திங்கள், 24 ஜனவரி, 2011

இண்டர்நெட்டில்





நல்லது அதிகம் கெட்டது கொஞ்சம்

சோஷியல் நெட்வொர்க்கிங் என்று சொல்லப்படும் ஆர்க்குட் , பேஸ்பக் போன்ற சமூக வலைத்தளங்களில்  எவ்வளவோ நல்ல விஷயங்கள் உள்ளன நல்ல எண்ணத்தில் பரிமாறப்படும் தகவல்கள் படங்களைத் திரித்து தவறாக பயன்படுத்துவோர் வெகு சிலர் தான்.அவர்களை தண்டிக்க சட்டம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் படித்த சக மாணவ,மாணவியை தொடர்பு கொள்ள வேண்டுமானால் இதில் போய்  பள்ளி பெயரை நாம் படித்த ஆண்டையும் பதிவு செய்தால் போதும் உங்கள் அன்றை நண்பர்களில் சிலர் கண்டிப்பாக சிக்குவார்கள் .இப்படி நண்பர்களை உறவினர்களை தேடிக் கண்டுபிடித்து மீண்டும் உறவை நட்பை தொடரச்செய்ய முடிகிறது என்றால் இன்னொறு பக்கம் நம் கருத்துக்களையும் பதிவு செய்ய முடியும் பொது விசயமாக இருந்தாலும் தனிப்பட்ட விசயமாக இருந்தாலும் மனதில் உள்ளவற்றை கொட்டி தீர்க்க இந்த பக்கங்களை பயன்படுத்துகின்றனர்.நம் ஆதங்கத்தை கொட்டவும் முடிகிறது அதே கரத்தை கொண்டவர்களின் அறிமுகமும் கிடைக்கின்றது ஆனால் பொத விசயங்களை பரிமாரிக் கொள்கின்ற போது கட்டுப்பாடு தேவை .தனிப்பட்ட விமர்ச்சனங்கள் சட்ட சிக்கல்களில் கொண்டு போய் விடும்.ப்ளாக் எனும் நம் வலைப்புக்களும் இதில் அடங்கும்.







முதல் ப்ளாக் கிரிமினல்

சைபர் க்ரைமில் எத்தனையோ விதங்கள் உண்டு கண்டபடித் திட்டித்தீர்ப்பது முதல் அடுத்தவர் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடுவது வரை சொல்லலாம் .முதன் முதலாக ப்ளாக் விஷமத்தில் இறங்கி இன்னொரு பெண்ணுக்கு அவமானத்தைத் தேடி தந்தவன் சிக்கியது  2001 ல் தான் .மனிஷ்கதுாரியா என்பவன் ரித்து என்ற பெண்ணின் பெயரை தவறாக பயன்படுத்தி ரித்து படங்களை போன் இமெயில் முகவரியைப் பதிவு செய்து ரித்து படங்களை திரித்து ஆபாசமாக வெளியிட்டான் பழிவாங்குவதற்காக இப்படி செய்தவன் சில நாட்களில் பிடிபட்டான் ப்ளாக் கிரிமினல் நடவடிக்கையில் முதன்முதலாக பிடிபட்டவன் இவன் தான்

கொட்டித் தீர்..... பழி தீர்க்காதே 

நட்பு வட்டத்திற்கு மட்டும் தெரியும் வகையில் ப்ளாக்குகளில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் இளைய தலைமுறையினர் பலர் உள்ளனர். இந்தக் கருத்து பரிமாற்றம் நட்பு வட்டத்துடன் முடிந்து விடும் தேவையில்லாமல் சர்ச்சையை கிளம்பாது இதில் கோபம் மகிழ்ச்சி வருத்தம் எல்லாம் இருக்கும் ஆனால் பழி தீர்க்கும் நெடி இருக்காது பழி தீர்க்க ப்ளாக்குகளை பயன்படுத்தாமல் கருத்துக்களை வெளிப்படையாக சொல்ல பயன்படுத்தலாம்  அரசியலில் லாலு முதல் நடிப்பில் அமிர்தாப் வரை பல பிரபலங்களும் ப்ளாக் வைத்துள்ளனர்  அவ்வபோது தங்களின் கருத்துக்களை பதிவு செய்கின்றனர் இப்படி நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம் உறவை நட்பை பேனுவோம்

தமிழனின் உயிர் 5 லட்சம்

தமிழனின் உயிர் 5 லட்சம் என்று உலகிற்க்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு இதில் கேவளம் என்னவென்றால் இது தமிழன்நாடு பாண்டியன் எனும் மீனவன் படுகொலை நடந்து சில நாட்களுக்குள் மீண்டும் ஜெயக்குமார் எனும் மீனவனின் படுகொலை சிங்கள ரத்த வெறிபிடித்த ராணுவ கொலைகாரனின் அட்டுழியம் மீண்டும் என்ன செய்து கொண்டு இருக்கிறது தமிழக அரசு (இந்திய அரசுக்குத்தான் தமிழன் மீது என்னவெறுப்போ தெரியவில்லை ஈழத்தமிழனையும் கொல்ல துணைநின்று இன்று இந்த தமிழனையும் கொல்ல துணை நிக்கின்றது )

மதிப்பிற்க்குறிய கலைஞர் ஜயா அவர்களே உங்கள் உறவுகளுக்கு (குடும்ப) கடந்த முறை எப்போதெல்லாம் காங்கிரஸ் அரசால் பிரச்சனைகள் வந்ததோ(அந்த பிரச்சனைகளை ஆசாய்ந்து பார்த்தால் ஜந்து பைசா ப்ரோசனம் இல்லாதவைகள்) அப்போதல்லாம் எம்.பிக்கள் ராஜினமா எனும் அயுதம் கொண்டு மிரட்டி உங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொண்டிர்கள் ஆனால் இப்போது ஈழத்தமிழனை கொன்று குவித்தபோதும் சரி இந்த மறத்தமிழனையும் கொன்று குவிக்கப்படும் போது மவுனம் சாதிப்பதேன் தங்களிடம் கேட்டால் கடிதம் எழுதிவுள்ளேன் என்று அறிக்கைவிடுகின்றீர்கள் கடந்த முறை தங்கள் குடும்ப உறவுகளுக்கு சிக்கல் வந்த போதெல்லாம் கடிதம் எழுதாமல் சில மணித்துளிகளில் எப்படி தங்களின் என்னங்களை சாதித்தீர்களோ அந்த ஆயுதம் கொண்டு உடனே நீங்கள் இந்த செயலுக்கு தீர்வு காணாவிடில் ஓட்டுப்போட ஒரு தமிழனும் இருக்க மாட்டான் 

சோம்பேறி கண்..குழந்தைகளை தாக்கும் அபாயம்


பெயருக்கு ஏற்றபடி வித்தியாசமான பிரச்சனைதான் இது. ஆங்கிலத்தில் இதை Amblyopia அல்லது  Lazy eye என்று சொல்கிறோம்.பிறந்த குழந்தைகளை பாதிக்கிற இதை சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சையளிக்க தவறினால் பார்வையே பறி போகும் அபாயம் ஏற்படலாம்.
பிறந்த குழந்தைகளுக்கு பார்வையில் முன்னேற்றம் வர வேண்டுமென்றால் பார்வையில் படுகிற  காட்சிகளை துல்லியமாக பார்க்க வேண்டும் பச்சிளங் குழந்தை எதை எப்படி பார்க்கிறது என்பதை மற்றவரால் சொல்ல முடியாது. குழந்தையின் பார்வையில் முன்னேற்றம் ஆரம்பிக்கிறது இந்தக் கட்டத்தில் உண்டாகிற பாதிப்புகளால் அதற்கு முழுமையான பார்வையே வராமல் போகலாம்.
மாறுகண்,பார்வைக்கோளாறு, கேட்டராக்ட்,ஒருகண் மட்டும் கீழே இறங்கியது மாதிரி இருப்பது,வெளிச்சம் உள்ளே போகாதது என எது வேண்டுமானாலும் இந்த பிரச்சனையின் வெளிப்பாடுகளாக இருக்கலாம்.
ஒரு கண்ணில் பார்வை தெளிவாக இருக்கலாம் மறு கண்ணில் தெளிவு இருக்காது.அதனால் இரண்டு கண்களும் ஒன்றாக ஃபோகஸ் ஆகாது,அந்த ஒரு கண்ணை மட்டும் உபயோகிக்கத் தொடங்கும் குழந்தை மூளையும் அதற்கேற்றபடி ஒரு கண்ணால் மட்டுமே பார்ப்பதையும் பழக்கப்படுத்திக் கொள்ளும் இது தான் சோம்பேறிக்கண்.
இதன் அறிகுறிகள் வெளிப்படையாக தெரியாது என்பதால் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையாக இருந்தால் கண்களைப் பரிசோதிப்பது அவசியம் மாறு கண் இருப்பது தெரிந்தால் 2 வருடங்களுக்குள் அறுவை சிகிச்சை மூலம் அதை சரி செய்தாக வேண்டும் காலம் கடந்த சிகிச்கையால் பார்வை வராமலே போகக் கூடும்.
குழந்தையின் நடையில் வித்தியாசம் தெரிந்தாலோ மிக அருகில் உட்கார்ந்து டி.வி பார்த்தாலோ அடிக்கடி தலைவலப்பதாக சொன்னாலோ உடனடியாக கண் மருத்துவரைப் பார்க்க வேண்டும் சில குழந்தைகளுக்கு ஓரு கண்ணில் அதிகப் பவரும் மறு கண்ணில் குறைந்நத பவரும் இருக்கலாம் இதை கண்டுபிடித்து குறைந்த பவர் உள்ள கண்ணை கண்ணாடி போட்டு உபயோகிக்க செய்ய வேண்டும் இரண்டு கண்களின் பார்வையும் சமமாக்கச் செய்கிற பயிற்சியை அந்தக் குழந்தைக்கு தினம் சில மணி நேரம் கொடுக்க வேண்டியிருக்கும்
ஒரு கண் கீழே இறங்கி இருப்பது தெரிந்தால் அதை துாக்கி சரி செய்கிற அறுவை சிகிச்சை தேவைப்படலாம்  பொதுவாக 10 முதல் 12 வயதில் பார்வையின் வளர்ச்சியானது நின்று போய்விடும் எனவே அதன் பிறகு செய்யப்படுகிற சிகிச்சை முழுப் பலனைத் தராது என்பதால் எத்தனை சீக்கிரம் முடியுமோ  அவ்வளவு விரைவாகக் கண்டுபிடித்து சிகிச்சையை ஆரம்பிப்பதே புத்திசாலித்தனம்.

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

காதலித்தால் வலி மாயமாகும்.................


காதலித்தால் இதயம் இடம் மாறித்துடிக்கும் இடது புறத்திலே.......என அறிவியலுக்கு சவால் விடுகிறது ஒரு பாடல். இந்த கற்பனைகள் சாத்தியமா என்று யோசிக்கும் போதே... தீவிரமான காதல் வலியை நீக்கி சுகமான துாக்கத்தை தருகின்றது மன வலி மட்டுமள்ள உடல் வலியும் மாயமாய் மறைகிறது என்கிறார் அமெரிக்க விஞ்ஞானிகள்.
அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்காக 15 கல்லுாரி இளசுகள் தேர்வுசெய்யப்பட்டார்கள். 7 ஆண்கள் 8 பெண்கள் இவர்கள் கைகளில் சூடு போட்டார்கள் சூடு போட்ட கையோடு அவர்கள் காதலிக்கும் நபர்களின் போட்டாவைக் கையில் கொடுத்தார்கள்  அதன் பிறகு அவர்களுடைய மூளையில் ஏற்படும் மாற்றங்களை எம்.ஆர்.ஜ. ஸ்கேன் மூலம் பதிவு செய்தார்கள்  காதலர்களின் போட்டாவை பார்த்தபடி இருந்தவர்களுக்கு வலியே இல்லை என்பது ஆய்வில் தெரிய வந்தது காதலிப்பவர்களின் மூளை காதலிலேயே மூழ்கியிருப்பதால் அவர்களால்  வலியை உணர முடியவில்லை என்கிறார் டாக்டர் மாக்கே.
சில காதல்களில் அடி கூட வாங்க வேண்டியிருக்கும் இப்படி ஒரு வசதியை இயற்கையே செய்திருப்பதால் கடவுளுக்கு நன்றி சொல்லலாம் ..... அதெல்லாம் சரி ...நண்பணின் காதலுக்காக அடி வாங்கினால் வலிக்குமா வலிக்காதா......?

எது உண்மை நக்கீரனுக்கு ஒரு கேள்வி......?

இலங்கையில் கடுமையான போர் நடந்துகொண்டு இருந்த போது நமது தமிழிழ தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு உலகிற்கு அறிவித்த போது(இது உண்மை என என்னை போன்ற தமிழர்கள் இது வரை நம்பவில்லை என்பது வேறு விசயம்) நக்கீரன் வார இதழ் பிரபாகரன் உயிருடன் தான் உள்ளார் என 2009 மே 23 அன்று அவரின் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தது (படத்தினை பார்க்க )
       இது தான் உண்மை என்று 20.12.2010 மாலை 5.30 வரை நம்பியிருந்த எனக்கு இணையத்தில் உலா வந்த போது தமிழரங்கம் இணையதளம்  வெளியிட்டு இருந்த செய்திபெரும் குண்டை என் தலையில் போட்டது அதன் செய்தி தொகுப்பு
()
திட்டமிட்ட சதி மூலம் புலித்தலைமையும், அவர்கள் குடும்பமும் முற்றாக சரணடைய வைத்தே அழிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் எஞ்சி இருந்ததாக நம்பப்படும் 2000 போராளிகளுக்கு கூட, இதுதான் கதி. இந்தச் சதி மூலமான சரணடைவின் பின், சித்திரவதைக் கூடங்களில் இன்னமும் சில தலைவர்கள் சிக்கி மரணிக்கின்றனர் என்பது வேதனையானது.

இந்த சதி வலையின் முன் பக்க பரிணாமத்தை நன்கு தெரிந்தவர்கள், இதை வழி நடத்தியவர்கள். சரணடைய வைத்து, இந்த துரோகத்தை முழுமையாக வழி நடத்தியவர்கள் தான், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கதை சொல்கின்றனர். உண்மையில் புலித்தலைமையை விட்டில் பூச்சியாக்கிய அரசியல், அதன் பின்னணி என்பது துரோகத்தாலானது.

இந்தச் சதி நன்கு திட்டமிட்டு திணிக்கப்பட்டது. இந்த துரோகம் வெளித்தெரியாது இருக்க, புலித் தலைவரை உயிருடன் இருப்பதாக கூறுவதன் மூலம், துரோகிகளே இன்று புலித் தலைமையாகியுள்ளது.

யார் இதை நன்கு திட்டமிட்டு சரணடைய வைத்தனரோ, அவர்கள் தாங்கள் செய்த துரோகத்தை தலைவர் இருப்பதாக கூறி இன்று மூடிமறைகின்றனர்.

தங்களைத் தாங்களே இராணுவத்திடம் ஓப்படைத்து பலியான அந்த புலி அரசியல் அடிப்படை என்ன? தனிமனித வழிபாடும், சர்வாதிகாரமும் மேலோங்கிய ஒரு அமைப்பு, இதற்கு வெளியில் சிந்திக்கவும் செயலாற்றவும் அவர்களால் முடியவில்லை. தான் சரியாக இருப்பதாகக் கருதிக்கொண்டு, தன்னைத்தானே பலி கொடுத்துள்ளது. இதைத்தான் நோர்வே சமாதான முகவர்  எரிக்சூல்கெய்ம், எதையும் சிந்திக்கும் நிலையில் பிரபாகரன் இருக்கவில்லை என்கின்றார்.

இந்த சதிக்கு உதவியது, மாபியாக் குழுக்களுக்கு இருக்கக் கூடிய விசுவாசம் தான். அதைக் கைவிடும் போது, அது உள்ளிருந்தே கழுத்தறுக்கின்றது.

இன்று புலிப் போராட்டங்கள், நம்பிக்கைகள், விசுவாசங்கள் அனைத்தும் மந்தைத்தனத்தை அடிப்படையாக கொண்டது. புலித்தலைமை மக்களை வெறும் மந்தையாக பயன்படுத்தியது. இதில் துயரம் என்னவென்றால், அதே மந்தைத் தனத்தடன் புலித்தலைமை  இலங்கை அரசிடம் சரணடைந்து பலியானதுதான்.

மந்தைத்தனம் தலைமை வரை புரையோடிக் கிடந்தது. இது தன்னைத்தானே பலியிட அழைத்துச் சென்றது. மூன்றாம் தர மாபியாக்கள், இலகுவாக கழுத்தறுக்க முடிந்தது. இடைக் காலத்தில் தப்பி செல்ல முற்படா வண்ணம், அவர்களுக்கு ஒரு மூன்றாம் தரப்பு பற்றிய நம்பிக்கையை ஊட்டி, அவர்களை சுற்றிவளைக்கப் பண்ணிய பின் அதுதான் இது என்று சரணடைவை வைத்து கழுத்தறுத்துள்ளனர். மக்களை முட்டாளாக்கி மந்தையாக்கிய புலியின் பின், இந்தத் துரோகம் இலகுவாக ப+சி மெழுக முடிந்துள்ளது.  

மக்கள் எவ்வளவு முட்டாளாக மந்தைகளாக உள்ளனர் என்பதை பார்க்க, நக்கீரன் வெளியிட்ட மோசடிப் படத்தை புலி கொண்டாடிய விதம் நல்ல எடுத்துக்காட்டு. ஒரு நாள் கூட அந்த படம் உயிர் வாழமுடியாது போனது. பாலசிங்கத்துடன் அமர்ந்து இருந்து பிரபாகரன் உரையாடும் அந்தப் படத்தை வைத்து, நக்கீரன் அரங்கேற்றிய மோசடி அம்பலமாகின்றது. மக்களை மந்தையாக்கி, அதை நம்பவைத்து நக்கீரன் போன்ற  பணம் சம்பாதிக்கின்றனர். ஒரு விடுதலைப் போராட்டத்தில் பல மாபியாக்கள். இறந்தவர்களை வைத்து பிழைப்பு.
 

இப்படி மக்களை மந்தையாக்கிய புலிகள், அந்த வழியிலேயே சரணடைய வைத்து பலியிடப்பட்டனர். மாற்று அபிப்பிராயம் எதுவும் எழுப்ப முடியாத ஒரு அமைப்பில், சரணடைவைத் தவிர வேறு வழியில்லை என்பதை பிரபாகரனை ஏற்க வைக்க, பத்மநாதனுக்கு 4 மணி நேரம் தேவைப்பட்டது. நாலு மணி நேரம் தான் இப்போது தான் உரையாடியதாக கூறியது இதையே தான்.

இங்கு இந்த சரணடைவை ஏற்க வைக்க, நம்பிக்கை உருவாக்க சில நாடகங்கள் போதுமானதாக இருந்தது. சரணடைவு அரங்கேறிய இடத்தில், இதை நம்பவைக்கும் வண்ணம் அன்னிய (வெள்ளை நிறம் கொண்டோர்) சக்திகள் நிச்சயமாக இருந்திருப்பர் என்பது உண்மை. இந்திய றோ உள்ளிட்ட அதிகாரிகள் இந்த இடத்தில் இருந்தது கசிகின்றது.

நம்பிக்கை மோசடி மூலமான சரணடைவை வைத்த பின், ஒவ்வொருவராக கொல்லுகின்ற சம்பவம் மனதை உலுக்கக் கூடியவை. இதையே புலிகள் முன்பு தாமல்லாத பலருக்கு செய்தவர்கள் தான். பேச்சுவார்த்தைக்கு வருமாறு மாற்றியக்க குழுக்களை அழைத்து வரும் வழியில் கிளைமோர் மூலம் கொன்றவர்கள். என் சொந்த அனுபவத்தில், என் நெற்றிப்பொட்டில், என் வாய்க்கு துவக்கை திணித்து விசையை இயக்கி மிரட்டியவர்கள் தான். குண்டு இல்லாததால் மரணிக்கவில்லை, ஆனால் மரணம் வந்து போகும்.

இதே நிலையில் நிறுத்தி புலித்தலைவர்கள் கொல்லப்படுவதை எண்ணும் போது வேதனையானது. துரோகத்தை தம் மோசடி மூலம் ஏமாற்றி, அனைவரையும் குடும்பம் குடும்பமாக பலிகொடுத்த அந்த நிகழ்வு இன்று மூடிமறைக்கப்படுகின்றது. தம் துரோகத்தை மூடிமறைக்கும் ஒரு கூட்டுச்சதி மூலம், புலிகள் இயக்கத்தையே இட்டுச்செல்ல முனைகின்றனர்.

மக்களின் மந்தைத்தனத்தை மூலதனமாகக் கொண்டு, தனிமனித சர்வாதிகார வழியைப் பின்பற்றியே அனைத்தையும் கட்டமைக்கின்றனர். பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்ற மோசடி மூலம், தம் தலைமைக்கு தாம் செய்த படுதுரோகத்தில் இருந்து தப்பிப்பிழைக்க முனைகின்றனர்.

உண்மையில் பிரபாகரனுக்கு எந்த சூழலில் என்ன நடந்தது என்று தெரிய வந்தால், இது எப்படி என்ற கேள்வி எழும். இலங்கை அரசின் கையில் சரணடைய வைத்த இந்த துரோகத்தை வழிநடத்திய துரோகிகளுக்கு எதிரான உணர்வாக மாறுவதைத் தடுக்க, பிரபாகரனை உயிருடன் இருப்பதாக அவரை காட்டிக்கொடுத்து கொன்ற துரோகிகளே சொல்லுகின்றனர். மக்களுக்கு இந்த உண்மை தெரியவராது என்று, இந்த துரோகிகள் கனவு காண்கின்றனர்.
                                                                       () 
இந்த செய்தி மே 23 அன்று எனது வலைப்புவில் வெளியிட்டு இருந்தேன்.
 
அதே நக்கீரன் இப்போது தலைவர் உயிருடன் தான் உள்ளார் என சில நாட்களுக்கு முன் செய்தி வெளியிட்டு இருந்தது.அந்த இதழை வாங்கி படிப்பத்து அச்செய்தியை உண்மை என உறுதி செய்ய நக்கீரன் இதழ் மீது நம்பிக்கை இல்லை ( இதே செய்தியை வேறு இதழ் வெளியிட்டுருந்தாள் கண்டிப்பாக வாங்கி படித்து இருப்பேன் ) வெள்ளி அன்று இணையத்தில் உலா வரும் போது அதிகாலை இணையம் பிரபாகரன் உயிருடன் உள்ளார் எனும் தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தது அதனை படித்த பின்பு தான் அது நக்கீரன் இதழில் வந்த செய்தி என்று அறிந்தேன் அந்த கட்டுரை இது தான்-(

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்!?

விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?' என்கிற கேள்வி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கேள்வியாக உள்ளது. தமிழகத்திற்கு வரும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள், "பிரபாகரனா? அவர் இறந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான அவர் இறந்துவிட்டார் என இறப்புச் சான்றிதழை இலங்கை அரசிடமிருந்து பெற்று சி.பி.ஐ. தாக்கல் செய்துவிட்டது'' என எகத்தாளமாக பதில் சொல்கிறார்கள்.
Image
தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு தலைவர்களான நெடுமாறனும், வைகோவும், "பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்'' என்று ஓங்கி அடித்துச் சொல்கிறார்கள். இந்நிலையில் பிரபாகரனைப் பற்றிய தகவல்களுடன் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இயக்கத் தலைவரை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள் என்கிற ரகசிய தகவல் நமக்கு வர... உடனடியாக புலனாய்வில் இறங்கினோம். அந்தச் சந்திப்பு நடந்த இடம் சென்னையில் உள்ள அண்ணா சர்வதேச விமான நிலையம் என்றதும், அங்கு பல நிலைகளில் வேலை செய்யும் ஊழியர்களையும், ஈழ ஆதரவு பிரமுகர்களையும் தொடர்பு கொண்டோம்.

"சுமார் இருபத்தைந்து நாட்களுக்கு முன்பு கொங்கு மண்டலமான சேலம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஈழ ஆதரவு தலைவர் ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். இலங்கையிலிருந்து விமானத்தில் வந்திருந்த ஒரு பெண்ணையும் ஆணையும் விமான நிலையத்திலிருந்து அழைத்துக்கொண்டு போய் பேசினார். அந்தப் பெண் நடுத்தர வயதைச் சேர்ந்தவர். அவருடன் வந்த ஆணிற்கு இரண்டு கைகளும் இல்லை. ஏதோ ஒரு வெடிகுண்டுத் தாக்குதலில் அந்த நபர் கைகளை இழந்திருப்பார் என பார்க்கும்போது தெரிந்தது.

சுமார் 30 நிமிடங்கள் அந்த பிரமுகருடன் பேசிக்கொண்டிருந்த அவர்கள், அதன்பிறகு மேற்கத்திய நாடுகளுக்குப் போகும் விமானத்தில் ஏறிப் பறந்தார்கள். பொதுவாக இலங்கையிலிருந்து வரும் விமானங்களை சிறப்பாக கண்காணிப்பதற்கெனவே ஏர்போர்ட்டில் சுற்றி வரும் மத்திய உளவுத்துறையும், அயல்நாடுகளில் துப்பறியும் "ரா' அமைப்பும் இந்தச் சந்திப்பைப் பற்றி மிகவும் லேட்டாகத்தான் கண்டுபிடித்தார்கள். அவர்கள் போய் இலங்கை விமானப் பயணிகளின் லிஸ்ட்டை செக் செய்தார்கள். அதற்குள் வந்தவர்கள் பறந்துவிட்டார்கள். அந்தச் சந்திப்பு பற்றிய விபரங்களை அறிய தமிழகம், இலங்கை என அவர்கள் களம் புகுந்த பிறகுதான் அந்தச் சந்திப்பு வெளியுலகத்திற்குத் தெரிய ஆரம்பித்தது'' என்கிறது விமான நிலைய வட்டாரங்கள்.

இந்தியாவின் இரு பெரும் புலனாய்வு நிறுவனங்களுக்குப் போட்டியாக நாம் நமது தேடலை விரிவுபடுத்தினோம். ஒரு பெரிய பொக்கிஷமே நமக்கு விடையாகக் கிடைத்தது. ஈழ யுத்தத்தில் மிகப் பிரபலமான பெயர் ரூபன். இவர் இலங்கை ராணுவ விமானப் படைக்குப் போட்டியாக, விடுதலைப் புலிகளின் விமானத்தை இயக்கியவர். இலங்கை ராணுவத்துடன் நடைபெற்ற மோதலில் இவர் மரணமடைந்து மாவீரர் ஆகிவிட்டார். அவரது பெயரிலேயே இன்னொருவர் இருந்தார். அவர் சின்னரூபன் என அழைக்கப்பட்டார். தனது அன்புக்குப் பாத்திரமான சின்னரூபனை பிரபாகரன் மெய்க்காவல் படையில் இணைத்துக் கொண்டார். முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தத்தின் இறுதி நாட்களில் சின்னரூபன் என்ன ஆனார்? என தேடிய சொந்த பந்தங்களிடம் தெளிவாகவே சின்னரூபன்... "நான் தமிழீழக் கனவை நினைவாக்க மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களுடன் தப்பித்துச் சென்று கொண்டிருக்கிறேன். என்னை யாரும் தேடவேண்டாம். என்னோடு தொடர்பு கொள்ளவும் வேண்டாம்'' என்றார்.

சின்னரூபனின் பதிலைக் கேட்ட உறவினர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். "அடுத்தகட்ட போராட்டத்திற்கு வலுசேர்க்க தலைவர் பயணம் செய்கிறார். அவருடன் சின்னரூபனும் செல்கிறார்' என்கிற சந்தோஷத்திற்குப் பிறகு அவரிடமிருந்து அவர்களுக்கு எந்தத் தொடர்புமில்லை. கடந்த மாதம் சின்னரூபனிடமிருந்து ஒரு செய்தி அவர்களுக்கு வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஒரு ரகசியமான இடத்தில் சின்னரூபனை அவர்கள் சந்தித்திருக்கிறார்கள். "தலைவரும் நலம், நானும் நலம். சூழல் கூடி வரும்போது தலைவர் வெளியே வருவார்' என ரூபன் சொன்ன செய்தியைக் கேட்டு ஆனந்தக் கூத்தாடியிருக்கிறார்கள். அந்தத் தகவலை தமிழகத்திற்கு சொல்லிவிட்டு மேற்கத்திய நாடு ஒன்றுக்கு தப்பிச் சென்றுவிட்டார்கள். அவர்கள் சின்னரூபனின் அக்காவும், மற்றொரு ஆண் உறவினரும். முள்ளிவாய்க்கால் போரின்போது அவர்கள் சின்னரூபனுடன் தொடர்பிலேயே இருந்தவர்கள். அந்தப் போரில் காயம்பட்டவர்கள்.

இத்தனை கடுமையான தாக்குதல்கள், காயங்கள் இவைகளுக்கு நடுவே வேறு நாட்டிற்கு தப்பித்துப் போகும் சூழலிலும், நல்ல செய்தியை உலகம் அறியட்டும் என அந்த நம்பிக்கைக்குரிய தலைவரை மட்டும் சந்தித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். தமிழீழ வானத்தில் விடியலின் வெளிச்ச ரேகைகள் படரத் தொடங்கியிருக்கின்றன.


நன்றி : நக்கீரன்

நக்கீரன் இதழுக்கு ஒரு அன்பு வேண்டுகோள் இதில் எது உண்மை என்று எங்களுக்கு அறியப்படுத்தவும்
-நன்றி-
நண்பர்களே நீங்களும் எது உண்மை என ஆராய்ந்து உங்களது கருத்தீனை இங்கு பதியவும்
  

வெள்ளி, 7 ஜனவரி, 2011

சிறை மீண்டு சிகரம் நோக்கி...........



rpiw nrd;W kPz;L te;jtu;fSf;F Ntiy tha;g;gspj;J mtu;fs; tho;tpy; xspNaw;wp itf;fpwhu; xU ngz;kzp.

me;j ngz;Zf;F taJ 19.Xu; miwapy; Nki[apd; Kd; mku;e;jpUf;fpwhs; mUfpy; Xu; ngz;kzp.me;j miwf;Fs; Eiofpwhu; xUtu; mtUf;F [k;gJ tajpw;Fk; NkypUf;Fk; neLehs; rpiwapypUe;jjd; milahskha; jhbvg;gb ,Uf;Nfk;kh vd;fpwhu; ghrj;NjhL Fuy; jOjOf;f.

ey;yh ,Uf;Nfd; mts; Fuy; Ruj;jpd;wp xypf;fpwJ mtiu NeUf;F Neuha; ghu;g;gij jtpu;f;fpwhs; jhd; rpiwf;F nry;y Neu;e;j #oiy mtu; tpsf;fp nrhy;y mts; Kfk; khWfpwJ je;ijia cw;WNehf;fpathwpUe;j mts; tpopfspy; ePu; ngUfp mUtpaha; Xl je;ijAk; kfSk; ngUq;FunyLj;J mOfpwhu;fs; ,e;j re;jpg;gpw;F Vw;ghL nra;j ngz; mtu;fis jdpNa mo tpl;L je;ijiaAk; kfisAk; Nru;j;J itj;j epiwNthL ntspNa tUfpwhu; mtu; N\hghdh uNk\;.

N\hghdh uNk\; xU gujehl;ba fiyQu; Vuhykhd ehl;ba epfo;r;rpfs; elj;jpAs;shu; rpiwapypUe;J ntspNa te;j ifjpfs; thOk topawpahJ epw;ifapy; mtu;fSf;F jdJ epWtdj;jpy; gzpahw;w tha;gspf;fpwhu;.

rpiwf;ifjpfs; jz;lidf; fhyk; Kbe;J ntspNa tUk; NghJ rpiwapy; nra;j Ntiyf;fhf fpilj;j gzj;NjhL ntspNa tUfpwhu;fs; rpiwf;F nrd;W te;jtu;fSf;F ahu; Ntiy nfhLg;ghu;fs; te;j gpd;du; FLk;gq;fs; mtu;fis Vw;Wf;nfhs;tjpy; jaf;fk; fhl;Lk; epiyapy; me;j gzk; if nfhLf;Fk; mJ jPu;e;j gpd;. tho topapd;wp nrhe;j ge;jq;fs; midj;Jk; iftpl;l epiyapy; kPz;Lk; rKf tpNuhjr; nray;fisr; nra;J kPz;Lk; rpiwf;F nrd;W. ,g;gb rq;fpypj;njhluhf tho;f;ifia njhlu;gtu;fs; czL. rpiwia tpl;L ntspNa te;jTld; ,tu;fSf;F xU Ntiykl;Lk; vq;fhtJ fpilj;J tpl;lhy; ,tu;fs; rKf tpNuhjr; nray;fspy; <LgLtij jLf;fKbAk.; njupe;Nj jtW nra;J Fw;wthspahdtu;fs; re;ju;gr; #oy;fshy; Fw;wthspahdtu;fs; epughujpahf ,Ue;Jk; jz;bf;fg;gl;ltu;fs; MfpNahUk; rpiwf;ifjpfs; vd;w tiuaiwf;Fs; tUfpwhu;fs; mtu;fs; ,dpnahU Kiw rpiwf;Fr; nry;yhjgbf;F mtu;fSf;F fpilf;Fkhapd; mtu;fspd; tho;tpy;xspNaw;wg;gLk;. mg;gb xspNaw;Wk; Ntiyiaj;jhd; N\hgdh uNk\; nra;fpwhu;.

jdJ ];ngf;l;uh epWtdj;jpy; rpiwf;Fr; nrd;Wte;jtu;fSf;F Kd;Dupik mspj;J Nru;j;Jf;nfhs;fpwhu;. Vj;jidNah ifjpfSf;F kWtho;T mspj;J kPz;Lk; mtu;fs; Fw;wthspahfky; jLf;Fk; gzpia nra;J tUfpwhu; N\hgdh.

ehd; ,g;NghJ vd; gzpfis rpwg;ghfr; nra;fpNwd; vd;fpw epiwT vdf;F ,Uf;fpwJ. ehd; Nrit nra;atpy;iy. Vdf;F mtu;fs; Copau;fsha; ,Uf;fpwhu;fs; mjw;F ehd; Cjpak; nfhLf;fpNwd; mt;tsT jhd;. ,ijf;$l ehd; Vd; cq;fsplk; gfpu;e;Jnfhs;fpNwd; vd;why; ,ijg; ghu;j;J kw;wtu;fSf;Fk; Xu; ce;Jjy; Vw;gl;L mtu;fSfk; rpiwapypUe;J te;jtu;fspd; kWtho;Tf;F VjhtJ nra;a khl;lu;fsh vd;fpw Mtypy;jhd; vd;fpwhu; N\ghdh uNk\;.


















செவ்வாய், 4 ஜனவரி, 2011

வேர்ல்ட் விஷன்

கிராமங்களில் கல்வி கிடைக்காமல் வாடும் ஏழைக்குழந்தைகளுக்கு கல்வியறிவையுட்ட முனைப்போடு செயல்படும் அமைப்பு. இந்திய முழுவதும் ஒவ்வொரு கிராமத்திலும் வறுமையால் படிப்பை தொடர முடியாத குழந்தைகயை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவிகளை வழங்குகிறது. ஒரு குழந்தையை நாமே தத்தெடுத்து அவர்களுக்கு மாதம் தோறும் 600 ரூபாய் செலுத்துவதன் முலம். அநடத குழந்தையின் முன்னேற்றத்திற்கு உதவலாம்.இப்படி பல ஆயிரக்கணக்காண குழந்தைகளுக்கு தனித்தனியாக அவர்களுக்கான உதவிகளை நேரடியாகச் செய்கிறது இவ்வமைப்பு.

தொடர்பு முகவரி-

 வேர்ல்ட் விஷன் இந்தியா
16 வ.ஊ.சி.மெயின் ரோடு
கோடம்பாக்கம் சென்னை-24

தொலைப்பேசி-91-44-24807070

இணையமுகவரி-www.worldvision.in

லட்சியவாதியாய் மாற்றிய லாட்டரிச் சிறுமி

                           9790531456

வாள்பாறை அருகே வாழும் பழங்குடி இன மக்களில் அதிகபட்ச படிப்பாக ப்ளஸ் டு தேரியவர் சரஸ்வதி என்ற மாணவி .அடுத்து பி.காம்.படிக்க அவருக்கு விருப்பம் ஆனால் வறுமை காரணமாக  அதை தொடர முடியாத நிலை இதை செய்தித்தாள் மூலம் அறிந்த கடலுரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கிருஷ்ணராஜ் உடனே அந்த மாணவியின் குடும்பத்தினரைப் போய் சந்திக்கிறார் அதுவும் அவர்கள் வசிக்கும் சிங்கோனா செட்டில்மெண்ட் என்ற பகுதி வால்பாறையில் இருந்து காட்டுக்குள் பத்து கிலோ மீட்டர்  தூரம்வரை நடந்தே போக வேண்டிய தொலைவிலிருக்கும் மலைக்கிராமம்.

சரஸ்வதியையும் அவரது பெற்றோரையும் தன்னோடு அழைத்துக்கொண்டு வால்பாறை அரசு கலைக் கல்லூரி முதல்வரை சந்திக்கிறார் தன் சொந்த பணத்தை அந்த மாணவியின் கல்வி கட்டணமாக செலுத்தி அவரை பி.காம். பட்டபடிப்பில் சேர்த்துவிட்டு ஊர் திரும்புகிறார்.

சாரஸ்வதி மட்டுமல்ல கிருஷ்ணராஜால் கல்வி பெற்ற மாணவிகளின் பட்டியல் நீள்கிறது வடலூரில் ஆசிரியப் பயிற்சி பெறும் துளசி ஸ்ரீபெரும்புதூர் அறிஞர் அண்ணா எஞ்சினீயரிங் ; fy;Yupapy; gp.,. gapYk; fhkhl;rp nrd;id gilg;igapy; cs;s uhrp vQ;[pdPaupq; fy;Yupapy; gp.,. Kjyhz;L gapYk; jdnyl;Rkp flYu; gl;lhgf;fj;jpy; cs;s Nldp]; kp\d; fpwp];jtg; ngz;fs; Nky;epiyg;gs;spapy; gapYk; ehkf;fy;iyr; Nru;e;j ru];tjp rpjk;guk; mz;zhkiy Adptu;rpl;bapy; gp.fhk; gapYk; tp[p vd;W gy khztpfNshL [t;thJ kiyiar; Nru;e;j goq;Fb ,d khzt khztfs; rpyiuAk; ,e;j fpU\;zuh[; gbf;f itj;Jf; nfhz;LUf;fpwhu; KOf;f KOf;f jd; nrhe;j nrytpy;.



fle;j gj;jhz;Lfshf nra;jpjhs; டிtp %yk; ,g;gடிf; fy;tpf;fhf Vq;Fk; Vio khztu;fs; Fwpj;J jfty; fpilj;jhy; mq;F M[uhfp cjtpf;fuk; ePl;LtijNa jd; tho;ehspd; yl;rpakhf; nfhz;L nray;hLfpwhu; ,e;j Xa;T ngw;w Mrpupau;
vg;glp Njhd;wpaJ ,tUf;F ,e;jf; fy;tpr; Nrit kdg;ghd;ik
ehd; Mrpupauhf Mdjpy; ,Ue;Nj  Vio khztu;fSf;F Nel;L rhg;ghL Aனி/ghu;k; vd;W thq;fp jUNtd; Rkhu; gj;J tUlq;fSf;F Kd; Njdp khtl;lk; ngupaFsk; nrd;wpUe;Njd; me;j NgUe;J epiyaj;jpy; gj;J taJ rpWkp xUj;jp yhl;lup rPl;Lf;fistpw;Wf; nfhz;L ,Ue;jhs; vd;dplk; te;J me;j rPl;Lf;fis thq;fpf;nfhs;SkhW Nfl;lhs; ,g;gடி gடிf;fpw taRy ,e;j Ntiy nra;J nfhz;டிUf;fpwhNa vd;W Nfl;Nld; <dhy; mtNsh ehd gbf;f khl;Nld;dh nrhd;Ndd; vq;f tPl;Ly gbf;f itf;f vq;f mg;gh ,y;iy mk;kh $yp Ntiyf;F Nghwq;f  ,g;gb tpj;jhjhd; ehDk; vd; nuz;L jk;gpfSk; rhg;gpl KbAk; jd; epiyia nrhy;yptpl;L vd;dplk; rpy yhl;lupr; rPl;Lf;fis ePl;bdhs; ehd; yhl;lupr; rpl;L thq;Ftjpyiy vd;gjhy; vdf;F yhl;lup Ntz;lhk; vd;W $wp mtsplk; [k;gJ &ghia ePl;b ,ij itj;Jf; nfhs; vd;Nwd; gzj;ij thq;fpa mtNsh vjpu;ghu Neuj;jpy; [k;gJ &gha;f;fhd yhl;lup rPl;bid vd; iffspy; jPdpj;J tpl;L Xb kiwe;jhs;
Vo;ikapYk; gzj;ij ,dkhf ngw tpUg;gkpy;yhj mtspd; jd;khdKk; jz;zk;gpf;ifAk; vd;id ftu;e;jd tUikapd; fhuzkhf jd; vjpu;fhyj;ij njhiyj;Jtpl;l me;j rpWkpapd; Kfk; vdf;F Xu; ce;Jrf;jpahf mike;jJ md;W KjNy Vio khztu;fSf;F vd;dhy; Kbe;jtiu cjt Ntz;Lk; vd KbntLj;J cjtpf;nfhz;L tUfpd;Nwd;.vd;W jd; kdJf;Fs; xU khw;wj;ijf; nfhz;L te;j me;j rpWkpiag; gw;wp nefpo;NthL $wp Kbf;fpwhu;
,tuhy; gydile;J ,d;W tlYupy; Mrpupag; gapw;rp ngw;WtUk; Jsrp g;s]; L Nju;tpy; gs;spapNyNa Kjy; khztpahf te;jtu; NghypNahthy ghjpf;fg;gl;L ,uz;டு fhy;fspd; typikia ,oe;jtu; FLk;g tUik fhuzj;jhy; Nkw;gbg;G gbf;f ,ayhj#o;epiyapy; mg;NghJ jhd; xU je;ijiag; Nghy; te;jhu; fpU\;zuh[; ma;ah . mtiu jd; Njhopfsplk mg;gh vd;Nw mwpKfg;gLj;jp ,Uf;fpd;Nwd; vd;W $wp fz; fyq;Ffpwhu; Jsrp.

,tu; jd; cjtp nra;J tUk; khzt khztpfs; midtiuAk; jd; Foe;ijfs;jhd; vd;fpwhu; jd; tho;ehspy; xUtiuahtJ [.V.v];. Mf;fp ghu;f;f Ntz;Lk; vd;gNj jd; Miria ntspg;gLj;Jfpwhu;.

fpU\;zuhi[g; ghuhl;lTk; mtNuhL ,ize;J fy;tp Nritahw;wTk; tpUg;gKs;stu;fs; njhlu;Gnfhs;sTk;:-

             9790531456

டான் போஸ்கோ அன்பு இல்லம்

தமிழகத்தில் பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் தெருவோரங்களிலும் கைவிடப்பட்ட குழந்தைகள் பிச்சை எடுக்க விடப்பட்ட குழந்தைகள் குழந்தை தொழிலாளர்கள் என எங்கெல்லாம் குழந்தைகள் கைவிடப்படுகிறார்களோ அங்கெல்லாம் நேரடியாக சென்று அவர்களை மீட்பதோடு அவர்களுக்கு கல்வியும் உணவும் தங்குமிடமும் அளித்து பாதுகாத்து வருகிறது இந்த அமைப்பு கல்வியோடு அவர்களுக்கு ஏதாவது ஒரு கைத்தொழிலையும் கற்றுக்கொடுக்கின்றனர்.

முகவரி-டான் போஸ்கோ அன்பு இல்லம், 25-குழந்தை தெரு , பார்க் டவுன்,சென்னை-600003 - தொலைப்பேசி-044-25225426

இணையமுகவரி- http://www.anbuillamchennai.com/

துளிர்

துளிர் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுப்பதையும் குழந்தைகளின் பாதுகாப்பையும் அடிப்படையாக கொண்டு இயங்கி வருகிற இமைப்பு இது. புழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை மாவட்டந்தோறும் குழந்தைகளிடம் பரப்பி வருகின்றனர். பதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கவுன்சிலிங் தொடங்கி பலவித மருந்துவ உதவிகளையும் செய்து தருகின்றனர். குழந்தைகளுடைய மனநலம் பாதிக்கப்படுவதையும் தடுக்க ஏற்பாடுகள் மற்றும் உதவிகள் செய்கின்றனர்.

துளிர் முகவரி- துளிர் J-33/18 ,ஏழாவது தெரு அண்ணா நகர் சென்னை-600102.தொலைப்பேசி-91-44-26192026-26190771 இணையமுகவரி-www.tulircphcsa.org