை வாசிப்பாளர்களுக்கு "தாதாக்களின் உலகம் " என்ற பயங்கரக் கற்பனையையும் அதீதமான அச்சதையுமே உருவாக்கி இருக்கிறது இந்நாள் வரையிலும். அங்கே திரைத்துறையில் இருந்து ...வியாபர காந்தங்கள் வரையில் தாதாக்களுடன் சம்பந்தப் படுத்தியே பார்க்கப் படுகிறார்கள்.



அங்கே நிலைமை இப்படி என்றால் "காந்தி பிறந்த மண்ணிலோ " இந்துத்வா வெறி தலை வெறித்து ஆடுகிறது .யார் எதைப் பின்பற்றினால் யாருக்கென்ன ?



இந்து ...முஸ்லீம்...கிறிஸ்த்தவர்கள் ...ஜெயின்கள்...பார்சிகள்...பௌத்தர்கள் மாதங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டுமே "எல்லோரும் மனிதர்கள் தானே" மதங்கள் வெறும் சட்டைகள் என்று படித்த ஞாபகம் வருகிறது.சட்டைகளை மாற்றிக் கொள்ளா விட்டாலும் பரவாயில்லை ஒன்றும் கெட்டு விடப் போவதில்லை. இங்கே சட்டைகளுக்காக தோலை அல்லவா உரித்துக் கொண்டு உயிரோடு சாகத் துணிந்து விட்டார்கள்.



இருத்தலுக்காக இல்லாது போகத் துணியும் அசகாய சூரத் தனம் எங்கே கற்றார்களோ?! "எல்லாம் மூளைச் சலவை " "வேற்றுமையில் ஒற்றுமை " சொல்லக் கூசுகிறது தான். நாம் ஒற்றுமையாகத் தான் இருக்கிறோமா? ஏதோ இருக்கிறோம் என்று விட்டேற்றியாக சொல்லிக் கொண்டால் நலம்."நான்கு பசுக்களும் ஒரு சிங்கமும் "கதையைப் போல ""இந்தியாவை யாரும் துண்டாடி விடாமல் பாதுகாக்க என்ன செய்கிறது நடுவண் அரசு மற்றும் உள்ள 27 மாநில அரசுகள்?



மாநில அரசுகள் தங்களுக்குள் உள்ள வேலிச்சண்டைகளை தீர்க்க முன் வராவிட்டால் நடுவண் அரசு வெளிச்சண்டைகளில் எப்படி கவனம் செலுத்த முடியும்? இங்கே நாம் காவிரிக்காக சண்டை போட்டுக் கொள்ளும் போது அங்கே சீனாக் காரன் அஸ்ஸாமை லவட்டிக் கொண்டு போய் விட்டால் பிறகு அதற்க்கு இன்னொரு பொது சண்டை போட்டுக் கொள்வோம் இராணுவம், எல்லைப் பாதுகாப்பு என்ற பெயரில் .



சுதந்திரம் என்ற பெயரில் "எல்லைக்கோடுகளில் அடைபட்டுக் கொண்டதென்னவோ" அதிகபட்ச புத்திசாலித் தனம் தான். "இது தான் சுதந்திரமா ?கேள்வி எழுப்புபவர் யாராயினும் "ஆமாம் ...இதுவே கட்டுப் பாட்டில் சுதந்திரம்...பாதுகாப்புக்கு முழு உத்திரவாதம் " என்று பட்டென்று பதில் சொல்லி வாயடைக்கலாம்.இப்படி கோடுகளில் அடைபட்டேனும் நிம்மதியாக வாழ விதித்திருக்கிறதே சில காலம் ! அதையும் கெடுத்துக் கொள்வதைப் போல அல்லவா இப்போது காரியங்கள் நிகழ்கின்றன...நிகழ்த்தப் பட்டுக் கொண்டு இருக்கின்றன.



"உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா" ரேஞ்சுக்கு தரம் தாழ்ந்து விடத்தான் போகிறோமா ஒருநாள்? இல்லாவிட்டால் அமெரிக்க அண்ணனைப் போல "வல்லரசாகி" தம்மினும் எளியாரை வாட்டி வதைக்கப் போகிறோமா?



மலேசியா மற்றும் தாய்லாந்தின் குப்பைக் கிடங்காக இருந்த சிங்கப்பூர் இன்று உலகின் மிகச் சுத்தமான நாடு .



மண் வளமே சிறிதும் அற்ற இஸ்ரேல் விவசாயத்தில் பல படி முறைகளை முயற்சித்து தனக்கான தன்னிறைவைப் பெற்று விட்டதென பத்திரிகைகள் பறை சாற்றுகின்றன.



நிலாவில் வீடு கட்ட மனை வாங்கி போட்டுக்கிறேன் என்று ஒரு ஆந்திர தொழிலதிபர் பெருமை அடித்துக் கொள்கிறார்.



நிலா (சந்திரன்) யாருக்குச் சொந்தம் என்ற சண்டையும் விரைவில் வரக் கூடும்! ஏனெனில் பூமிக்கு ஒரே ஒரு துணைக்கோள் தான் . வியாழனைப் போல 12 நிலாக்கள் இருப்பினும் சர்ச்சை எழும்பத்தான் செய்யும்.இந்த உலகத்தில் தான் ஆசியா...ஆப்பிரிக்கா,ஐரோப்பா,அமேரிக்கா,அட்லாண்டிக் என்று ஐந்து கண்டங்களும்.கண்டங்களில் பலபல தேசங்களும் விரவிச் சிதறி நிற்கின்றனவே!



ஒற்றை நிலா யாருக்குச் சொந்தம்? அடடா...இந்த மானிட சமுதாயம் சர்ச்சைகளில் இருந்தும் சண்டைகளில் இருந்தும் ...விடுபட்டு கடைத்தேற நிஜத்தில் ஒரு வழியும் இல்லை போலத் தான் தெரிகிறது .



தொடரும்... (நிச்சயம் தொடரும்..)

தமிழ்நாடு அரசு சுற்றுலா துறை

உலக மொழியில் அமைந்த எழுத்துக்கள்

அசோக மித்திரன் சமீபத்தில் அவுட் லுக் இதழில் விக்ரம் சேத் எழுதிய "இரு வாழ்க்கைகள்" ( Two Lives ) புத்தகத்தை மதிப்புரை செய்திருந்தார். அதில் விக்ரம் சேத்தின் எழுத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது அவரது எழுத்து வாசகரின் கண்ணைக் கூசச் செய்வதில்லை என்று சொல்லுகிறார். அசோக மித்திரனின் எழுத்துக்கும் இக் கூற்று நிச்சயம் பொருந்தும். அவரது கட்டுரைகளின் தொகுதி (இரு தொகுதிகள்) 1700 பக்கங்களுக்கு மேற்பட்டது. அவற்றைப் படிக்கும் போது ஒரு தடவையாவது கறுப்புக் கண்ணாடியைத் தேட வேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை. தமிழ் இலக்கிய உலகின் முக்கிய இரு ஆளுமைகளில் ஒருவரான சுந்தர ராமசாமி மற்றொருவரான அசோகமித்திரனைப் பற்றிக் குறிப்பிடும்போது அவரது படைப்புகளில் வன்முறைகளின் சாதனங்களே இருக்காது, அதிக பட்சம் அரிவாள்மணை இருக்கும் அவ்வளவுதான், என்றார்.




அசோகமித்திரனின் கட்டுரைகள் உலகம் தழுவியவை. பல அரசும் சமூகமும் வாழ்க்கையும் அன்றாடம் நடத்தும் வன்முறைகளைப் பற்றிய கூரிய பார்வை கொண்டவை. அவரது கட்டுரைகளில் இவ் வன்முறைகளுக்கு எதிர்மறையாக கோபமோ, எரிச்சலோ, உலகை ஒரு கை பார்த்து விடுகிறேன் என்ற உத்வேகமோ தென்படுவதில்லை. ஆனால் இதுதான் நடந்தது என்று அவர் சொல்லும் போதே நடந்ததின் தாக்கம் நம் மீது நம்மையே அறியாமல் குளிர் காலத்தில் கவியும் பனி போல கவிந்து விடுகிறது. இத்தகைய எழுத்து உலகை ஓர் அரிய சமன்பாடுடனும், சிறிதே எள்ளலுடனும் பார்க்கும் அபூர்வமான, தேர்ந்த படைப்பாளிகளுக்கே சாத்தியம். அத்தகைய படைப்பாளியாக அசோக மித்திரன் அமைந்திருப்பது தமிழ் பெற்ற பேறு.



அவர் புற உலகை தனி மனிதனாகப் பார்க்கிறார். அந்த உலகின் எண்ணற்ற, பெயரற்ற, நாளும் நசுங்கும் மனிதர்களில் அவரும் ஒருவர். பார்வை, மிகச் சில தருணங்களைத் தவிர, பருந்துப் பார்வை அல்ல. தினமும் தெருவில் சைக்கிளில் செல்பவர் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அமைதியாக பதட்டம் இல்லாமல் பார்த்து அவற்றைப் பற்றி எழுதினால் எப்படி இருக்குமோ அப்படித் தோற்றம் அளிக்கின்றன அவரது பெரும்பாலான கட்டுரைகள். ச்¢று நடப்புகளும், சிறு வெற்றிகளும், சிறு இழப்புகளும்தான் மனிதனை இயங்கச் செய்கின்றன, வாழ்வோடு ஒன்றச் செய்கின்றன என்பவற்றை மறுபடியும் மறுபடியும் சொல்லும் கட்டுரைகள் அவை. சைக்கிள் மனிதர் உலகைச் சில சமயம் தான் வேலை செய்யும் அலுவலக ஜன்னலிலிருந்து பார்க்கிறார். சில சமயம் பூங்கா பெஞ்சிலிருந்து பார்க்கிறார். அவர் பொது நூலகத்திலிருந்து எடுத்துப் படித்த புத்தகங்களைப் பற்றி பேசி விட்டு அவை உலகை எவ்வாறு பார்க்கின்றன என்பதைப் பற்றி நமக்குச் சொல்கிறார். அவருக்கு சென்னையை விட்டு வெளியே செல்லத் தயக்கம். சென்றாலும் உடனே திரும்பி வருவதற்கு விருப்பம். இப்படி முழுக்க முழுக்க சென்னைக்கு வந்து சிவமாகி, சிவமானதுடன் சமரசம் செய்து கொண்டவராக சைக்கிள் மனிதர் தோன்றுகிறார். இந்தத் தோற்றம் ஒரு தேர்ந்த வாசகனை ஏமாற்றி விடாது. அவன் படிக்கும் போதே சைக்கிள் மனிதரின் விசாலமான படிப்பையும் கட்டுரைகளின் பரப்பையும் அவை அவனை கேட்கும் கேள்விகளையும், அவனை கேட்க வைக்கும் கேள்விகளையும், எல்லாவற்றிற்கும் மேலாக இக் கேள்விகளுக்கு ஒற்றைப் பதில் கிடையாது என்பதையும், உடனே உணர்ந்து அறிந்து வ்¢டுவான். எப்படி வாழ்ந்தாலும் எங்கே வாழ்ந்தாலும் மனிதன் தன் சூழலை மீறி உலக மொழியில் பேச முடியும் என்பதற்கு இந்த எழுத்து எடுத்துக் காட்டு என்பதை உணர்ந்து விடுவான்.



இக் கட்டுரைகள் மிக நேர்த்தியாக அச்சடிக்கப் பட்டிருக்கின்றன. ஒரு படைப்பாளியின் தீவிர வாசகரே அவரது பதிப்பாளராக அமைந்தது நமக்கு நல்லதாகி விட்டது. முதற் தொகுதி அவரது அனுபவங்களையும், அபிப்ராயங்களையும் சொல்லும் கட்டுரைகள் அடங்கியது. இரண்டாம் தொகுதி அவர் எழுத்தாளர்கள், புத்தகங்கள் , நுண்கலைகள் பற்றி எழுதிய கட்டுரைகள் அடங்கியது. கவனம் இல்லாமல் இப்புத்தகங்களைத் தூக்கினால் மணிக்கட்டு சுளுக்கிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது.



அசோக மித்திரனின் சொற்கள் கடுகைத் துளைத்து கடலைப் புகட்டி குறுகத் தரித்த சொற்கள். தன்னுடைய அயோவா அனுபவத்தைப் பற்றி அவர் சொல்வதில் சில வரிகள்: எங்கள் குழுவில் பெண்கள் உண்டு. தனி ஆண்களாக பத்துப் பதினைந்து நபர்கள் நடுவில் தனிப் பெண்களாக நான்கைந்து பேர் இருந்து விட்டால் அதில் எவ்வளவு சிக்கல்கள் நேரும் என்பதை நான் உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன். இந்தப் பெண்கள் அழகானவர்கள். ஒருத்தி மிகவும் அழகானவள். ஆதலால் இலக்கியத்திற்கு எழுத்துக்கும் அப்பாற்பட்ட பல சூழ்நிலைகள் அமைந்தன. (பக்கம் 62, தொகுதி 1)



சென்னை வாழ்க்கையைப் பற்றி அவர் எழுதுகிறார்: ஒருகாலத்தில் சூதாட்டம் ஒருவர் வாழ்க்கையில் அடிக்கடி நேர்கிற நிகழ்ச்சியாக இல்லை. . இன்று ரசமற்ற அன்றாட வாழ்க்கையை பூர்த்தி செய்வதற்குப் பல கட்டங்களில் தினமும் அபாயத்தோடு சூதாட வேண்டி வருகிறது. (பக்கம் 111, தொகுதி 1)



தமிழ் திரைப் படங்களைப் பற்றி அவர் சொல்கிறார்: தமிழ்த் திரைப்படங்களைக் கிண்டல் செய்ய அவ்வளவு ஆற்றல் தேவையில்லை. படத்தின் கதைச் சுருக்கத்தை எழுதினால் போதுமானதாக இருக்கும். (பக்கம் 788, தொகுதி 2)



திரு கருணாநிதியின் பராசக்தி படத்தைப் பற்றி அவர் கூறியிருப்பது இது: (51-52களில்) தமிழ் சினிமா, சினிமாவை விட்டு விலகி, நாடகப் பண்புகளிலேயே மலினமானவற்றைக் கைக் கொள்ள ஆரம்பித்தது. 'பராசக்தி' தமிழ்த் திரைப்படம் ஒரு மைல்கல் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதுவே சினிமாவிற்குரிய சிந்தனைப் போக்கைத் தமிழ் சினிமா உலகில் வெகுதூரம் பின் தள்ளி விட்டது. புணர்ச்சிக்குப் பின் ஆணைக் கொன்று தின்றுவிட்டு முட்டையிடலுக்குப் பின் தானும் மடிந்து விடும் ஒரு கொடூர வகைப் பூச்சி போல ' பராசக்தி', சினிமாவையும் பின் தள்ளி விட்டு தமிழ் மேடை நாடகத்தையும் குற்றுயிர் கொலையுயிருமாகச் செய்து விட்டது. ( பக்கங்கள் 671-672, தொகுதி 2). இப்படிக் கூறுவதனாலேயே 'பொது மக்கள் விரும்பும் படங்களுக்கு அவர் எதிரி என்று சொல்ல முடியாது. இன்றைய சராசரித் தமிழ்ப் படத்தில் கூட பல நடிகைகள், அவர்களுக்காக வடித்துத் தந்த எளிமைப் படுத்தபட்ட பாத்திர வார்ப்பையும் மீறிச் சிக்கல்களைப் பிரதிபலிக்குமாறு நடித்திருக்கிறார்கள். நடிக்கிறார்கள். .. ஆனால் தமிழ் சினிமா உலகம் இன்னும் நாயகனுக்கே உரியதாக உள்ளது. தமிழ் சினிமா நாயகர்கள் விதி விலக்கில்லாமல் தமிழ் சினிமாவை எளிமைப் படுத்தப் பட்ட பொழுது போக்குக்கு மேல் உயர முடியாதபடி பார்த்துக் கொள்கிறார்கள். (பக்கம் 675- தொகுதி 2). இந்தக் கட்டுரை 1981ல் எழுதப் பட்டது. இன்று நிலைமை இன்னும் மோசம். எளிமைப் படுத்தப் படுவதில் நடிகைகளின் பங்கு முன்பை விட இப்போது மிகக் கணிசமாக உள்ளது.



சிகந்தராபாத் மற்றும் ஜெமினி ஸ்டூடியோ பற்றிய அவரது கட்டுரைகள் இத்தொகுதிகளின் முக்கியமான கட்டுரைகளில் குறிப்பிடத் தக்கவை. ஜெமினி பற்றிய கட்டுரைகளை The Illustrated Weekly of India பத்திரிகையில் வந்த போது படித்திருத்திருக்கிறேன். இன்று அக் கட்டுரைகள் இந்திய சினிமாவைப் பற்றி எழுதப் பட்டவற்றில் மிகச் சிறந்தவைகளாகக் கருதப் படுகின்றன. இவற்றில் எனக்கு மிகப் பிடித்தது ராஜாஜி சினிமாவிற்குப் போனார் (690-700, தொகுதி 2) என்ற கட்டுரைதான். கட்டுரை ராஜ் மோகன் காந்தி ராஜாஜி பற்றி எழுதிய வாழ்க்கை வரலாறு பற்றிய செய்தியுடன் தொடங்குகிறது. அதில் ராஜாஜியின் டைரிக் குறிப்புகளைப் பற்றிய செய்தி. ஒரு குறிப்பு ஜெமினியின் ஔவையார் படம் பார்த்தேன் என்று தொடங்குகிறது. எப்படி முடிகிறது என்பதை அசோக மித்திரன் உடனே நமக்குச் சொல்வதில்லை. கட்டுரை ஜெமினியின் சம்சாரம் படத்திற்குத் தாவுகிறது. அதன் வெற்றியைப் பற்றி சொல்லி விட்டு அடுத்த ஜெமினி படமான மூன்று பிள்ளைகள் ( ஆர். கே நாராயண் வசனம் எழுதியது!) அடைந்த தோல்வியைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. இந்தத் தோல்வி ஜெமினி அதிபர் வாசனை அவர் ஏழு எட்டு ஆண்டுகள் கிடப்பில் போட்டிருந்த ஔவையார் படத்தை வெளிக் கொணரத் தூண்டியது. ஔவையாருக்கு வசனம் எழுதிய பலரில் புதுமைப் பித்தனும் ஒருவர். ஏகப் பட்ட ரீல்கள் ஏற்கனவே எடுத்து முடித்தாகி விட்டது. படம் அப்படியே ஓடினால் ஒரு நாள் முழுவதும் ஓடும். "வாசன் தனது கதை இலாகாவைச் சேர்ந்தவர்கள் மதியம் தூங்கி வழிவதைப் பார்த்ததால் அவர்களிடம் ஔவையாருக்காக ஏன் ஒரு சீன் எழுதக் கூடாது என்று கேட்டுக் கொண்டதின் விளைவுதான் அது. வாசனின் தீவிர முயற்சியால் படம் மனிதர்கள் பார்க்கும் அளவிற்கு சுருக்கப் பட்டது. சில காட்சிகள் சேர்க்கப் பட்டன. படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு ராஜாஜி அழைக்கப் பட்டார். ராஜாஜிக்கும் சினிமாவிற்கும் உள்ள உறவைப் பற்றி அசோக மித்திரன் சொல்கிறார்: ராஜாஜி போன்ற ஒரு நபரை ..அழைப்பது என்பது ..மொரார்ஜி தேசாயை சிகரட் பிடிக்கும் தம்பதியருக்கான போட்டிக்குத் தலைமை தாங்க வைப்பதைப் போன்றதாகும்.



ராஜாஜி படம் பார்த்தார். மௌனமாகப் பார்த்தார். ஒன்று கூறாமலே சென்று விட்டார். மறுபடியும் படம் திரைப்பட அரங்கில் ஓடிய போது டிக்கட் எடுத்துப் பார்த்தார். ராஜாஜி ஔவையார் படத்தை இருமுறை பார்த்தார் என்பதே செய்தியாகி விட்டது. ஆனல் ராஜாஜி படத்தைப் பற்றி என்ன நினைத்தார்? அசோக மித்திரன் அதை கட்டுரையின் கடைசியில் சொல்கிறார்: ..ஔவையார் பார்த்தேன். டி.கே.சண்முகத்தின் நாடகம் இதைவிட நூறுபங்கு மேலானது. இடி, மின்னல் புயல், வெள்ளம் போன்று ஸ்டாக் சீன்கள். யானைகள் அணிவகுக்கின்றன. அட்டைக் கோட்டை விழுகிறது. ..படம் ரொம்ப சாதாரணமானது. ஆனால் இவ்வளவு பணம் செலவழித்துத் துணிச்சலாக எடுத்திருக்கும்போது ஒருவரால் எப்படி அதைக் கண்டனம் செய்ய முடியும்?



சிகந்தராபாத் பற்றி அவர் எழுதிய கட்டுரைகளில் முக்கியமானது 18-வது அட்சக் கோட்டில் என்ற கட்டுரை (பக்கங்கள் 121-164, தொகுதி 2). இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற 1945-ல் தொடங்கி 1948ல் நடந்த ஹைதராபாத் நேரடி நடவடிக்கையுடன் முடிவுறும் இந்தக் கட்டுரை ஒரு சகாப்தம் முடிந்து மற்றொரு சகாப்தம் ஆரம்பிப்பதை வியக்க வைக்கும் சொற்சிக்கனத்தோடு ஒரு இளைஞனது பார்வையில் சொல்கிறது. உலகப் போர் முடிந்தாலும் அன்றாட வாழ்க்கையை முடிவடையா போராக்கிய ரேஷன் முறை, ஹைதராபாத் நிஜாமிற்கும் இந்திய அரசிற்கும் இடையே ஏற்பட்ட பிளவுகள், அந்தப் பிளவுகளை அடிப்படை வாதிகள் பயன்படுத்திக் கொண்ட விதம், ஹைதாராபாத்திலிருந்து சென்னைக்கு வருவதற்குக் கூட அனுமதி பெற வேண்டிய கட்டாயம், கடைசியாக இந்திய அரசின் நேரடி நடவடிக்கை போன்றவை பற்றிய இந்தக் கட்டுரை மனிதர்கள் தங்களுக்குள் போட்டுக் கொள்ளும் மூடச்சண்டைகள் பற்றி ஒரு மெல்லிய பெருமூச்சோடும், ஆழ்ந்த துக்கத்தோடும் பேசுகிறது. "சிகந்தராபாத்திலும் அகதிகள் வந்து குவிந்திருந்தார்கள். இவர்களில் அனேகமாக எல்லோருமே விதர்பா என்னும் பிரதேசத்திலிருந்து வந்த ஏழை முஸ்லிம்கள். அந்த ஏழ்மையில் அவர்களுக்கு சில கவளங்கள் சோறும், படுத்துக் கிடக்கக் கை அகலத் தரையும்தான் உலகமாகவே இருந்திருக்க வேண்டும். அதையும் விட்டு விட்டுத் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள, அவர்கள் ஓடி வந்த நிஜாம் சம்ஸ்தானத்தில் அவர்களுக்கு என்ன கிடைத்தது? சில கவளங்கள் சோறும் படுத்துக் கிடக்கத் தெருவோரமாகக் கையகல இடமும்தான்.



அசோக மித்திரன் அவர் ஆனந்த விகடனுக்கு 1985-ம் ஆண்டு எழுதியகடிதத்தில் கூறுகிறார்: மனித இனமே ஒன்று என்ற ஒரே செய்தியைத்தான் என் முப்பதாண்டு படைப்புகள் கூறி வருகின்றன. இப்போது இன்னும் இருபது ஆண்டுகள் ஆகி விட்டன. மனித இனத்தின் மீது அவர் கொண்டிருக்கும் அன்பில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இது கொள்கை சாரா அன்பு. இடம், வலம் போகாமல் மக்களை நேராகச் சந்தித்தால் ஏற்படும் அன்பு. அவரிடம் வந்து முன்னுரை கேட்பவர்களைப் புண் படுத்தக் கூடாது என்பதற்காக விமரிசனக் கத்தியை உறையில் போட்டுக் கொள்ள வைக்கும் அன்பு. இத்தகைய அன்பிற்கு இடம் கிடையாது என்ற கொள்கைப் பிடிப்பு உள்ளவர்களைக் கூட ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அன்பு. அவர் சமீபத்தில் எழுதிய காசி என்ற கட்டுரையில் கூறுவது இது: (காசியில் சிராவண மாதத்தில் காவடி தூக்கி விஸ்வநாதரைத் தரிசிக்க வரும் ஏழைகளைப் பற்றியது) இவர்கள்தான் ஆண்டு முழுக்க நாட்டுக்காக வயலிலும் பட்டறையிலும் வேலை செய்து ஒரு வேளை சோறு கிடைத்தால் போதும் என்று இருப்பவர்கள். ..நாம் எவ்வளவு எளிதாக இவர்கள் பக்தியையும், விசுவாசத்தையும். சகிப்புத்தன்மையையும், போதுமென்ற தன்மையையும் கருத்தரங்குகளிலும், பத்திரிகைக் கட்டுரைகளிலும் அலட்சியப் படுத்துகிறோம்? தென்னிந்தியாவிலும் சபரி மலைக்கு லட்சக் கணக்கில் மக்கள் போகிறார்கள். அது ஏன் மனத்திற்கு சங்கடம் ஏற்படுவதாக அமைந்து விடுகிறது? (பக்கங்கள் 854-87, தொகுதி 2)



தமிழில் பாடப் புத்தகங்களில் பதிக்கப் பட்ட சில கட்டுரைகளை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு ஒரு சமயம் கிடைத்தது. மாணவர்கள் தமிழ் என்றால் ஏன் அலறி ஓடுகிறார்கள் என்பதின் காரணம் எனக்கு உடனே புரிந்து விட்டது. மலம் கழிப்பதை எளிமையாக்கும் தமிழர் மருத்துவம் பற்றி மாணவர்களிடம் பேசினால் அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்? அசோக மித்திரன், சுரா (உதாரணமாக அவரது காற்றில் கலந்த பேரோசை) எழுதிய கட்டுரைகளில் சில உலக இலக்கியத்தில் எழுதப் பட்ட மிகச் சிறந்த கட்டுரைகளோடு ஒப்பிடத் தக்கவை. இவை மாணவர்களைச் சென்றடையாதது தமிழகத்தில் உண்மையான, அரசியல் மற்றும் திரைப்படங்களினால் தூக்கிப் பிடிக்கப் படாத படைப்பாளிகளுக்கு என்ன மதிப்பிருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம்.



(நன்றி : இந்தியா டுடே)

தமிழீழம் என்பது

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட

முரளியின் 18 ஆண்டு கால சுழல் ஓய்ந்தது

உலக கிரிக்கெட் அரங்கில் 1982ஆம் ஆண்டுதான் இலங்கைக்கு டெஸ்ட் கிரிக்கெட் தகுதி வழங்கப்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளில் உலகின் தலை சிறந்த சாதனை மன்னன் முரளிதரனை அந்த நாடு உருவாக்கியது. அடுத்த 18 ஆண்டுகளில் அவர் 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி இன்று ஒருவரும் இனிமேல் அடுத்த 15 ஆண்டுகளுக்கு உடைக்க முடியாத சாதனையை நிகழ்த்தியுள்ளார்.




28 ஆண்டுகாலமே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து வரும் இலங்கை அணி அதற்குள் மிகப்பெரிய சாதனை மன்னனை உருவாக்கியுள்ளது என்றால் அது நிச்சயம் அந்த நாட்டின் அப்போதைய உள்நாட்டு கிரிக்கெட் உள்கட்டுமானமே காரணம் என்று கூறினாலும், முரளிதரன், பிராட்மேன், சோபர்ஸ், கபில்தேவ், வால்ஷ், சச்சின், லாரா, ஷேன் வார்ன், கும்ளே போன்றவர்கள் உள்கட்டுமான பலம் பலவீனங்களைத் தாண்டிய தனிமனித ஆளுமைகள் என்பதில் இருவேறு கருத்து இருக்க வாய்ப்பில்லை.



ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக 'பாடிலைன்' (Bodyline) புதிய தாக்குதல் முறை பந்து வீச்சை அறிமுகம் செய்து டான் பிராட்மேனைக் கவிழ்க்கச் சதித் திட்டம் தீட்டி அதில் வெற்றியும் பெற்ற இங்கிலாந்து கேப்டன் ட‌கள்ஸ் ஜார்டைனுக்குப் பிறகு முரளிதரன் என்ற கிரிக்கெட் வீரர்தான் அதிக சச்சரவுக்குள்ளானார் என்றால் அது மிகையாகாது. அதாவது கிரிக்கெட் காரணங்களுக்காக, ஷோயப் அக்தர் போன்று ஒழுக்கத் தடுமாற்றங்களால் ஏற்படும் சச்சரவுகள் அல்ல.



இன்னும் பலருக்கு முரளிதரன் கிரிக்கெட்டின் இத்தகைய உயர்வுக்குத் தகுதியற்றவராகத்தான் தோற்றமளிக்கிறார். ஆனால் பெரும்பகுதியினருக்கு இவர் ஒரு மகான் கிரிக்கெட் வீரர் மற்றும் மந்திரச் சுழற்பந்து வீச்சாளர். இன்னும் ஒரு சில அபத்த விமர்சகர்களுக்கு முரளிதரன் ஒரு ஏமாற்றுக்காரர். (பிஷன் சிங் பேடி, மைக்கேல் ஹோல்டிங் ஆகியோரின் கருத்துகளின் படி)



நடுவர்களுக்கும், ஆஸ்ட்ரேலிய மைதான ரசிகர்களுக்கும் முரளிதரன் ஒரு ஜோக்கர். ஆக்சன் ரீ-பிளேயில் அவரது கண்களை அருகில் காட்டும் ஒவ்வொரு தருணமும் ஆஸ்ட்ரேலியர்களுக்கு முரளீதரன் ஒரு ஜோக்கராகத்தான் தெரிந்துள்ளார்.



ஒவ்வொரு முறை ஆஸ்ட்ரேலியாவில் இவர் பந்து வீச வரும்போதும் ரசிகர்கள் இவர் பந்துகளை நோ-பால் என்றும், த்ரோ என்றும் கேலி பேசியுள்ளனர்.



இவ்வளவு மாற்றுக் கருத்துகளுக்கும் ஈடுகொடுத்து முன்னேறி வந்த முரளிதரனைப் பற்றி அனைவரும் ஆச்சரியமடைந்த ஒரு விஷயம் உள்ளது என்றால் கட்டாந்தரையிலும் பிட்சிற்கு வெளியே குத்தி பந்தை கடுமையாகத் திருப்பி ஸ்டம்ப்களை பெயர்த்து முன்னணி வீரர்களை அச்சுறுத்திய அவரது அசாத்திய திறமைதான்.





FILEஅவர் 1992ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக கொழும்புவில் தன் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். அப்போது முதல் 1999ஆம் ஆண்டு வரை 48 டெஸ்ட் போட்டிகளில் 227 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆனால் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் அவர் தூஸ்ரா என்ற ஒரு புதிய பந்து வீச்சை வீசத் துவங்கினார். அதாவது ஆஃப் ஸ்பின்னிற்கு எப்படிப் பந்தை பிடித்துக் கொள்வாரோ அதுபோன்று பிடித்துக் கொண்டு வீசும் போதே பந்து எதிர்த் திசையில் திரும்பி பேட்ஸ்மென்களை நிலைகுலையச் செய்தது.



அதன் பிறகே 2000த்திலிருந்து 2010ஆம் ஆண்டு வரை விளையாடிய 85 டெஸ்ட் போட்டிகளில் முரளிதரன் மேலும் 573 விக்கெட்டுகளைச் சாய்த்து மற்றொரு சுழல் மேதை ஷேன் வார்னைக் கடந்து சென்று இன்று 800 விக்கெட் நாயகனாக சாதனை புரிந்துள்ளார்.



ஆனால் தூஸ்ராவைக் கண்டுபிடித்தது இவர் அல்ல தூஸ்ராவைக் கண்டுபிடித்தது பாகிஸ்தான் ஆஃப் ஸ்பின்னர் ஷக்லைன் முஷ்டாக் என்பது அனைவரும் அறிந்ததே.



சச்சரவுகளும், கேலியும் அவரை வாழ்நாள் முழுதும் துரத்தியபடியே வந்தன. அதனை தன் அகலக்கண் புன்னகை மூலம் அலட்சியப்படுத்திய அவர் உண்மையில் 1995ஆம் ஆண்டு பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்ட்ரேலிய நடுவர் டேரல் ஹேர் தன் பந்துகளை த்ரோ என்று முத்திரைக் குத்தி நோ-பால் என்று பலமுறை அறிவித்தது கண்டு அதிர்ச்சியடைந்தார் என்பது உண்மைதான். அவர் கால்லே டெஸ்ட் போட்டியின் கடைசி பிரிவுபசார நிகழ்ச்சியில் பேசும் போது கூட நடுவர்களின் போக்கு பற்றி குறிப்பிட்டார். பிரிவுபசார நிகழ்ச்சியில் வேறு இனிய நினைவுகள் இருக்கும் போது தன்னை த்ரோ என்று கூறிய நடுவர்களுக்கு எதிராக ஒன்றும் கூறப்போவதில்லை என்று கூறியிருக்கிறார் என்றால் அது அவரை மிகவும் பாதித்துள்ளது என்றே பொருள்.






FILE3 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆஸ்ட்ரேலிய நடுவர் ராஸ் எமர்சன் முரளி பந்து வீச்சை த்ரோ என்று தீர்ப்பளிக்கிறார். பிறகு 2004ஆம் ஆண்டில் அவர் தூஸ்ராவை வீசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு பெர்த் பயோ-கெமிக்கல் சோதனை, அதன் பிறகு 15 டிகிரி வரை கையை மடக்கினால் அது த்ரோ இல்லை என்ற புரிதல் ஏற்பட்டது.



ஆனால் முரளி ஓய்வு பெற்ற பிறகு கூறியது, இளைஞர்களுக்கு இருக்கவேண்டிய மனத்திடத்தை குறிப்பதாக அமைந்தது. அதாவது தனது பந்து வீச்சு முழுதுமே தவறு என்று தீர்ப்பு வந்திருந்தாலும், ஆஃப் ஸ்பின்னைத் துறந்து லெக்-ஸ்பின் வீசி கிரிக்கெட் ஆட்டத்தை தொடர்ந்திருப்பேன் என்றார். இது அவரது அசாத்திய தன்னம்பிக்கையை அறிவுறுத்துவதாய் உள்ளது.



1996 ஆம் ஆண்டு இலங்கை உலகக் கோப்பையை வெல்லும் போது அந்த அணியில் இருந்தார். மீண்டும் 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிக்குள் நுழைந்த இலங்கை அணியின் முக்கிய வீரராகத்திகழ்ந்தார் முரளி.



சர்வதேச அரங்கில் 1996ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றாலும் இலங்கை அணிக்கு ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து தென் ஆப்பிரிக்க அணிகள் ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு டெஸ்ட்கள் கொண்ட் தொடர்களையே வழங்கிவந்தது.



இந்த நிலையில்தான் 1998ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஒரே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை நிலைகுலையச் செய்தார் முரளி. இதற்கு முன்பும் அச்சுறுத்தும் பல பந்து வீச்சு இன்னிங்ஸ் முரளியின் கிரிக்கெட் வரலாற்றில் இருந்தும் இந்த டெஸ்ட் போட்டிதான் அவரை ஒரு முக்கிய அச்சுறுத்தலாக உலக அரங்கில் மாற்றியது.



முதலில் பேட் செய்த இங்கிலாந்து 445 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதில் முரளி 60 ஓவர்கள் என்ற மராத்தான் ஸ்பெல்லை வீசி 159 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.



ஆனால் இலங்கை அணி ஜெயசூரியாவின் அதிரடி 213 ரன்களாலும் அரவிந்த டிசில்வாவின் 152 ரன்களாலும் 591 ரன்கள் எடுத்து 146 ரன்கள் முன்னிலை பெற்றது.



இரண்டாவது இன்னிங்ஸில் 25 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து முரளி பந்து வீச வந்தவுடன் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. பட்சர், ஹிக், ராம்பிரகாஷ், பென் ஹோலியோக் ஆகிய முக்கிய வீரர்களுக்கு முரளியின் ஆஃப் ஸ்பின் என்ன ஆனதென்றே தெரியவில்லை. 181 ரன்களுக்கு இங்கிலாந்து சுருண்டது.]



முரளிதரன் 54.2 ஓவர்களை வீசி அதில் 27 ஓவர்களை மைடன்களாக்கி 65 ரன்கள் மட்டுமே கொடுத்து 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் இதனால் இலங்கை அந்த டெஸ்ட் போட்டியில் வென்றது. அந்த 1998ஆம் ஆண்டுதான் அவர் 8 டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக 68 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தார்.





FILEஇவர் காலத்தில் மிகச்சிறந்த பேட்ஸ்மென்களாகக் கருதப்பட்டவர்களில் லாராவும், சச்சின் டெண்டுல்கரும்தான். இதில் 19 முறை டெண்டுல்கரை எதிர்கொண்ட முரளி அதிகபட்சமாக 9 முறை டெண்டுல்கரை வீழ்த்தியுள்ளார். சச்சின் டெண்டுல்கரை அதிக முறை வீழ்த்திய ஒரே வீச்சாளர் என்ற சாதனையையும் அவர் தன்னகத்தே வைத்துள்ளார்.



ஆனால் லாராவின் கதை வேறு. 2001ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் பலவீனமானது. லாராவும் சுமார் 45 நாட்கள் ஓய்வுக்கு பிறகு அணிக்குத் திரும்புகிறார். முரளிதரன் அவரது பந்து வீச்சு உச்சத்தில் இருக்கிறார். இலங்கையில் அவரை இதுவரை யாரும் முறியடித்ததில்லை என்பது அப்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகவே மாறிவிட்டிருந்தது.



ஆனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையை ஏற்கவில்லை ஒரு 178, 74, 48, 221, 130 என்று 651 ரன்களை விளாசினார் லாரா. முரளிதரனை ஸ்வீப் செய்து தொடர் முழுதும் காலி செய்தார் லாரா. எப்படி சச்சின் கட்டம் கட்டி ஷேன் வார்னுக்கு வேட்டு வைத்தாரோ அதே போல் முரளிக்கு வேட்டு வைத்தார் லாரா. இலங்கை மண்ணில் முரளிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார் லாரா. முரளியே அந்தத் தொடர் முடிந்தவுடன் லாராவிற்கு என்னால் வீச முடியவில்லை என்று ஒப்புக் கொள்ள நேரிட்டது. இதனைத் தவிர கடைசியாக ஒரு முறை சேவாக் ஒரே நாளில் 284 ரன்கள் விளாசிய போது முரளியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த இரண்டு அல்லது இதுபோன்ற இன்னும் ஓரிரு தருணங்களே முரளியை முழுதும் ஆதிக்கம் செலுத்த முடிந்துள்ளது. மற்ற நேரங்களில் இலங்கை தோற்றாலு‌ம் இவருக்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதில்லை.




ஆனாலும் இவர் இலங்கையில் 73 டெஸ்ட் போட்டிகளில் 493 விக்கெட்டுகளையும், வெளிநாடுகளில் 60 டெஸ்ட் போட்டிகளில் 307 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளமை விமர்சன ரீதியாக நோக்கப்பட இடமுண்டு. இருப்பினும் 60 டெஸ்ட் போட்டிகளில் 307 விக்கெட்டுகள் ஒன்றும் சாதாரணமல்ல.



ஆனாலும் வங்கதேசம், மற்றும் ஜிம்பாப்வே மைதானங்களில் இவர் எடுத்த 55 விக்கெட்டுகளை இவரது அயல் நாட்டு கணக்கிலிருந்து கழித்துவிட்டால் இவர் எடுத்தது 60 டெஸ்ட்களில் 252 விக்கெட்டுகள்தான். நாம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இவர் எடுத்த விக்கெட்களையும் கூட ஒரு விதத்தில் கணக்கிற்காகவே வைத்திருக்க முடியும் ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் இந்தக் காலக்கட்டங்களில் மிகவும் மோசமான அணியாக இருந்தது என்பதையும் நாம் மறந்து விடலாகாது.



அதேபோல் உள்நாட்டில் முரளி தாதாகிரியாக இருந்தாலும் ரிக்கி பாண்டிங் தலைமை ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக இலங்கை முரளி இருந்தும் 3-0 என்று உதை வாங்கியதை முரளி மறந்திருக்க முடியாது.





FILEஇவரது பந்து வீச்சை த்ரோ என்று ஆஸ்ட்ரேலியா கூறினாலும், ஹர்பஜன் சிங் அளவுக்கு ஆஸ்ட்ரேலியாவை முரளி மிரட்டவில்லை என்றே கூற வேண்டும். ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக 13 டெஸ்ட் போட்டிகளில் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், ஆஸ்ட்ரேலிய மைதானங்களில் 5 டெஸ்ட் போட்டிகளில் 12 விக்கெட்டுகளையே இவரால் எடுக்க முடிந்தது. மாறாக தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 15 டெஸ்ட் போட்டிகளில் எடுத்த 104 விக்கெட்டுகளில் தென் ஆப்பிரிக்க மைதானத்தில் 6 டெஸ்ட் போட்டிகளில் 35 விக்கெட்டுகள் என்று நல்ல முறையில் வீசியுள்ளார்.



அதே போல் இந்தியாவில் இவர் 11 டெஸ்ட் போட்டிகளில் 40 விக்கெட்டுகளையெ எடுக்க முடிந்துள்ளது. துணைக்கண்ட ஆட்டக்களங்களில் இவர் ஒரு டெஸ்ட் போட்டியில் எடுத்துள்ள சராசரி விக்கெட்டுகளை விட இது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.



ஆனால் புள்ளி விவரங்கள் ஒருபுறம் இருந்தாலும் முரளிதரன் ஒரு சகாப்தம் இனி இது போன்ற ஒரு சுழற்பந்து வீச்சாளரை கிரிக்கெட் நாடுகள் உருவாக்குவது கடினம். உருவாக்கினாலும் 800 விக்கெட்டுகளை எட்ட இயலாது, ஏனெனில் டெஸ்ட் போட்டிகளுக்கான முக்கியத்துவம் குறைந்து வரும் ஒரு காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம்.





FILEஷேன் வார்ன், அனில் கும்ளே, முரளிதரன் ஆகியோர் சமகால ஸ்பின்னர்களே. இவர்கள் மூவரும் முறையே 708, 619, 800 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். அதாவது 2,127 விக்கெட்டுகளை இந்த 18 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் இதுதான் ஸ்பின் பந்து வீச்சின் சிறந்த காலக்கட்டம் என்று கூறலாம் இந்த 18 ஆண்டுகள்தான் சுழற்பந்து வீச்சின் பொற்காலம் என்றே நாம் அறுதியிடலாம்.



இந்த மூவருடன் சுழற்பந்து வீச்சின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்றே கூறலாம். முன்பு ஒரு காலத்தில் பேடி, பிரசன்னா, வெங்கட்ராகவன், சந்திரசேகர், லான்ஸ் கிப்ஸ், டெரிக் அண்டர் வுட் இருந்தது போல் இந்த 18 ஆண்டுகளில் இவர்கள்தான்.



தற்போதுள்ள டேனியல் வெட்டோரி, ஹர்பஜன் சிங், கனேரியா, கிரகாம் ஸ்வான், பால் ஹேரிஸ் என்ற சுழற்பந்துக் கூட்டம் முந்தைய இரண்டு மாமரபுகளுக்கு அருகில் கூட செல்ல சாத்தியமில்லை என்றே நாம் கருதவேண்டியுள்ளது.


«123»

நம்பினால் நம்புங்கள்

இதுவரை பைரவருக்கு மதுவை நைவேத்தியமாகப் படைப்பதைப் பார்த்துள்ளோம். ஆனால் இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் நாம் பார்க்கப் போவது, மா காவால்கா தேவியின் கோயிலில் அம்மனுக்கு மதுவை நைவேத்தியமாகப் படைப்பதைத்தான்.




ஒரு பெண் தெய்வத்திற்கு மதுவை நைவேத்தியம் செய்வதாக நாம் கேள்விப்படுவதே இதுதான் முதல் முறை.



சட்லாம் நகரத்தில் இருந்து 32 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த மா காவால்கா கோயி‌ல் பல ஆண்டுகளாக மக்க‌ளா‌ல் வ‌ழிபாடு செ‌ய்ய‌ப்ப‌ட்டு வரு‌கிறது.



இந்த கோயிலின் தனிச் சிறப்பு என்னவென்றால், கோயிலில் உள்ள மா காவால்கா, மா காளி, கால பைரவரின் சிலைகளுக்கு மதுவைத்தான் நைவேத்தியமாகப் படைக்கின்றனர் ப‌க்த‌ர்க‌ள்.



கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாங்கி வரும் மது, ஒரு கோப்பையில் ஊற்றப்பட்டு அது கடவு‌ள் ‌திருவுருவ‌ச் ‌சிலைகளின் வாய்ப்பகுதியில் வைக்கப்பட்டதும் கோப்பை கொஞ்சம் கொஞ்சமாக காலியாகிவிடுகிறது. இவை அனைத்தும் பக்தர்களின் முன்னிலையிலேயே நடக்கின்றன.



இந்த கோயிலில் பூசாரி பண்டிட் அம்ரித்கிரி கோஸ்வாமி கூறுகையில், இந்த கோயில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும், மாயமான முறையில் இந்த சிலைகள் இங்கு நிறுவப்பட்டன என்றும் கூறினார். மூன்று சிலைகளும் மது அருந்துவது முற்றிலும் உண்மையான விஷயம் என்றும் கூறுகிறார்.



பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து இறைவனுக்கு மதுவை காணிக்கையாக அளித்து, தங்களது விருப்பங்களை கோ‌ரி‌க்கையாக வை‌க்‌கி‌ன்றன‌ர்.



ரமேஷ் என்ற பக்தர், மு‌ன்பு தா‌ன் இ‌ந்த கோ‌யிலு‌க்கு வ‌ந்த போது தன‌க்கு‌க் குழ‌ந்தை ‌பிற‌ந்தா‌ல் ஆடு வெட்டி, தனது பிள்ளைக்கு மொட்டை அடித்து காணிக்கை செலுத்துவே‌ன் எ‌ன்று வே‌ண்டி‌க் கொ‌ண்டதாக‌க் கூறினார்.



த‌ற்போது தனக்கு குழந்தை பிறந்து‌ள்ளதாகவு‌ம், அத‌ற்கு நேர்த்தி கடன் செலுத்தவே இங்கு வந்துள்ளதாகவும் கூறுகிறார்.



இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும், சிறிய பாட்டில்களில் மது பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறினால் வெறும் பாதத்தில் நடந்து வருவதாகவும், ஆடு போன்றவற்றை பலி கொடுப்பதாகவும் வேண்டிக் கொள்கின்றனர்.



ஆடி அமாவாசை மற்றும் நவராத்திரி தினங்களில் இந்த கோயிலில் சிறப்பான பூஜைகள் நடைபெறுகின்றன. அப்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். சிறப்பு பூஜைகளின் போது பலருக்கு சாமி வந்து ஆடுவதையும் பார்க்க முடிகிறது.



உண்மையிலேயே இங்குள்ள சிலைகள் மதுவை குடிக்கின்றனவா அல்லது இதெல்லாம் மனிதர்களின் சித்து விளையாட்டா? இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? எங்களுக்கு எழுதுங்கள்

அ‌ந்த ‌விஷய‌த்‌தில‌் ஆ‌ண்க‌ள் எப்படி ?

எ‌ன்னதா‌ன் நாக‌ரீக‌ம் வள‌ர்‌ந்து, த‌ங்க‌ள் ‌வீ‌ட்டு மக‌ளிரு‌க்கு எ‌ல்லாவ‌ற்‌றிலு‌ம் இணையான இட‌ம் கொடு‌த்தாலு‌ம் ஆ‌ண்க‌ள் அ‌ந்த ‌விஷய‌த்‌தி‌ல் ‌பி‌ன்த‌ங்‌கி‌த்தா‌ன் உ‌ள்ளன‌ர். அ‌ந்த ‌விஷய‌த்‌தில‌் பெ‌ண்க‌ள் ம‌ட்டுமே மு‌ன்வர வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ‌நினை‌க்‌கிறா‌ர்க‌ள்.




அது எ‌ன்ன அ‌ந்த ‌விஷய‌ம் எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் முக‌ம் சு‌ழி‌ப்பது பு‌ரி‌கிறது.



அதாவது, அ‌ந்த ‌விஷய‌ம் எ‌ன்பது குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டு ‌விஷய‌ம்தா‌ன். ஒரு குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு ஒரு குழ‌ந்தை போது‌ம் எ‌ன்று அரசா‌ங்க‌ம் ‌பிர‌ச்சார‌ம் செ‌ய்து வ‌ந்தாலு‌ம், சகோதர‌ப் பாச‌த்‌தி‌ற்காக இர‌ண்டு குழ‌ந்தைக‌ள் இரு‌ப்பதுதா‌ன் ந‌ல்லது எ‌ன்பது பெரு‌ம்பாலானோ‌ரி‌ன் கரு‌த்து.



ச‌ரி அ‌ப்படியே இர‌ண்டாவது குழ‌ந்தை பெ‌ற்று‌க் கொ‌ண்ட ‌பிறகு முத‌ல் கா‌ரியமாக செ‌ய்வது குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடுதா‌ன். பெரு‌ம்பாலான மரு‌த்துவமனைக‌ளி‌ல் இர‌ண்டாவது குழ‌ந்தை ‌பிற‌ந்த உடனே, மரு‌த்துவ‌ர்களே குழ‌ந்தையை‌ப் பெ‌‌ற்றெடு‌த்த பெ‌ண்‌ணி‌ற்கு குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டு அறுவை ‌சி‌கி‌ச்சையை‌ச் செ‌ய்து வ‌ிடு‌கி‌ன்றன‌ர்.



ஆனா‌ல் இ‌ந்த குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டு ‌‌சி‌கி‌ச்சை‌க்கு ஆ‌ண்‌க‌ள் ம‌ட்டு‌ம் மு‌ன்வராததுதா‌ன் ‌மிக‌‌‌ப்பெ‌ரிய‌க் கவலைய‌ளி‌க்கு‌ம் ‌விஷயமாகு‌ம்.



அதாவது வாசெ‌க்ட‌மி என‌ப்படு‌ம் ஆ‌ண்களு‌க்கான கரு‌த்தடை செ‌ய்து கொ‌ண்ட ஆ‌ண்க‌ள் இ‌ந்‌தியா‌வி‌ல் ‌விர‌ல் ‌வி‌ட்டு எ‌ண்ணு‌ம் அ‌ள‌வி‌ற்கு‌த்தா‌ன் இரு‌ப்பா‌ர்க‌ள் போல. இ‌‌ந்த ‌சி‌கி‌ச்சை‌யி‌ல், க‌த்‌தியோ, காயமோ, தையலோ, ர‌த்த இழ‌ப்போ எதுவு‌ம் ‌கிடையாது எ‌ன்பது இ‌ன்னொரு ‌விஷய‌ம்.



த‌மிழக‌த்‌தில‌் ‌சில ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு ஆ‌ண்களு‌க்கான கரு‌த்தடை அறுவை ‌சி‌கி‌ச்சை பெரு‌ம் ‌விள‌ம்பர‌ம், ‌வி‌ழி‌ப்புண‌ர்வுகளு‌க்கு ம‌த்‌தி‌யி‌ல் நட‌த்த‌ப்ப‌ட்டது. ஆனா‌ல் த‌ற்போது அதுவு‌ம் எ‌ங்கோ மற‌ை‌ந்து‌வி‌ட்டது.



அ‌ந்த வகை‌யி‌ல் கட‌ந்த ‌சில வார‌ங்களு‌க்கு மு‌ன்பு பெ‌‌ங்களூ‌ரி‌ல் ந‌ட‌ந்த முகா‌மி‌ல் ஆ‌ண்க‌ள் இ‌ந்த ‌விஷய‌த்‌தி‌‌ற்கு ‌‌மிகவு‌ம் பய‌ப்படு‌கி‌ன்ற‌ன‌ர், கூ‌ச்ச‌ப்படு‌கி‌ன்றன‌ர் எ‌ன்பது அ‌ப்ப‌ட்டமாக தெ‌ரி‌ந்தது.



பெங்களூர் புறநகர் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் கே.ஆர். புரம் அரசு மருத்துவமனையில் இ‌‌ம்மா‌தி‌ரியான முகாம் நடைபெற்றது. அந்த முகாம் பற்றி பல நா‌ட்களு‌க்கு மு‌ன்பே ஒ‌லி‌ப்பெரு‌க்‌கி, போ‌ஸ்ட‌ர்க‌ள் ‌மூல‌ம் பலத்த பிரச்சாரம் செய்யப்பட்டிருந்த போதிலும், முகா‌மி‌ற்கு வ‌ந்தவ‌ர்க‌ள் வெறு‌ம் 5 பே‌ர்தா‌ன். ஆ‌ம், 5 பே‌ர்தா‌ன் வாசெக்டமி ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று அத‌ற்காக, தலா ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையு‌ம் பெற்றுச் சென்றவர்கள்.



எ‌ல்லா ‌விஷய‌ங்களு‌க்கு‌ம் நா‌ன்தா‌ன் கு‌டு‌ம்ப‌த் தலைவ‌ன், என‌க்கு‌த்தா‌ன் முத‌ல் உ‌ரிமை, முத‌ல் ம‌ரியாதை எ‌ன்று மு‌ன்‌‌நி‌ற்கு‌ம் ஆ‌ண், இ‌ந்த ‌விஷய‌த்‌தி‌ற்கு ம‌ட்டு‌ம் ‌பி‌ன்த‌ங்குவது எதனால‌்?



குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ண்டவ‌ர்க‌ள் எ‌ன்று வெ‌ளியே தெ‌ரி‌ந்தா‌ல் அவமான‌ம் எ‌ன்ற கரு‌த்து‌ம், அதை செ‌ய்து கொ‌ள்வது ஏதோ த‌ங்களை ஊன‌ப்படு‌த்துவது போலவு‌ம், ஆ‌ண்மை‌த் த‌ன்மையை இழ‌ப்பது போலவு‌ம் ஆ‌ண்க‌ள் ‌நினை‌ப்பதே இத‌ற்கு மு‌க்‌கிய‌் காரண‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் மனோத‌த்துவ ‌நிபுண‌ர்க‌ள்.



‌பி‌ள்ளை‌ப்பெறு‌ம் க‌ஷ‌்ட‌த்தை‌த்தா‌ன் பெ‌ண்க‌ள் படு‌கிறா‌ர்களே? இ‌ந்த கஷ‌்ட‌த்தையாவது ‌நீ‌ங்க‌ள் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளலாமே?

இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரியே எ‌ண்ணெ‌ய்தா‌ன்

இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரி எ‌ன்றா‌ல் அது எ‌ண்ணெ‌ய்தா‌ன். எ‌ண்ணெயை‌க் குறை‌த்து‌க் கொ‌ண்டா‌ல், கூடுமான அளவு த‌வி‌ர்‌த்து‌வி‌ட்டா‌ல் இதய‌ம் ந‌ம்மை வா‌ழ்‌த்‌தி‌க் கொ‌ண்டே வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் மரு‌த்துவ‌ர்க‌ள்.




ஆனா‌ல் எ‌ண்ணையே இ‌ல்லாம‌ல் எ‌ப்படி சமை‌ப்பது எ‌ன்று இ‌ல்ல‌த்த‌ர‌சிக‌ள் ந‌ம்மை‌ மறுகே‌ள்‌வி‌க் கே‌ட்பா‌ர்க‌ள். அத‌ற்கு‌, ஒரு சொட்டு எண்ணை கூட பயன்படுத்தாமல் சமையல் செய்வது எப்படி என்று மரு‌த்துவ‌ர் பிமல் சாஜர் நே‌ற்று செ‌ன்னை‌யி‌ல் செய்து காட்டினார்.



உலகம் முழுவதும் இதய நோயாளிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு தமிழகமும் விதிவிலக்கு அல்ல. தற்போது குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை அடியோடு மாறி உடல் உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக இல்லை.



குளிர்பானங்கள், பாஸ்ட் புட் முதலியவற்றைதான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். இத்தகைய காரணங்களால் சிறிய வயதிலேயே எடை அதிகரிக்கிறது. சர்க்கரைவியாதி, உயர் ரத்த அழுத்த இதயநோய் வருகிறது.



இதய நோய்க்கு எண்ணைதான் மூல காரணமாக விளங்குகிறது. அசைவ உணவுகளை எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி அதிகநேரம் வறுத்து சாப்பிடுவதால் அதிக எண்ணை உடலில் சேர்கிறது.



எனவே எண்ணை இல்லாமல் சமையல் செய்து சாப்பிட்டால் இதய நோய் வராது என்றும் இதயநோய் இருப்பவர் மட்டுமல்ல, ரத்த நாளத்தில் 10 அடைப்பு இருப்பவர்கள் கூட, ஏன், பைபாஸ் சர்ஜரிக்கு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் கூட எண்ணை பயன்படுத்தாத சமையலை சாப்பிட்டால் ரத்தநாளத்தில் ஏற்பட்ட அடைப்பு குறைகிறது என்றும் அறுவை சிகிச்சையே தேவை இல்லை என்றும் இதய சிகிச்சை நோய் நிபுணரும் சாஓல் என்ற விஞ்ஞானம் மற்றும் வாழும் கலை அமைப்பை சேர்ந்த மரு‌த்துவர் பிமல் சாஜர் கூறுகிறார்.



அவர் எண்ணை இல்லாத சமையலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் செய்து காண்பித்தார்.



நான்ஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்தி அதில் ஒரு சொட்டு எண்ணை பயன்படுத்தாமல் பக்கோடா தயாரித்து காட்டினார். அதை பலரும் சுவைத்து சாப்பிட்டனர். அதேபோல கோதுமை மாவில் பால் எடுத்து அந்த பாலைக்கொண்டு நான்ஸ்டிக் பாத்திரத்தில் நெய் இன்றி எந்தவித டால்டாவும் பயன்படுத்தாமல் சுவையான அல்வா தயாரித்துக் காட்டினார்.



அதுபோல சாம்பார் சாதம், சாம்பார், உருளைக்கிழங்கு கூட்டு, பட்டர் பீன்ஸ் கலந்த கீரைக்கூட்டு உள்பட பல சமையல்களை செய்து காண்பித்தார்.



அந்த சமையலை அங்கு டாக்டரிடம் பயிற்சிக்கு வந்திருந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு ருசித்தனர். அவர்கள் கூறுகையில், எண்ணை பயன்படுத்தி சமைத்தது போன்றே, நல்லசுவையாக உள்ளது என்று தெரிவித்தனர்.



எண்ணை இல்லாத சமையல் குறித்து டாக்டர் பிமல் சாஜர் கூறுகை‌யி‌ல், சாஓல் என்ற விஞ்ஞான மற்றும் வாழும் கலை என்ற அமைப்பை நடத்தி வருகிறோம். இதன் நோக்கமே இதய நோய் இல்லாமல் எல்லோரும் வாழ வேண்டும். இதய நோய் வந்தவர்களும் அதில் இருந்து விடுபட்டு சுகமாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். இதய நோய்க்கு மூலக்காரணம் எண்ணைதான்.



எண்ணை இல்லாமல் எல்லா சமையலும் செய்ய முடியும். அதை நாங்கள் நிரூபித்துள்ளோம். தென் இந்திய சமையலில் மட்டும் பொரியல், கூட்டு, குழம்பு உள்பட 155 வகைகளை செய்து காட்டி உள்ளோம். அதற்கான புத்தகமாக, `எண்ணை இல்லா தென் இந்திய சமையல்' என்று ஒரு பு‌த்தக‌ம் வெளியிட்டுள்ளோம்.



நான் என்னுடைய மருத்துவ பணியில் இந்தியாவில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதய நோயாளிகளை இருதய அறுவை சிகிச்சையில் இருந்து காப்பாற்றி உள்ளேன். அதாவது ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சைக்கு மரு‌த்துவர்களால் சிபாரிசு செய்யப்பட்டவர்கள், ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் எங்கள் இருதய திட்டத்தில் சேர்ந்து பயன் அடைந்துள்ளனர். திட்டத்தின்படி 3 நாள் பயிற்சி அளிக்கப்படும்.



அதாவது ஒவ்வொரு சாப்பாட்டிலும் என்ன என்ன கொழுப்பு சத்து உள்ளது. எவ்வளவு கலோரி உள்ளது. அவற்றால் உடலுக்கு ஏற்படும் பிரச்சினை என்ன, வரும் நோயாளிகளின் வேலை என்ன என்பது குறித்து விரிவாக கேட்டறியப்படும்.



பின்னர் அவர்களுக்கு யோகா கற்பிக்கப்படும். எண்ணை இல்லாத சமையலை நேரில் செய்து காண்பிக்கப்படும். தினமும் 35 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய ஆலோசனை வழங்கப்படும். மனதில் டென்சன் இல்லாமல் இருக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபோ‌ன்று வாழு‌ம் கலை ப‌ற்‌றிய முழு‌ப் ப‌யி‌ற்‌சியு‌ம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பழ வகைகளை சாப்பிடலாம். அதில் எந்தவித கெடுதலும் இல்லை. பப்பாளி, கொய்யா, திராட்சை, வெள்ளரிக்காய், வெண்ணை எடுத்த மோர் ஆகியவற்றை நன்றாக சாப்பிடலாம்.



இந்த பயிற்சி முகாமில் அவர்களுக்கு நா‌ங்க‌ள் க‌ற்று‌க் கொடு‌த்தபடி அவ‌ர்க‌ள் த‌ங்களது வா‌ழ்‌க்கை‌ முறை‌யி‌ல் கடைப்பிடிக்க வேண்டும். அறுவை ‌சி‌கி‌ச்சையை ‌விட இவ‌ற்றை கடை‌பிடி‌ப்பது எ‌ளிதானது எ‌ன்பதா‌ல் ப‌யி‌ற்‌சி‌க்கு வருகின்ற பெரும்பாலானவர்கள் இதனை‌க் கடைபிடித்து இருதய நோய் இன்றி நலமுடன் வாழ்கிறார்கள்.



ரத்தநாளத்தில் அடைப்பு உள்ளவர்கள் அடைப்பு நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். அதற்கு முக்கிய காரணம் எண்ணை இல்லாமல் சாப்பிடுவதே ஆகும் எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

நெட் பைத்தியமா? சிகிச்சை தேவை

பலரு‌ம் க‌ணி‌னி மு‌ன் அம‌ர்‌ந்தா‌ல் உலகமே மற‌ந்து போ‌ய்‌விடு‌கிறது எ‌ன்று ம‌கி‌ழ்‌ச்‌சியாக‌க் கூறு‌ம் கால‌ம் போ‌ய், க‌‌ணி‌னி மு‌ன் அம‌ர்‌ந்து உலக‌த்தையே மற‌ந்து‌வி‌ட்டவ‌ர்க‌ள் அ‌திக‌ரி‌த்து வரு‌ம் கால‌ம் இது.




இ‌ந்த நெ‌‌ட் பை‌த்‌திய‌ங்களா‌ல் பண‌ம் ச‌ம்பா‌தி‌ப்பது நெ‌ட் செ‌‌ன்ட‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, நெ‌ட் பை‌த்‌திய‌ங்களு‌க்கு ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌‌க்‌கிறோ‌ம் எ‌ன்று அமெ‌ரி‌க்கா‌வி‌ல் ஒரு மைய‌ம் ஆர‌ம்‌பி‌த்து‌வி‌ட்டது ‌வியாபார‌த்தை.



இணைய‌ம் ப‌ற்‌றி வகு‌ப்பு எடு‌த்து ச‌ம்பா‌தி‌த்தவ‌ர்களு‌க்கு இப‌்போது வேலை இ‌ல்லை. அ‌ந்த ‌நிலை மா‌றி அதில் அடிமையாகிக் கிடப்போரை மீட்பதற்கான சிகிச்சை மையம் ஏற்படுத்தும் நிலை வந்து விட்டது. அமெரிக்காவில் முதலாவது மையம் இப்போது பணியை தொடங்கியுள்ளது.



எப்போதும் இணைய‌த்‌தி‌ல் எதையாவது செ‌ய்து கொ‌ண்டு க‌ணி‌னி முன் ‌சிலையாக‌க் கிடப்பவர்களுக்கு இன்டர்நெட் அடி‌க்ச‌ன் சின்ட்ரோம் (ஐஏடி) என்ற மனநோய் ஏற்படுகிறதாம்.



இதுபோன்றவ‌‌ர்களு‌க்கு மனநோய் பாதிப்பில் இருந்து மீட்பதற்கென அமெரிக்காவின் ஹெவன்ஸ்பீல்டு மறுவாழ்வு அமைப்பு, முதல்முறையாக ஒரு ஐஏடி மீட்பு மையத்தைத் தொடங்கியுள்ளது. இ‌ந்த ‌சி‌கி‌ச்சை‌க்கு பெ‌ய‌ர் எ‌ன்ன‌த் தெ‌ரியுமா? ‌ரீ-‌ஸ்டா‌ர்‌ட் எ‌ன்பதுதா‌ன். க‌ணி‌னியா‌ல் ஹே‌ங்‌க் ஆ‌‌கி‌ப் போனவ‌ர்களு‌க்கு ரீ-ஸ்டார்ட் எ‌ன்ற இ‌ந்த ‌சி‌கி‌ச்சை 45 நாட்கள் அளிக்கப்படும்.



இதுபற்றி ரீ-ஸ்டார்ட் இணை நிறுவனர், மனவியல் நிபுணர் மரு‌த்துவ‌ர் லாரி கேஷ் கூறுகையில், இணைய‌ம் துவ‌ங்‌கிய‌ப் ‌பிறகு ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளு‌ம் துவ‌ங்‌கி‌வி‌ட்டன. சமூக மா‌ற்ற‌ங்களு‌ம் ஏ‌ற்ப‌ட்டுவ‌ி‌ட்டன. இ‌தி‌ல் இணைய‌த்தை ஒரு வரைமுறை‌யி‌ல் வை‌த்‌திரு‌ப்பவ‌ர்க‌ள் ம‌ட்டுமே த‌ப்‌பி‌க்‌கி‌ன்றன‌ர். அ‌ப்படி த‌ப்‌பி‌க்க முடியாதவ‌ர்களு‌க்கு இ‌ங்கு ‌‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்றா‌ர்.





webdunia photoWDஇ‌ந்த மைய‌த்‌தி‌ல் ஒரே நேரத்தில் 2 முதல் 6 பேர் வரை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பெறலாம். அங்கு சேர்பவர்களை இன்டர்நெட், ‌வீடியோ/க‌ணி‌னி ‌விளையா‌ட்டுக‌ளி‌ல் இருந்து 45 நாளும் பிரித்து வைப்பதுதான் முதல் வேலையாம். பிறகு, உடற்பயிற்சி, பாராயணம், யோகா, பிரசங்கம், மசாஜ், நடை‌ப் ப‌யி‌ற்‌சி, கல‌ந்தா‌‌ய்வு என பல க‌ட்ட ‌சி‌கி‌ச்சைக‌ள் உண்டு. இத‌ற்கென உ‌ள்ள சிகிச்சை நிபுணர்கள், பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களை‌த் த‌னி‌த்த‌னியாக கவ‌னி‌க்‌கிறா‌ர்க‌ள்.



ஆனா‌ல் நெ‌ட் பை‌த்‌திய‌ம் ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு முழு‌ப் பை‌த்‌திய‌ம் ஆ‌கி‌விடு‌ம், இத‌ற்கான க‌ட்டண‌த்தை‌க் கே‌ட்டா‌ல். ஆ‌ம்.. ஒ‌ன்றரை மாத‌த்‌தி‌ற்கு அதாவது 45 நா‌‌ட்களு‌க்கு ரூ.6.75 ல‌ட்சமா‌ம்.



அ‌ம்மாடியோ‌வ்...




இ‌ந்த க‌ட்டண‌த்தை‌க் கே‌ட்ட ‌பிறகு தலை லேசாக சு‌ற்று‌ம். எனவே ‌நீ‌ங்களாகவே நெ‌‌ட்டி‌ல் இரு‌ந்து ‌ஓரள‌வி‌ற்கு ‌வில‌கி‌க் கொ‌ள்ளலா‌ம் அ‌ல்லவா? அத‌ற்காக எ‌ங்க‌ள் இணைய‌ தளத்தை‌ப் பா‌ர்‌ப்பதை த‌வி‌ர்‌க்க வே‌ண்டா‌ம். அதை‌ப் பா‌ர்‌த்தா‌ல்தானே இ‌ப்படியெ‌ல்லா‌ம் ‌பிர‌ச்‌சினை இரு‌க்‌கிறது எ‌‌ன்று உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரிய வரு‌ம். எ‌ன்ன நா‌ன் சொ‌ல்வது?

மன அளவில் பாதிக்கப்பட்ட ஊளியர்களுக்கு

பொருளாதார நெரு‌க்கடி காரணமாக வேலை ப‌றிபோகுமோ எ‌ன்ற அ‌ச்ச‌த்‌திலேயே வேலை செ‌‌ய்யு‌ம் ஊ‌ழிய‌ர்க‌‌ள் மன அள‌வி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு இரு‌ப்பதா‌ல் அவ‌ர்களது உட‌ல்‌நிலையு‌ம் மோசமா‌கிறது எ‌ன்று மரு‌த்துவ ஆ‌ய்வு ஒ‌ன்று தெ‌ரி‌வி‌க்‌கிறது.






webdunia photoWDஅமெரிக்காவில் நிதி நெருக்கடி தொடங்கியது முதல் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். இதனால் எஞ்சியுள்ளவர்கள் வேலை பறிபோ‌ய்‌விடுமோ அ‌ல்லது த‌ங்களது ‌நிறுவன‌த்தை மூடி‌விடுவா‌ர்களோ எ‌ன்ற அச்சத்தில் உள்ளனர்.



அவர்களது மனநிலை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் பற்றி மிச்சிகன் பல்கலைக்கழக சமூகவியல் துறை ஆய்வு நடத்தியது. அதில், நிதி நெருக்கடிக்குப் பிறகு அமெரிக்க தொழிலாளர் சந்தையில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முதலாளி - தொழிலாளி இடையேயான இணைப்புகள் பலவீனம் அடைந்து விட்டன. வேலை போகும் அச்சத்தில் ஊழியர்க‌ள் பலரு‌ம் உள்ளனர்.



வேலை இழந்தவர்களைப் பார்த்த மற்றவர்களுக்கு தங்கள் வேலை பற்றிய அச்சம் அதிகரித்து விட்டது. அவர்களில் பலர் அடிக்கடி உடல்நலம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு மரு‌த்துவமனை‌க்கு செ‌ன்று‌ள்ளன‌ர். அவ‌ர்களது உட‌ல்‌நிலை பாதிக்கப்பட்டதற்கு மனநிலையே காரணம். வேலை பற்றிய அச்சம், ஊழியரின் உடல்நலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.



வேலையில் பாதுகாப்பின்மையால் ஊழியர்கள் மது, புகைப் பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகின்றன. இவையும் அவர்கள் உடல்நல பாதிப்புக்கு காரணமாகிறது. குடும்ப எதிர்காலம், பணத் தேவை ஆகியவை குறித்து நிரந்தர வேலையில்லாத ஊழியர்கள் மனதில் கேள்விக் குறி எழுகிறது. இதுவும் அவர்கள் ஆரோக்கியம் கெடக் காரணமாகிறது.



ஆய்வில் பங்கேற்ற சுமார் 1,700 பேரில் 18 சதவீதத்தினர் வேலை பறிபோகும் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்தனர். அவர்களை சோதனை செய்ததில் அடிக்கடி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளது தெரிய வந்தது எ‌ன்று ஆ‌ய்வு தெ‌ரி‌வி‌க்‌கிறது.