திங்கள், 28 மார்ச், 2011

உங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.


இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Cell Phone அல்லது Mobile Phone எனப்படும் 'கைபேசி' உபயோகிப்பவர்கள் எந்த அளவுக்கு அதன் Electromagnetic Radiation மூலம் உடல்நலன் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அதிலிருந்து தப்பிக்கும் வழி முறைகளையும் சுருக்கமாக சொல்ல முயற்சிக்கும் ஒரு பதிவு இது.


ஒரு Caller தன் செல்ஃபோனில் ஒரு Receiver-ஐ அழைக்கும்போது அவரின் செல்ஃபோனிலிருந்து வெளியாகும் மின்காந்தப்புலன் (Electro Magnetic Field)  அருகிலிருக்கும் மொபைல் (Base Station - 1) டவருக்கு செல்கிறது. அங்கிருந்து சிக்னல், Switching Center-க்கு செல்கிறது. இங்கே அழைப்பாளர் மற்றும் அழைக்கப்படுபவரின் விபரங்கள் சேமிக்கப்படுகின்றன. பின் அங்கிருந்து சிக்னல் அழைக்கப்படுபவரின் அருகே இருக்கும் செல்ஃபோன் (Base Station  - 2) டவருக்கு செல்கிறது. இதிலிருந்து புறப்படும் மின்காந்தப்புலன் Receiver-ன் செல்ஃபோனில் உள்ள ஆன்டென்னா மூலம் உட்கிரகிக்கப்படும் போது செல்ஃபோனில் ரிங் டோன் கத்துகிறது. அழைக்கப்படுபவர் வந்த அழைப்பை 'ஓகே' செய்யும்போது இருவருக்கும் தொடர்பு ஏற்படுகிறது.

The impact of cell phone radiation on humans..! & How to overcome it carefully..!

பிரச்சினை இப்போதுதான் ஆரம்பிக்கிறது. இவ்வாறு பேசும்போது செல்ஃபோனின் ஆன்டென்னா விலிருந்து தொடர்ந்து வெளியாகிக் கொண்டு இருக்கும் மின்காந்த அலைகள் எல்லா பக்கமும் தெறிக்கின்றன. அதில் கிட்டத்தட்ட பாதி ஆளவு அலைக்கதிர்கள் பேசுபர்களின் தலைக்கு உள்ளும் ஊடுறுவுகின்றன..! இந்த செல்ஃபோனின் மின்காந்த அலைக்கதிர்வீச்சின் அளவு, ஒரு மைக்ரோ வேவ் ஓவனின் அலைக்கதிர்வீச்சுக்கு ஏறக்குறைய இணையானது..! ஆக, விஷயம் அவ்வளவு விபரீதமானது..!


ஒவ்வொரு மொபைலுக்கும் ஒரு Specific Absorption Rate (SAR) உண்டு. இது 1.6 W/G (watts per gram) எனும் அளவுக்கு குறைவாக இருந்தாக வேண்டும். இது International Standard அளவு. உங்கள் மொபைலில் இது  எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அது உங்கள் உடலுக்கு நல்லது. 




நம் செல்ஃபோனுக்கான இந்த SAR-ஐ பின்வரும் மூன்று வழிகளில் அறியலாம். 
  1. உங்கள்  செல்ஃபோனின் கையேடு ( user's manual) மூலம்.
  2. செல்ஃபோன் தயாரிப்பாளர்களின் இந்த தளம் மூலமாக.
  3. செல்ஃபோனின் FCC ID Number-ஐ என்டர் செய்து  இந்த தளம் மூலமாக.


நீண்ட நேரம் செல்ஃபோனை ' அணைத்த கையும் காதுமாய் ' கதை அடிக்கும் மனிதர்களின் தலைக்குள் ஊடுறுவும் இந்த மின்காந்த அலைக்கதிர்வீச்சு தலைக்குள் சூட்டை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. உதாரணமாய் 15 நிமிடம் அவ்வாறு பேசிய ஒரு 'மொபைல் பேச்சாளரின்' முந்தைய பிந்தைய நிலையை பின்வரும் படம் காட்டுகிறது. 


நீண்ட நேரம் காதோடு மொபைல் வைத்து பேசுவோருக்கு... மயக்கம், தலைவலி, தூக்கமின்மை, ஞாபகமறதி, காது இறைச்சல், மூட்டுவலி இப்படி உடனடியாக சில தங்கடங்கள் வருமாம்.


தொடர்ந்து இதேபோல 'அணைத்த கையும் காதுமாய் ' செல்ஃபோன் மூலம் நீண்டநேரம் பேசினால்..? பெரியவர்கள் மண்டைஓடு கனமானது. குழந்தைகளின் மண்டைஓடு மெல்லியது. இதனால், பெரியவர்களை விட குழந்தைகள் இக்கதிர்வீச்சினால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, 5-வயது குழந்தைக்கு 75% பாதிப்பும் 10-வயது குழந்தைக்கு 50%-ம், பெரியவர்களுக்கு 25% பாதிப்பும் ஏற்படுகிறதாம். 



ஆக, இதே போல தினம் தினம் பல நிமிடங்கள் அல்லது பல மணி நேரங்கள் என சூடாகும் மூளை செல்களில் உள்ள புரோட்டீன் சிதைய, கடைசியில் Brain Tumor-ல் அல்லது சில சமயம் Brain Cancer-ல் கொண்டு போய் விடுகிறதாம்..!

இப்படி ஒரு சாரார் மிக தீர்க்கமாக ஆதாரங்களுடன் பரிசோதித்து சொல்ல, 'அந்த அளவுக்கெல்லாம்... அப்படியெல்லாம்... ஒன்றும் ஆகாது' என்று இன்னொரு சாரார்... (செல்ஃபோன் நிறுவனங்கள் சார்பாக...?) சில மருத்துவர்கள் வாதாடினாலும், விலை கொடுத்து வாங்கும் இந்த வேண்டாத பெரிய ஆபத்து எதற்குமா நமக்கு..? சில வருடங்கள் கழித்து "ஆமாமாம்... அந்த சாரார் சொன்னதே சரி"-ன்னு அப்போது பல நோயாளிகளின் புகாரை கண்டு ஜகா வாங்கினால் அப்புறம் இவர்களை நம்பினோர் கதி..? அதோ கதி அல்லவா ..!

'மொபைல்  அடிமைகள்' ஆகிவிட்ட நம்மால், இதை எல்லாம் கண்டு பயந்து மிகவும் அரிய அவசிய கண்டுபிடிப்பான... இந்த செல்ஃபோனை "இனி வேண்டாம்" என தூக்கி எறிந்து விட முடியுமா..? முடியவே முடியாது அல்லவா..?

எனில், இறைநாடினால், மாற்று வழிகளை கைக்கொண்டு மேற்படி பயங்கர விபரீதத்திலிருந்து தப்பிப்போம்..! அதுவே புத்திசாலித்தனம்..!

இதற்கு சரியான வழி, நீங்கள் செல்ஃபோன் வாங்கும்போது 'ear phone' என்று ஒரு அம்சம் பெட்டியுடன் சேர்த்து கொடுத்திருப்பார்களே..!? ம்ம்ம்... அதுதான்..! அதை தேடி எடுங்கள்..! ஒரு சில நிமிடங்களுக்கு மேலே பேசுவதாயின் கண்டிப்பாய் அதை இனி காதில் மாட்டிக் கொள்ளுங்கள்..! என்னது...? அதை காணவில்லையா...? சரி...வேறொன்று டூப்பிளிகேட்டாவது வாங்குங்கள் சகோ..!   ஆரோக்கியம் முக்கியம் அல்லவா..?
 அதுவரை என்ன செய்யலாம்...? அவசரத்துக்கு, இனி பேசும் போது செல்ஃபோனை காதுக்கும் வாய்க்கும் கிடைமட்டமாக பிடித்து, அதன்மூலம் ஆன்டேன்னாவிலிருந்து வெளியேறும் அலைக்கதிர்வீச்சு கூடுமானவரை தலைக்குள்ளே  செல்லாதவாறு பிடித்து பேசுங்கள்.  அப்புறம் 'Speaker Phone' என்று ஒரு அம்சம் உள்ளதே..! அப்படி என்ன ராணுவ ரகசியம் பேசிவிடப்போகிறோம்..? அணைத்த கையும் காதுமாய் செல்ஃபோனில் பேசாமால் 'Speaker Phone' உபயோகித்தும் பேசலாமே..!

'டவர் சிக்னல் வீக்' என்று மொபைல் காட்டினால், அந்த இடங்களில் பேசுவதை தவிருங்கள். ஏனெனில், கஷ்டப்பட்டு சிக்னலை பிடிக்க அலைக்கதிர்வீச்சு அப்போது உச்சத்தில் இருக்கும். பாதிப்பும் நிறைய. உடனே... சிக்னல் முழுக்க கிடைக்கும் இடமாய் தேடிச்சென்று பேசுங்கள். கதிர்வீச்சு அளவை குறைத்துக்கொள்ளலாம்.

'பொதுவாக யாருடனேனும் நீண்ட நேரம் கடலை போட்டேயாக வேண்டும்' என்றால், இருக்கவே இருக்கே லேண்ட்லைன்..! அதை உபயோகியுங்கள்..! எந்த பயமும் இல்லை... முக்கியமாக பேட்டரி சார்ஜ் தீர்ந்து பல மணிநேரம் பேச முடியாமல் போய் விடுமோ என்ற கவலையே இல்லையே...! ஹி..ஹி...  :))

இனி... மொபைல்  சோதனைகளை எல்லாம் கடந்து அதன் மூலம் சாதனைகள் பல செய்வோம்... சகோ..! 

நன்றி- pinnoottavaathi.blogspot.com


zwani.com myspace graphic comments
Myspace Funny Picture Comments & Graphics




செவ்வாய், 22 மார்ச், 2011

நண்பரின் கவிதை

                                            

 நமது இணைய மையத்திற்கு அடிக்கடி வருகை தரும் வாடிக்கையாளர்களில் இந்த நண்பரும் ஒருவர் தான் சில கவிதைகள் எழுதி இருப்பதாகவும் அதனை தங்களின் வலைப்பூ வில் வெளியிட் வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொண்டார் அவரிடம் எத்தனை வருடமாக கவிதை எழுதுகின்றீர்கள் என்று கேட்டததற்கு இது எனது முதல் முயற்சி என்று கூறினார் எனவே அவரின் இந்த கன்னி முயற்சியினை மேன்மைபடுத்தவே அவருடைய கவிதையினை நாம் இங்கு வெளியிட்டுள்ளோம் இக்கவிதையில் தவறுகள் இருப்பின் அது அந்த நண்பரையே சாறும் . 




  ஜப்பானியர்களுக்கு மலரஞ்சலி
இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு
 சோதனைகள் பல கடந்து சாதனைகள் புரிந்து
எறும்பிற்கு இணையான சுறுசுறுப்பின் சிகரங்களே
 
பூமித்தாயின் சினத்தால் சுனாமி என்ற சூனியக்காரியால் தரித்தரம் பிடித்த
சமுத்திரத்தால் மூன்றாம் யுத்தத்தில்
சுனாமி அரக்கனின் கோரப்பசிக்கு இரையாகிப் போன
உங்களுக்கு எங்கள் கண்ணீரை காணீக்கையாக்குகிறோம்
சுனாமி வைத்த தீயினால் எரிந்தது உங்கள் உடல் மட்டுமா?
எங்கள் இதயமும் தான்
நீங்கள் மடியவில்லை மண்ணுக்குள் ஆயிரமாயிரம்
ஆலமரங்களாய் புதைக்கப்பட்டுள்ளீர்கள்
இமை மூடினால் சுனாமி கனவு
இமை திறந்தாள் ஜப்பானியர்கள் நினைவு








பூமித்தாய் எச்சரிக்கை

சரித்திரம் படைக்காத மானிடகுமே

சமுத்திரத்தால் உங்களுக்கு தரித்திரம் பிடிக்கப் போகிறது
 என்னை சோதனை செய்தால் 
 நீங்கள் வேதனை அடைவீர்கள்
 என் மேல் மரம் நடு உன்னுள் மனித நேயம் வளர்த்திடு
 சமுத்திரத்தில் உறங்கிகொண்டிருக்கும்
 என் பினாமிகள் விழித்துக் கொண்டால் சுனாமி பேரலைகளாய் மாறும்
 நான் சிறிது உடலையைத்தால் பூகம்பம்
 இரு கரங்களில் ஒன்றை மாற்றினால் சுனாமி
 நீங்கள் நினைத்தால் நான் குளிரடைவேன் இல்லையேல்
 நித்தம் நித்தம் வந்து உங்களை தலாட்டுவேன்
 நீங்கள் என்னுள் உறங்குவதற்கு பூகம்பமாய் வந்து
 ஈழத்து வேங்கைகளின் ஆன்மா

 என் தாத்தா பூமியைத் தோண்டும் போது நிறைய தங்கம் கிடைத்தது
 என் தகப்பன் பூமியைத் தோண்டும் போது நிறைய தண்ணீர் கிடைத்தது
 நான் பூமியைத் தோண்டும் போது நிறைய நிலக்கரி கிடைத்தது
என் தனயன்  பூமியைத் தோண்டும் போது நிறைய மனித எலும்பு கூடுகள் தான் கிடைக்கும்
வேண்டாமே யுத்தம் என்றென்றும் சமாதானமாய் இரு

 காவை.எஸ்.மனோகரன்( அலைப்பேசி-91-7871048286)

கவிதை நன்றாக இருப்பின் நமது நண்பரை வாழ்த்தவும்
தவறுகள் இருப்பின் கருத்துரையை அவருக்கு அளிக்கவும்

நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க வெளியிடப்பட்டது உரிமை அவரையே சாறும் 

சனி, 19 மார்ச், 2011

இலவசத்தை நம்பியே தி.மு.க




தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையி்ல், கல்வியை மாநில பட்டிய‌லில் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தும். தமிழகத்தில் மேல் முறையீட்டு மையம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம், நுழைவு தேர்வு கூடாது என்பதை தி.மு.க., வலியுறுத்தும், நதிகளை தேசியமயமாக்கவும், 12வது ஐந்தாண்டு திட்டத்தில் தென்னக நதிகளை இணைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். சென்னை ஐகோர்ட்டில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்.

மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகள் தமிழில் எழுத அனுமதிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறத்துவோம்.சிறப்பாக இயங்கும் தமிழகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் ஈழத்தமிழர் அமைதியாக வாழ நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

கரும்பு பருத்தி, காய்கறி உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுப்போம். நகர்புறங்களில் நுகர்வோம் யைம் அமைக்க நடவடிககை எடுக்கப்படும். .விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் நியாயமான வாடகையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இலவச மின்சாரத்தை தென்னை வளர்ப்பு, பணப்பயிர் போன்றவற்றிற்க்கும் விரிவு படுத்துவோம். விவசாய நிலங்‌களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுப்போம், சொட்டு நீர் இல்லா விவசாயிகளுக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.நெல் கரும்பு உள்ளிட்டவற்றிற்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.



இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும், சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சார உற்பத்தியை பெருக்குவோம். வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். தொழி்ற்சா‌லைகள், வீடுகளுக்கு தொடர்ந்து தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு தனி தொழிற்பேட்டை அமைக்கப்படும். வன விலங்குகளால் தாக்கி பலியாகும் விவசாயிகளுக்கு இழப்பீட்டு வழங்கப்படும்.

மீனவர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி மீனவர் நலன் காக்கப்படும், தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்துவோம். கச்சத்தீவை திரும்ப பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். பால், முட்டை உற்பத்தியை பெருக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

மாவட்டந்தோறும் மருத்துவ கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணங்களை ஒழுங்குபடுத்த அரசின் சார்பில் மருத்துவ கட்டண ஒழுங்கு ‌முறை ஆணையம் அமைக்கப்படும், மஞ்சள், காமாலை போன்றவற்றிற்கு போடப்படும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும். மாதம் ஒரு முறை முதியோருக்கு அரசு மருத்துவர்கள் வீடு தேடி சென்று சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையில் காசநோய் மையம் அமைக்கப்படும். சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை வழங்கப்படும். திருச்சி மதுரையில் மன நல மருத்துவமனை அமைக்கப்படும். அனைத்து வட்டார மருத்துவமனைகளிலும் எய்ட்ஸ் பரிசோதனை மையம் அமைக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் செவிலியர் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

அரசு அலுவலர்களில் கோரிக்கைகளை கலையவும், அரசு ஊழியர்கள் சங்கங்களின் ‌கோரிக்கைளை களைய ஆணையம் அமைக்கப்படும். அரசு பணிகளில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 3 மாதங்களிலிருந்து 4 மாதமாக உயர்த்தப்படும். அரசு பணிகளில் உள்ள பெண்களுக்கு ஓய்வரை அமைக்கப்படும்.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். வறுமைக்கோட்டிற்கு கீழ் வழங்கப்படும் ஒரு ரூபாய்க்கு 35 கிலோ அரிசி வழங்கும் திட்டம் இலவசமாக வழங்கப்படும்.

தொடக்க பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாகவும், நடுநிலை பள்ளிகளாகவும், நடுநிலை பள்ளிகள் மேல் நிலை பள்ளிகளாகவும் மாற்றப்படும். மாணவர்களுக்கு 3 சீருடைகள் இலவசமாக வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் பல்கலை., அமைக்கப்படும். பல்கலைகழகங்களில் பிரெஞ்ச், ஜெர்மன், அராபி கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பொறியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களே இல்லாத நிலை உருவாக்குவோம். அரசு கல்லூரிகளில் ஆதி திராவிட மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும். அனைத்து பல்கலைகழகங்களில் ஆராய்ச்சி படிப்புகளுக்கு இடஒதுக்கீடு முறை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் 2 லட்ச ரூபாய் கடன் 4 லட்ச ரூபாயாக உயர்த்தப்படும். இதில் 2 லட்ச ரூபாய் மானியமாக வழங்கப்படும். பொங்கல் அன்று கிராமங்கள் தோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடி மக்களுக்கு அரசு பேருந்தில் இலவச பாஸ் வழங்கப்படும் திட்டம் செயல்படுத்தப்படும். முதியோர், விதவைகள், ஆதரவற்ற பெண்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை 750 ரூபாயாக உயர்த்தப்படும்.



நெசவுத்தொழில் நசியாமல் இருக்க அதிக கூட்டுறவு கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு சங்கங்களில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணிபுரியும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் 100 யூனிட்டிலிருந்து 300 யூனிட்டாக உயர்த்தப்படும்.

சாயக்கழிவு பிரச்னைக்கு தீர்வு காண அதிக உப்புத்த‌ன்மை கொண்ட சாய நீரை ஆவியாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அரசு சார்பில் உதவி செய்யப்படும். தலித் கிறிஸ்துவர்கள் ஆதிதிராவிட பட்டியலில் இடம்பெற்றிட மத்திய அரசை வலியுறுத்துவோம். சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்.

திருநங்கைகளுக்கு தனியாக சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்படும். எஞ்சிய கோரிக்கைகளை நிறைவேற்றப்படும்.

சிறு வணிகத்தில் அந்நிய நேரடி முதலீ்ட்டை அனுமதிக்கக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்துவோம். முன்பேர வணிகம், யூக வணிகத்தை தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்தல்.

கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் காங்கீரிட் வீடு கட்ட வழங்கப்படும் 75 ஆயிரம் இனி ஒரு லட்சமாக உயர்த்தப்படும். ஏற்கனவே அடையாள அட்டை ‌பெற்றவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும். சுற்றுலா தளங்களை சிறந்த சுற்றுலா தளங்களாக மாற்றப்படும்.

பெண்களுக்கு வீடுதோறும் இலவச கிரைண்டர் அல்லது மிக்சி 2ல் ஒன்றை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம்.

அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்சம் வாங்குவதை தடுக்க, புகார்கள் விரைவாக விசாரித்து தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதல் பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். சென்னைக்கு அருகே புதிய துணை நகரம் உருவாக்குவோம். புதிய ஏரிகளை உருவாக்கி குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம்.

கண்மாய்கள், ஆறுகளை தூர்வாறும் பணிகள் நடக்கும். கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையிலிருந்து அதிவேக ரயில் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.என தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

முள் செடியை வீழ்த்தும் ஆயுதம் வைகோ! படபடக்கிறார் முத்துக்குமாரின் தந்தை





வெண்ணெய் திரண்டு வரும் வேளையில் தாழி தள்​ளாடும் நிலை என்பார்​களே... வைகோவின் அரசி​யல் வாழ்க்கையில் இத்தகைய துயரங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன!
கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக அ.தி.மு.க-​வின் கூட்டணியில் சிறிதளவும் மனக்கசப்பின்றி, ஆளும் கட்சியின் அத்தனை நெருக்கடிகளையும் சமாளித்து நின்ற வைகோ, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அல்லாட்டத்துக்கு ஆளாகினார். கடந்த தேர்தலில் 35 இடங்களில் போட்டியிட்ட ம.தி.மு.க-வுக்கு இந்த முறை மிகக் குறைவான இடங்களே பேசப்பட... மாநிலம் முழுக்க இருக்கும் வைகோவின் ஆதரவாளர்கள் முகம் வாடிப்போனார்கள்.
வாய் திறந்து பேசாவிட்டாலும் வைகோவுக்கும் இதில் சொல்லிக்கொள்ள முடியாத வேதனைதான். இந்த நிலையில் நெகிழவைக்கும் சம்பவம் ஒன்று நடக்க... முகம் மலர நிமிர்ந்து இருக்கிறார் வைகோ.
ஈழப் போராட்டத்துக்காகத் தீக்குளித்து இறந்த கொலுவைநல்லூர் கு.முத்துக்குமாரின் குடும்பம் வைகோவை நேரில் சந்தித்து ம.தி.மு.க-வில் தங்களை இணைத்துக்கொண்ட சம்பவம்தான் அது. 


ஈழ ஆதரவுக் கட்சியினர் பலரும் முத்துக்குமாரின் தந்தை குமரேசனைத் தங்கள் பக்கம் இழுக்க எவ்வளவோ முயன்று பார்த்தார்கள். பண உதவிகளும் பதவி குறித்த உத்தரவாதங்களும்கூட அவரிடம் நடத்தப்பட்டன. ஆனால், 'கட்சிகளில் சேரும் விருப்பமே இல்லை. என் மகனின் தியாகத்தைத் தயவுசெய்து விலை பேசாதீர்கள்’ என மறுத்துவிட்டார் குமரேசன். இந்த நிலையில்தான் திடீரென ம.தி.மு.க-வில் ஐக்கியமாகி இருக்கிறார் குமரேசன்.
''காங்கிரஸ் - தி.மு.க. என்கிற முட்செடிகளை வெட்டி வீச, நம் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் ம.தி.மு.க. தமிழகத்தின் அத்தனை பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்கும் ஒரே தலைவர் வைகோ மட்டுமே. இனத் துரோகிகளை வீழ்த்துவதற்கு வைகோவின் கரத்தை வலுப்படுத்துவதே சரியான வழி!'' என குமரேசன் ஆவேசமாக அறிவிக்க... நெஞ்சம் சிலிர்த்தார் வைகோ.
இணைப்பு விழாவில் பேசிய குமரேசன், ''எங்​களுடைய குடும்பம் ஒரு​போதும் அரசியலில் ஈடுபட்டது இல்லை. ஆனால், இந்தக் காலகட்டத்தில் முத்துக்குமாரின் தியாகத்தைப் போற்றுகின்ற, உண்மையாக ஈழ விடிவுக்குப் பாடுபடுகின்ற ஒரு இயக்கம் மதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நாங்கள் ம.தி.மு.க-வில் இணைந்து இருக்கிறோம்.
என் மகன் முத்துக்குமாருக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்தவர் பழனி என்பவர்தான். அவர்கள் இருவரும் சேர்ந்துதான் அரசியல் கூட்டங்களுக்குப் போய் நாட்டு நடப்புகள் குறித்துப் பேசுவார்கள். இறப்பதற்கு முதல் நாள்கூட முத்துக்குமார், பழனியிடம்தான் ஈழக் கோரங்கள் குறித்து குமுறி இருக்கிறார். அதனால், யாரை நம்பிக்கை மிகுந்த தமிழர் தலைவராக முத்துக்குமார் போற்றினார் என்பது பழனிக்குத்தான் தெரியும். பழனியும் எனது மருமகன் கருக்கவேலும் கலந்து பேசித்தான் ம.தி.மு.க-வில் இணையும் முடிவை எடுத்தார்கள்.
எனக்கும் அதுதான் மிகச் சரியான முடிவாகப்பட்டது!'' என நெகிழ்ந்த குமரேசன் சற்றே ஆவேசமாகி, ''ஈழத்தையே இழவுக்காடாக்கிய காங்கிரஸும், அதற்குத் துணைபோன தி.மு.க-வும் இந்த மண்ணில் அடியோடு வீழ்த்தப்பட வேண்டும். ஈழக் கோரத்தைத் தடுக்க நினைத்து உடலையே கரிக்கட்டையாக்கிய என் மகனைப்போல், எத்தனையோ இளைஞர்கள் இன்றைக்கும் கொந்தளிப்போடு இருக்கிறார்கள். இனியும் அரசியலுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என ஒதுங்கி இருந்தால், அநியாயம் புரிபவர்களின் ஆட்டம் அதிகமாகிவிடும் என்பதால்தான், அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கிறோம். குடும்பத்துக்காக சொத்துகளைக் குவிக்கிற தலைவர்களுக்கு மத்தியில், தமிழர் நலனை மட்டுமே தாரக மந்திரமாகக்கொண்டு இயங்கும் வைகோதான் உணர்வாளர்களின் உண்மையான தலைவர்!'' என்றார் சிலிர்ப்பு அடங்காமல்.
முத்துக்குமாரின் நண்பர் பழனிராசன், ''முத்துக்குமாரின் தியாகத்தை உலகறியச் செய்தவர் வைகோ. உண்மையான உணர்வோடு முத்துக்குமாரின் இழப்புக்கு வருந்திய தலைவர் வைகோவுக்கு நாங்கள் அனைவருமே நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். 'ஈழத் தமிழர்களுக்கான விடுதலையைப் பெற்றுத் தர தலைவர் வைகோவால் மட்டுமே முடியும்!’ என முத்துக்குமார் என்னிடம் பலமுறை சொல்லி இருக்கிறார். தலைவர் வைகோவின் பொதுக் கூட்டங்கள் எங்கு நடந்தாலும், நானும் முத்துக்குமாரும் சைக்கிளில் போய் அவருடைய பேச்சைக் கேட்போம்.
ஒருமுறை தலைவரின் பேச்சில் மெய் மறந்து, அது குறித்துப் பேசிக்கொண்டே இருந்தோம். அதன் பின் பார்த்தபோது சைக்கிள் காணாமல் போனது தெரிந்தது. அந்த அளவுக்கு தலைவர் வைகோவின் பேச்சில் வசப்பட்டுக்கிடந்தவன் முத்துக்குமார். அதனால்தான் அவனுடைய தியாகத்தைப் போற்றும் விதமாக ம.தி.மு.க-வில் இணைய வேண்டும் என முத்துக்குமாரின் மைத்துனர் கருக்கவேல் சொல்லிக்கொண்டே இருந்தார். முத்துக்குமார் ஊட்டிய உணர்வால்தான், இன்றைக்கு வைகோவின் தலைமையில் இந்த இயக்கத்தில் இணைகிறோம். எந்த சுயநலமும் இல்லாமல் வைகோவின் கரத்தை வலுப்படுத்த உறுதி ஏற்போம்!'' என்று சொல்ல வைகோவின் முகம் பரவசமானது.
இறுதியில் பேசிய வைகோ, முத்துக்குமாரின் நினைவுகளை அடுக்கிவிட்டு, முத்துக்குமாரின் தியாகத்தை இனத்தின் எழுச்சிக்காகப் பயன்படுத்து​வோமே தவிர, சுயநலத்துக்காக அல்ல!'' என்றார் உணர்ச்சிப்பெருக்கோடு!


 நன்றி ஜூனியர் விகடன்  




Share/Bookmark

zwani.com myspace graphic comments
Twitter Background