செவ்வாய், 27 செப்டம்பர், 2011

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள் சில….!



காதல் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். இனிமையாக பேசும் காதலர்கள் ஏனையோருடன் சண்டை போடுவதிலும் வல்லவர்களாக இருக்கின்றார்கள். இப்படி நீங்களும் உங்கள் காதலியிடம் மாட்டிக் கொண்டீர்களா? அப்படியாயின் இப் பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு….



1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்’ ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..






2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்)

3. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க…




4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா நீங்க  படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)



5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது  உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.



6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.


7. “நீ ரொம்ப அழகா இருக்கேங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)



8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா முதலில் நீங்க ஆா்டர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்ன்னு அவங்களுக்கு தெரியணுமில்ல  அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும் ” இந்த ட்ரஸ்ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்”. (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)




10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.





இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க உங்கள் காதலும் பிரகாசமாய் இருக்கும்.

வாழ்த்துக்கள் நண்பா்களே......................................

சனி, 24 செப்டம்பர், 2011

ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்…!

ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்..





1. நாங்கதான் உங்களுக்கு ரீ-சார்ஜ் பண்ணி அனுப்புறோம். ஆனாலும் நீங்க எதுக்கு மிஸ்டு கால் கொடுத்தே எங்க உயிரை வாங்குறீங்க? உங்ககிட்ட ஃபோன்ல பேசின காசையெல்லாம் சேர்த்து வெச்சிருந்தா, நான் லோன் போட்டு பைக் வாங்கி இருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

2. ஒரு பொண்ணு கொடுக்குற மிஸ்டு காலை மட்டும் யாராலும் அட்டெண்ட் பண்ணவே முடியாது. அவ்ளோ ஷார்ப்பா கட் பண்ணுவாங்க. இப்படி மிஸ்டுகால் கொடுக்க நீங்க எந்த யுனிவர்சிட்டியில ட்ரெயினிங் எடுத்துகிட்டிங்க?




3. அது ஏன் எப்போ பார்த்தாலும், எது கேட்டாலும் ஹி.. ஹி’ன்னு சிரிச்சுகிட்டே இருக்கீங்க? ஒரு மணி நேரம் உங்ககிட்ட ஃபோன்ல பேசினா அதுல நாற்பது நிமிஷம் கேனத்தனமா சிரிச்சுகிட்டேதான் இருக்கீங்க. ஏன் நீங்க ஏதாவது பேஸ்ட் விளம்பரத்துல நடிக்கிறதுக்கு எங்ககிட்ட ட்ரெயினிங் எடுக்கிறீங்களா?

4. ஃபோன்ல நாங்களேதான் பேசிகிட்டு இருக்கோம். எதைக்கேட்டாலும் “நீங்க சொல்லுங்க, நீங்க சொல்லுங்க’ன்னா” நாங்க என்னத்தை சொல்லி தொலைக்குறது? உங்களுக்கு எதையுமே பேச தெரியாது போலன்னு நினைச்சு நாங்க பாட்டுக்கு எதையாவது சொல்லி தொலைச்சுடுவோம். அதையே மனசுல வெச்சுகிட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கி கட்டிக்கிறது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அது எப்படி பேசவே தெரியாத மாதிரி சீன் போடுறீங்க?


5. மெசேஜ்’ல மட்டும் ரொம்ப ரொமாண்டிக்கா SMS அனுப்பி எங்க தூக்கத்தை கெடுக்குறீங்க. ஆனா அதையே நேர்ல சொல்ல சொன்னா மட்டும் வெட்கத்தையே என்னமோ நீங்கதான் குத்தகைக்கு எடுத்த மாதிரி வெட்கப்படுறீங்க? இது எப்படி உங்களால மட்டும் முடியுது? மெசேஜ் அனுப்பும் போதெல்லாம் உங்க வெட்கத்தை என்ன ஃப்ரிட்ஜ்’க்கு உள்ளே ஒளிச்சி வெச்சிடுவீங்களா?



6. ஹேய்… உனக்கு எப்படி அது தெரியும்? அப்படிங்கிற கேள்வியை மட்டும் கேட்டுட்டா போதும். உடனே “நான் உங்க இதயத்துல தானே இருக்கேன். இது கூட எனக்கு தெரியாதான்னு” உடனே ஒரு டயலாக் விடுவீங்க. இந்த மாதிரி எல்லாம் டயலாக் விட டைரக்டர் கதிர்கிட்ட கத்துகிட்டீங்களா என்ன?


7. Loss of Pay’ ல லீவு போட்டுட்டு, உங்களை பைக்ல தியேட்டருக்கு கூட்டிட்டு போனா, அப்பத்தான் ரொம்ப கவனமா ஹேண்ட் பேகை எடுத்து நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல வெச்சுகிட்டு வருவீங்க. என்ன கொடுமை சார் இதெல்லாம்?

8. அப்புறம் அப்புறம்’ங்கிற மொக்கையவே அரை மணி நேரமா போடுறீங்க. சரி வெச்சுடுறேன்னு நாங்க ஃபோனை கட் பண்ண போகும்போதுதான் “என் கூட பேசறது உங்களுக்கு போரடிக்குதா”ன்னு ஒரு சென்டிமென்ட் சீன் ஓபன் பண்ண வேண்டியது. உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி?



9. நீங்க கிஃப்ட் கொடுத்தா மட்டும் விலையைப் பார்க்க கூடாது. அதுல உங்க அன்பைத்தான் பார்க்கணும். ஏன்னா நிச்சயமா அந்த கிஃப்ட் கீ-செயினாவோ, கர்ச்சீஃபாவோ, இல்லை அதிகபட்சமா மணிபர்ஸாவோதான் இருக்கும். ஏன்னா அதுங்கதான் ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கும். ஆனா இதே நாங்க கிஃப்ட் கொடுக்கும் போது மட்டும் சுடிதாரோ, செல்ஃபோனோ, தங்க செயினோ, வெள்ளி கொலுசோ, குறைஞ்சது 3,000/- ரூபாய்க்கு செலவு பண்ணாதான் நாங்க உங்க மேல உண்மையான அன்பு வெச்சிருக்கிறதா அர்த்தம். என்ன கரெக்ட்டா? உங்க அன்போட அளவுகோலுக்கு எல்லையே கிடையாதா?


10. “உன் நியாபகமாவே இருந்துச்சு. ராத்திரி எல்லாம் தூக்கமே வரலை”ன்னு மனசாட்சி இல்லாம பொய் சொல்றீங்களே.. என் நியாபகமாவே இருந்துச்சினா என் கூட பேச வேண்டியது தானே. இந்தக் கேள்வியை நாங்க கேட்டுடக் கூடாதுனு அர்த்த ராத்திரியில பேய் முழிச்சுகிட்டு இருக்கிற நேரத்துல, ஒரு மிஸ்டுகால் கொடுத்துட்டு, மறுநாள் காலையில உனக்கு என் நியாபகமே இல்லைன்னே சண்டை போட வேண்டியது. இந்த விஷயத்துல சத்தியமா உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது.



11. நீங்க யூஸ் பண்ணி தூக்கி போட்ட பொருளை எல்லாம் நாங்க சேர்த்து வெச்சிருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களே, நாங்க என்ன நீங்க தூக்கி போடுறதை எல்லாம் சேர்த்து வெக்கிற குப்பை தொட்டியா?

நண்பர்களே இந்தக் கேள்விகளை எல்லாம் படிக்கிறதோட நிறுத்திக்குங்க. தப்பித்தவறி கூட இந்தக் கேள்விகளை நீங்க உங்க காதலிகிட்ட கேட்டீங்கன்னு வெச்சுக்குங்களேன்……..அவ்வளவுதான் ஜோலி முடிஞ்சுது.

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

புதிய வேலை வாய்ப்புகள்-

BHEL நிறுவனத்தில் என்ஜினீயர் பணிகள்


இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளுடன் இயங்கி வரும் நிறுவனமான பெல் நிறுவனத்தில் என்ஜினீயரிங் படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்: என்ஜினீயரிங் டிரெய்னீ
காலியிடங்கள்: 800 (மெக்கானிக்கல்-550, எலக்ட்ரிக்கல்-175, எலக்ட்ரானிக்ஸ்-75)
வயதுவரம்பு: இளங்கலை பட்டதாரிகள் 27 வயதிற்கு மிகாமலும், முதுகலை பட்டதாரிகள் 29 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் முதலில் கேட்-2012 தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், பெல் நிறுவனத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் தகுதியுள்ளவர்கள் நேர்முகத்தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
கேட்-2012 நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.10.2011
கேட்-2011 பற்றி தகவல்களைப் பெற http://careers.bhel.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பெல் நிறுவனத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.01.2012
கல்வித் தகுதி, தேர்வு முறை, விண்ணப்பக் கட்டணம் உள்பட இதுபற்றி மேலும் தகவல்களைப் பெற http://careers.bhel.in/bhel/isp/index.jsp என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

கெயில் இந்தியா நிறுவனத்தில் சீனியர் ஆபிசர் பணி

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்தி எரிவாயு பொறுப்புக்கழகத்தில் GAIL(Gas Authority of India Limited)  தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு, பாய்லர் ஆபரேஷன்ஸ் துறைகளில் அதிகாரியாக பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.பதவியின் பெயர்: சீனியர் ஆபிசர் (எப் அண்டு எஸ்)
காலியிடங்கள்: 18 (பொது-10, ஒபிசி-(என்சிஎல்)-3, எஸ்சி-3,எஸ்டி-2)
2.பதவியின் பெயர்: சீனியர் என்ஜினீயர் (பாய்லர் ஆபரேஷன்)
காலியிடங்கள்: 6 (பொது-2, ஒபிசி--3, எஸ்சி-1)
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2011
கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்கள் அறிய www.gailonline.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


கெயில் இந்தியா நிறுவனத்தில் எக்ஸ்ப்ளோரேஷன் மற்றும் புரொடக் ஷன் துறையில் பணி



மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்தி எரிவாயு பொறுப்புக்கழகத்தில் GAIL(Gas Authority of India Limited)  எக்ஸ்ப்ளோரேஷன் மற்றும் புரொடக் ஷன் துறையில் அதிகாரியாக பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.பதவியின் பெயர்: சீப் மேனேஜர் (மட் என்ஜினீயரிங்)
காலியிடங்கள்: 1 (பொது)
2.பதவியின் பெயர்: சீப் மேனேஜர் (ரிசர்வோயர்)
காலியிடங்கள்: 1(பொது)
3.பதவியின் பெயர்: சீனியர் மேனேஜர் (டிரில்லிங்)
காலியிடங்கள்: 1 (பொது)
4.பதவியின் பெயர்: சீனியர் மேனேஜர் (சிமெண்டிங்)
காலியிடங்கள்: 1(பொது)
5.பதவியின் பெயர்: சீனியர் மேனேஜர் (இ அண்டு பி)
காலியிடங்கள்: 2 (பொது-1, எஸ்சி-1)
6.பதவியின் பெயர்: சீனியர் மேனேஜர் (ஜியோ பிசிக்ஸ்)
காலியிடங்கள்: 2 (பொது-1, ஒபிசி(என்சிஎல்)-1))
7.பதவியின் பெயர்: சீனியர் மேனேஜர் (ஜயோலஜி)
காலியிடங்கள்: 1(எஸ்டி)
8.பதவியின் பெயர்: மேனேஜர் (ரிசர்வோயர்)
காலியிடங்கள்: 1(எஸ்சி)
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2011
கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்கள் அறிய www.gailonline.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


ஏர் இந்தியாவின் துணை நிறுவனத்தில் வேலை

ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் குறிப்பிட்ட கால ஒப்பந்த அடிப்படையில் பின்வரும் பதவிகளில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்: ஜூனியர் எக்சிகியூட்டிவ் டெக்னிக்கல்
காலியிடங்கள்: 97 (பொது-50, ஒபிசி-26, எஸ்சி-14, எஸ்டி-7) இவை வடக்கு மண்டலம்-4, கிழக்கு மண்டலம் (HQ உள்பட)-14 என்றவாறு பிரிக்கப்பட்டுள்ளன.
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல், உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிபெண்களுடன் பி.இ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கனரக வாகன ஒட்டுநருக்கான லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட துறைகளில் 2 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் சிறப்பு.
வயதுவரம்பு: 01.09.2011 அன்று குறைந்தபட்சம் 25 வயதிற்குள் மிகாமல் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.10.2011
பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை(பிரிணட்-அவுட்) அனுப்ப கடைசி தேதி: 10.10.2011
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 06.11.2011
இதுபற்றிய மேலும் தகவல்களை அறிய www.airindia.in  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்



வங்கி உதவியாளர் தேர்வு: கட்டணமில்லா பயிற்சி

சைதை சா.துரைசாமி மனிதநேய அறக்கட்டளை சார்பில் அகில இந்திய அளவில் வங்கி உதவியாளர் பணி தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்படவுள்ளது.  இது குறித்து மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி: ஏழை எளிய மக்களின் கல்விக்காக கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் மனிதநேயம் ஐ.ஏ.எஸ் கட்டணமில்லா கல்வியகம் நடத்தப்பட்டு வருகிறது. வரும் நவம்பர் 27-ந் தேதி அகில இந்திய அளவில் வங்கி உதவியாளர் பணி தேர்வு நடைபெறவுள்ளது.  இத்தேர்வு எழுதுவோர் வசதிக்காக சைதை சா.துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை சார்பில் கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படவுள்ளது.  இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள்   www.saidais.com  என்ற இணையதள முகவரி அல்லது மையத்துக்கே நேரடியாக வந்து பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சியில் கலந்து கொள்ளபவர்களுக்கு பயிற்சி புத்தகம்,குறிப்புகள்,கையேடுகள்,செய்தித்தாள்கள்,நூலகவசதி,இணையதள வசதி ஆகியவை கட்டணமில்லாமல் வழங்கப்படவுள்ளது.  

 
 என்.டி.பி.சி நிறுவனத்தில் என்ஜினீயர் வேலை
  
என்.டி.பி.சி நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள என்ஜினீயரிங் பணியிடங்களை நிரப்ப சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பதவியின் பெயர்: கிராஜூவேட் என்ஜினீயர்கல்வித்தகுதி: ஆங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் போன்ற துறைகளில் என்ஜினீயரிங் முடித்திருக்க வேண்டும்.தேர்வுமுறை: விண்ணப்பதாரர்கள் முதலில் கேட்-2012 தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். இந்த தேர்வில் வெறுபவர்கள் ஆன்லைன் மூலம் என்.டி.பி.சி. நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இவர்களுக்கு கேட்-2012 தேர்வில் பெறும் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு குழுவிவாதம் மற்றும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.கேட்-2012 தேர்வு பற்றி விவரங்களை அறிய என்ற  iitd.ac.in/gate இணையதளத்தைப் பார்க்கவும். கேட்-2012 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.10.2011விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது, ET2012 என்று பதவியின் பெயரைக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பித்தவுடன் கேட் பதிவு எண்ணைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.என்.டி.பி.சி. நிறுவனத்திற்கு ஆன்லைனில் 06.01.2012 முதல் 26.01.2012-க்குள் பதிவு செய்து விட வேண்டும். கல்வி மற்றும் வயதுவரம்பு உள்ளிட்ட மேலும் பல தகவல்களைப் பெற www.ntpccareers.net இணையதளத்தைப் பார்க்கவும். 


விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் வேலை
திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் காலியாக உள்ள கீழ்வரும் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: VSSC-266 dated 10.09.2011

1.பணியின் பெயர்: Technician-B (Post No: 1191)
காலியிடம்: 1(பொது)
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கார்பென்டர் பிரிவில் ITI/NTC/NAC சான்று பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200 -20,000
2.பணியின் பெயர்: Cook (Post No: 1192)
காலியிடங்கள்: 9 (பொது-6,ஒபிசி-2, எஸ்சி-1)
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Hotel Management/Catering துறையில் சான்றிதழ் பட்டப்பிடிப்புடன் தேவையான பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200 -20,200
விண்ணப்பிக்கும் முறை: www.vssc.gov.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி:  30.09.2011
ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனுடையை பதிவிறக்கம் நகலை தேவையான சான்றிதழ்களின் அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல்களை இணைத்து தபாலில் அனுப்ப வேண்டும்.
தபால் அனுப்ப வேண்டிய முகவரி:
The Administrative Officer, Recruitment  And Review Section, VSSC, ATF Area, ISRO (PO), Tiruvananthapuram-695022.

இந்தியக் கப்பல் படைக்கு செப்டம்பர் 29, 30-ல் ஆள்சேர்ப்பு
இந்திய கப்பல் படையில் வரும் செப்டம்பர் 29, 30-ம் தேதிகளில் ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளதாக பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.  இந்தத் தேர்வு சென்னை ராஜாஜி சாலை, நேப்பியர் பாலம் அருகில் உள்ள ஐ.என்.எஸ். அடையாறில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்புவோர் 1991 ஜனவரி 31 மற்றும் 1995 ஜனவரி 30-ம் ஆகிய தேதிகளுக்கு இடையே பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.  மேலும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவோ அல்லது அதற்கு நிகரான தொழில் படிப்பில் தேர்ச்சி பெற்றவராகவோ இருக்க வேண்டும். குறிப்பாக கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களைக் கட்டாயப் பாடமாகவும், வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் அறிவியல் ஆகிய பாடங்களை விருப்பப் பாடமாகவும் படித்திருக்க வேண்டும்.  உடல்தகுதி தேர்விலும் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் கடந்து, 20 முறை உட்கார்ந்து எழுதல் வேண்டும். மேலும் 10 தண்டால் எடுக்க வேண்டும்.  விண்ணப்பிக்க விரும்புவோர் 10-ம் வகுப்பு, மெட்ரிக்குலேஷன் அல்லது அதற்கு நிகரான சான்றிதழ்களுடன் என்.சி.சி. சான்று, வயது சான்று, நன்னடத்தை சான்று, விளையாட்டு சான்று ஆகியவற்றையும் இணைக்க வேண்டும்.  மேலும் சமீபத்தில் எடுக்கப்பட்ட 10 புகைப்படங்களை, நகல்களுடன் எடுத்து வர வேண்டும். தேர்வுக்கான பாட ஒழுங்கு விதிமுறைகளை   www.nausena-bharti.nic.in என்ற இணையதள முகவரியிலோ அல்லது கல்வி அலுவலகம் ஐ.என்.எஸ். அடையாறு, நேவி அலுவலகம், போர்ட் காம்ப்ளக்ஸ், ராஜாஜி சாலை, சென்னை 600 009 என்ற முகவரிக்குச் சென்றோ தெரிந்து கொள்ளலாம்.



புதன், 21 செப்டம்பர், 2011

மனமே ரீலாக்ஸ் ப்ளீஸ்

      மனமே ரீலாக்ஸ் ப்ளீஸ் -பாகம்-1, பகுதி-1

        இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை 


     நான் பார்த்தவரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும் மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன்  எழுப்புகிற  கேள்வி -  

'ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனைகளைக் கொடுக்க வேண்டும் ,'
     இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படும் போதெல்லாம் புத்த  மதத்தினர் சொல்கிற ஒரு சின்னக் கதையை நான் அவர்களுக்குச் சொல்லுவது வழக்கம்.

     அது ஒரு கிராமம்... சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான். அப்போது  'என்னைக் காப்பாற்று ! காப்பாற்று !  என்று ஓர் அலறல். ஆற்றொரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாகக் கதறுகிறது. 'உன்னை வலையிலிருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய். நான்மாட்டேன்  என்று முதலையைக் காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை நான் உன்னைச் சத்தியமாகச் சாப்பிடமாட்டேன்  என்னைக் காப்பாற்று ' என்று கண்ணீர்விடுகிறது. முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்... சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது. 'பாவி முதலையே ... இது நியாயமா , ' என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க... 'அதற்கென்ன செய்வது , இதுதான் உலகம்... இதுதான் வாழ்க்கை  என்று சொல்லிவிட்டுச் சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை. 
     
     சிறுவனுக்குச் சாவது பற்றிக்கூட  கவலை இல்லை. ஆனால் நன்றி கெட்டதனமாக அந்த முதலை சொன்ன சித்தாந்தத்தைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


     முதலையின் வாய்க்குள் மெள்ளப் போய்க் கொண்டிருக்கும் சிறுவன் மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான் -

      'முதலை சொல்வது மாதிரி... இதுதான் உலகமா , இதுதான் வாழ்க்கையா , ' அதற்குப் பறவைகள்  எவ்வளவோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் கூடுகட்டி  முட்டையிடுகிறோம் ... ஆனால் அதைப் பாம்புகள் வந்து குடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றன... அதனால் சொல்கிறோம்  முதலை சொல்வது சரிதான்


      ஏரிக்கரையில் மெய்ந்து கொண்டிருக்கும் கழுதையைப் பார்த்து சிறுவன் அதே கேள்வியைக் கேட்கிறான்...நான் இளமையாக இருந்த காலத்தில் என் எஜமான் அழுக்குத் துணிகளைச் சுமக்க வைத்து என்னைச் சக்கையாகப் பிழிந்தேடுத்தான். எனக்கு வயதாகி நடை தளர்ந்து போனபோது எனக்குத் தீனி போட  முடியாது என்று சொல்லி என்னைத் துரத்திவிட்டான். முதலை சொல்வதில் தப்பே இல்லை. இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை  என்றது கழுதை.


     சிறுவனால் அப்போதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை கடைசியாக ஒரு முயலைப் பார்த்து சிறுவன் இதே கேள்வியைக் கேட்கிறான். ' இல்லை  முதலை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை முதலை பிதற்றுகிறது ' என்று முயல்சொல்ல... முதலைக்கு கோபம் வந்து விட்டது. 
       சிறுவனின் காலைக் கவ்வியபடியே  வாதாடத் தொடங்கியது. 'ஊஹீம் சிறுவனை வாயால் கவ்விக்கொண்டே பேசுவதால் நீ சொல்வது எனக்குச் சரியாகப் புரியவில்லை' என்றது முயல்.பொரிதாகச் சிரித்த முயல் ' புத்தியில்லாத முதலையே  உன் வாலின் பலத்தைக் கூடவா நீ மறந்துவிட்டாய் , சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அவனை ஒரே அடியில் உன்னால் வீழ்த்திப் பிடித்துவிட முடியுமே என்று நினைவுபடுத்த...முதலையும் சிறுவனை விடுவித்துவிட்டுப் பேச துவங்கியது. அப்போதுதான் முயல் சிறுவனைப் பார்த்து 'நிற்காதே ஓடிவிடு  என்று கத்த.. சிறுவன் ஓடுகிறான்.
       முதலை சிறுவனை வீழ்த்த வாலை உயர்த்திய போதுதான் அதற்கு ஒன்று புரிந்தது. வலையிலே சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை விழுங்கத் துவங்கியது. அதன் நினைவுக்கு வந்தது  சிறுவன் தப்பி ஓடிவிட்டான் அப்போது கோபத்தோடு தன்னைப் பார்த்த முதலையிடம் முயல் புன்னைகையுடன் சொன்னது -
      'புரிந்ததா... இதுதான் உலகம்  இதுதான் வாழ்க்கை  சிறிது நேரத்துக்கெல்லாம் 

      தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்து வர... அவர்கள் முதலையைக் கொன்றுவிடுகிறார்கள். அப்போது சிறுவனோடு வந்த ஒரு நாய் அந்தப் புத்திசாலி முயலைத் துரத்தியது... சிறுவன் பதறி ஓடிச்சென்று தடுப்பதற்குள் கொன்றுவிடுகிறது.. சிறுவன் பெருமூச்சு விடுகிறான். 'இதுதான் உலகம்  இதுதான் வாழ்க்கை'   என்று சமாதானம் ஆகிறான்.

    வாழ்கையின் அநேக விஷயங்களை நம்மால் முழுக்க புரிந்துகொள்ள முடியாது  என்று இந்து மத ரிஷிகள் சொன்னதைத்தான் புத்தமதமும் சொல்கிறது.
     பரோடாவில் என்னைச் சந்தித்து கதறிய பெண்ணொருத்தியின் வாழ்க்கையே இதற்கு ஒரு உதாரணம்.. ( தொடரும் )

திங்கள், 19 செப்டம்பர், 2011

தொழில் கடன் உதவி




தொழில் தொடங்கி அம்பானி போல ஆகிவிடலாம் என்கிற கனவோடு களமிறங்குகிற பலர் எடுத்த எடுப்பிலேயே தடைபட்டு நின்றுவிடுகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ‘பணம் இல்லை; கடன் கேட்டேன்; கிடைக்கவில்லை’ என்பதாகவே இருக்கிறது. டாடாவோ, அம்பானியோ பெரிய முதலோடு தங்கள் தொழிலை ஆரம்பிக்கவில்லை. கடன் வாங்கித்தான் ஆரம்பித்தார்கள். நிறுவனத்துக்கான கடனை வாங்க அந்தக் காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களோடு ஒப்பிட்டால் தொழில்கடன் வாங்க இன்றைக்கு உள்ள சிரமங்கள், பிரச்னைகள் குறைவே. சில முன் தயாரிப்புகளோடு அணுகினால் அந்தப் பிரச்னைகளையும் பிஸினஸ்மேன்கள் தவிர்த்து நிச்சயம் வெற்றி பெறலாம்.

தேவை தெளிவான பார்வை

‘வேலை செய்யப் பிடிக்கவில்லை; அதனால் பிஸினஸ் செய்யப் போகிறேன்’ என்று சொல்லி தொழிலில் இறங்குகிறவர்கள், வெற்றி பெறுவது கடினம்தான். அதே போல செய்ய நினைக்கும் தொழில் பற்றிய முழுமையான அறிவு, தெளிவான நம்பிக்கை இல்லாமல் தொழிலில் இறங்குகிறவர்களுக்கும் தோல்வி நிச்சயம்தான். தொழில்கடன் கேட்டு வங்கியை அணுகுகிறவர்களை வங்கி மேலாளர் முதலில் சோதிப்பது அவர்களின் நம்பிக்கையைத்தான். தொழில் முனைவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வங்கி தரப்பில் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். சிலசமயம் வங்கி மேலாளர் தொழில்முனைவரின் உறுதியைக் குலைக்கும் வகையில் சில கேள்விகளைக் கேட்கவும் செய்யலாம்.

‘நீங்கள் சொல்கிற பிஸினஸை எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் செய்தார். அதில் அவருக்கு பலத்த நஷ்டம். வேறு ஏதாவது பிஸினஸுக்கான ஐடியா உங்களிடம் இருக்கிறதா?’ என வங்கி மேனேஜர் கேட்பதாக வைத்துக் கொள்வோம். இதற்கு தொழில் முனைவரின் பதில் என்னவாக இருக்கும்..? உடனே பதற்றமடையும் பலர், ‘சார், என்கிட்ட இன்னொரு பிஸினஸுக்கான ஐடியாவும் இருக்கிறது’ என்றுதான் சொல்வார்கள். இந்த ஒரு வரி பதில் போதும், உங்கள் தொழில் மீது உங்களுக்கு ஆழமான நம்பிக்கை இல்லை என்று சொல்ல. ஆனால், இத்தகைய பதில்களால் மட்டுமே ‘கடன் கிடைக்காது’ என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் நீங்கள் செய்யப் போகிற தொழில் மீது உங்களுக்கு இருக்கும் உறுதியைக் காட்டிவிடும். எனவே தெளிவான பார்வை, உறுதியான திட்டம் தேவை.


பிஸினஸ் பிளானில் என்ன இருக்க வேண்டும்?

நீங்கள் செய்யப் போகிற பிஸினஸ் இதுதான் என்று முடிவு செய்துவிட்டால் அதற்கான பிளானை தயார் செய்ய வேண்டும். முதலில் உங்களைப் பற்றிய தகவல்கள், நீங்கள் யார், என்ன செய்து கொண்டிருந்தீர்கள், இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்ற விவரங்கள் இருக்க வேண்டும். தொடங்கப் போகிற தொழிலைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும், எப்படித் தெரியும், அந்தத் தொழிலில் என்ன புதுமைகள் செய்யப் போகிறீர்கள்; உங்களுக்கான மூலப்
பொருட்கள் எங்கு கிடைக்கும்; உங்களின் வாடிக்கையாளர்கள் யார் என்பது பற்றி தெளிவாகக் கூற வேண்டும். இந்தத் தொழில் மூலம் மாதத்துக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்கிற தோராயமான கணக்கு வேண்டும்.

இதற்கு டி.எஸ்.சி.ஆர். என்கிற விகிதத்தை நிச்சயம் பார்ப்பார்கள்.   Debt Service Coverage Ratio என்பதன் சுருக்கமே டி.எஸ்.சி.ஆர். அதாவது, ஒரு மாதத்துக்கு நீங்கள் 15 ஆயிரம் சம்பாதிக்கிறீர்கள் எனில், அசலுக்கும் வட்டிக்குமாகச் சேர்த்து ரூபாய் 10 ஆயிரம் போக, குறைந்தது ரூபாய் 5 ஆயிரம் உங்களிடம் இருந்தால்தான் தொடர்ந்து பிஸினஸ் நடத்த முடியும். அதாவது, இந்த விகிதம் 1.5க்கு மேல் இருந்தால் மட்டுமே உங்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கும். நீங்கள் செய்யும் பிஸினஸில் இந்த வருமானம் உங்களுக்கு இருக்கிறதா என்பதை நீங்களே உறுதி செய்து கொண்டு, வங்கியை அணுகினால் தெம்பாகப் பேசலாம்.

கடன் வகைகள்

அடமானமில்லாத கடன் ( unsecured loan ) ரூபாய் 10 லட்சம் வரைக்குமான தொழில் கடனுக்கு எந்த விதமான அடமானமும் கேட்கக்கூடாது என்பது ஆர்.பி.ஐ. விதி. இந்த விதி காரணமாக, 10 லட்சம் வரை எந்தவித அடமானமில்லாமல் கடன் கிடைக்கும். ஒரு வேளை வங்கிகள் அடமானம் கேட்டால் அது விதியை மீறிய செயலாகவே கருத வேண்டும். தவிர, சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்க மத்திய அரசும் சிட்பியும் (ஷிமிஞிஙிமி ) சேர்ந்து ஒரு கோடி ரூபாய் வரைக்கும் எந்த விதமான அடமானமும் இல்லாமல் கிரெடிட் கேரண்டி ஸ்கீமில் (  Credit Guarantee Scheme CGS ) கடன் தருகிறார்கள். ஆனால், இந்தத் திட்டத்தில் கடன் பெற பதிவு செய்ய வேண்டும். இது பற்றி வங்கிகளிடம் கேட்டால் அவர்கள் இது சம்பந்தமான மற்ற முழு விவரங்களைத் தருவார்கள்.

அடமானக் கடன்

(secured loan) ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உங்களுக்கு பணம் தேவை எனில், அடமானம் இல்லாமல் கடன் கிடைக்காது. அந்த சமயத்தில் உங்களிடம் இருக்கும் சொத்துக்களை அடமானம் வைத்துத்தான் கடன் பெற முடியும். ஒருவேளை இரண்டு கோடி ரூபாய் தேவைப்பட்டால் ஒரு கோடி ரூபாய் வரை கிரெடிட் கேரண்டி திட்டத்தின் மூலம் அடமானம் இல்லாமலும், மீதமுள்ள ஒரு கோடிக்கு சொத்துக்களை அடமானம் வைத்தும் கடன் பெறலாம்.


எவ்வளவு சொந்தப் பணம் வேண்டும்?

பிஸினஸ் திட்டத்திலே நமக்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்று தெரிந்துவிடும். அந்தத் தொகையில் குறைந்தபட்சம் 1:4.5 என்ற விகிதத்தில் ( Debt Equity Ratio  ) நம்மிடம் சொந்தப் பணம் இருக்க வேண்டும். அதாவது, ஒரு லட்சம் ரூபாயை நீங்கள் மூலதனமாக கொண்டு வந்தால் வங்கிகள் 4.5 லட்சம் வரைக்கும் கடன் கொடுக்கும். இந்த விதிதான் நிரந்தரம் என்று சொல்ல முடியாது. மிகச் சில சமயங்களில் மட்டும் இந்த விகிதத்துக்கு கீழே சென்றால் வங்கிகள் கடன் கொடுக்கும். அது நீங்கள் செய்யும் தொழில், உங்கள் பிஸினஸ் நடக்கும் இடம் போன்ற பல காரணிகளை வைத்து வங்கிகள் முடிவு செய்யும். இருந்தாலும் முதல்முறை தொழில் தொடங்குவோர் இந்த விகிதத்துக்கும் குறைவாக மூலதனம் வைத்திருந்தால் கடன் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம். உங்கள் தொழிலில் உங்கள் முதலீடு கணிசமாக இருக்க வேண்டும் என வங்கிகள் எதிர்பார்ப்பதுதான் இதற்குக் காரணம்.

வங்கிகளை எப்படி அணுகுவது?

ஒவ்வொரு வங்கியும் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை கடனாகக் கொடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்படுகின்றன. அந்த இலக்குக்காக போட்டி போட்டுக் கொண்டு வங்கிகள் கடன் தருகின்றன. ஆனாலும் தொழில் முனைவோருக்கு கடன் கிடைக்கவில்லை எனில் அதற்குக் காரணம், சரியான திட்டமிடல் இல்லாததுதான். உங்கள் தேவை ரூபாய் 25 லட்சம் எனில் அருகிலிருக்கும் வங்கிகளையே அணுகலாம். அவர்களே கடன் தருவார்கள். 25 லட்சத்துக்கு மேல் போகும் போது, ஒவ்வொரு வங்கியும் தொழில்கடன்களை ஊக்குவிக்கவே தனியாக சிறுதொழில் கிளையை ( SME Branch ) வைத்திருக்கிறார்கள். அங்கிருக்கும் அதிகாரிகளை அணுகினால் அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள்.

தேவையான ஆவணங்கள்

அடையாளச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், பிஸினஸ் நடைபெறும் இடத்துக்கான முகவரிச் சான்றிதழ், திட்ட அறிக்கை, வருமான எதிர்ப்பார்ப்பு (கடனை திருப்பிச் செலுத்தும் காலம் வரைக்கும்), உள்ளாட்சி மற்றும் இதர அரசு அலுவலகங்களில் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (தேவைப்பட்டால்), பிஸினஸ் நடைபெறும் இடம் உங்களுடையது என்றால் அதற்கான சான்றிதழ் (அ) வாடகை இடம் என்றால் ஒப்பந்தச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும். இவை தவிர, வேறு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது கடன் விண்ணப்பத்திலேயே இருக்கும். அவற்றையும் கொடுத்தால் நிச்சயம் உங்கள் கடன் மனுவை வங்கி அதிகாரிகள் ஒதுக்கித் தள்ள மாட்டார்கள்!

தனிநபர் கடன்

பர்சனல் லோனின் மிகப் பெரிய சிறப்பே, எதற்காக அதை வாங்குகிறோம் என்கிற காரணம்கூடச் சொல்ல வேண்டாம். பொதுவாக, கார் அல்லது வீடு வாங்க சில லட்சம் ரூபாய் குறையும் போது மீதிப் பணத்துக்காக கடன் கேட்டு வங்கியை அணுகினால் கார் அல்லது வீட்டை அடமானமாகக் காட்ட வேண்டி வரும்.
கடனைச் சரியாக கட்டவில்லை என்றால் அடமானம் வைக்கப்பட்டிருப்பதை வங்கி தன் வசம் எடுத்துக் கொள்ளும். இதைத் தவிர்க்க விரும்புபவர்கள் பர்சனல் லோனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். காரணம் சொல்லத் தேவையில்லை என்பதால் எடுத்ததெற்கெல் லாம் பர்சனல் லோன் வாங்குவது சரியல்ல. காரணம் மற்ற கடனைவிட இதற்கு வட்டி மிக அதிகம். எனவே பர்சனல் லோன் வாங்குவதை கடைசி முயற்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வங்கிகள் தயார்

வங்கிகள் இப்போது தாராளமாக பர்சனல் லோன் தரக் காத்திருக்கின்றன. பொதுவாக, இந்தக் கடனுக்கு 14 - 22% வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்தியன் வங்கி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி போன்றவை 1 லட்சம் வரைக்கும்தான் பர்சனல் லோன் தருகின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்.பி.ஐ. போன்றவை 10 லட்சம் வரைதான் கடன் தரும். அதற்கு மேல் தேவைப்பட்டால் சிட்டி பேங்க், ஹெச்.டி. எஃப்.சி., ஆர்.பி.எஸ். போன்றவற்றைத் தொடர்பு கொள்ளலாம். பர்சனல் லோன் வாங்கக் குறைவான ஆவணங்கள் கொடுத்தால் போதும். இருப்பிடம், அடையாளம், வருமானம் போன்றவற்றுக்கு ஆதாரம் கொடுக்க வேண்டும். மூன்று நாட்களில் கடன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 1248 மாதங்களில் கடனை திரும்பக் கட்டலாம்.

பேரம் பேசலாம்

உங்களின் சம்பளம் மற்றும் திரும்பக் கட்டும் தகுதி அதிகமாக இருக்கும் பட்சத்தில் வட்டியில் பேரம் பேசிக் குறைக்கலாம். பரிசீலனைக் கட்டணத்திலும் பேரம் பேசலாம். பர்சனல் கடன் வாங்கும் வங்கியிலேயே உங்கள் சம்பளக் கணக்கோ, கிரெடிட் கார்டோ இருந்தால் இந்தப் பேரம் நிச்சயம் கை கொடுக்கும். வட்டியைப் பொறுத்தவரையில் கடன் தொகை, திரும்பச் செலுத்தும் ஆண்டுகள், வேலையின் தன்மை, சம்பளத் தொகை, சம்பளம் வாங்குபவரா/தொழில் செய்பவரா, வாங்கும் நபரின் கடன் வரலாறு போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும். வங்கி கொடுக்கும் சலுகை அல்லது வாக்குறுதியை எழுத்து மூலம் பெற்றுக் கொள்வது அவசியம். 2 நபர்கள் கேரண்டி கையெழுத்துப் போட வேண்டி இருக்கும்.

வட்டியைக் கவனிங்க

பர்சனல் லோனில் வட்டி எந்த முறையில் கணக்கிடப்படுகிறது என்பது மிக மிக முக்கியம். ஃபிளாட் வட்டியா? ( Flat Rate ) அல்லது குறையும் வட்டியா? என்பதைக் கவனிக்க வேண்டும். ஃபிளாட் முறையில் மொத்தக் கடனுக்கும் மொத்த ஆண்டுக்கும் வட்டி கணக்கிடப்படும். உதாரணத்துக்கு ஒருவர் 15% வட்டியில் ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கி அதனை மூன்றாண்டுகளில் திரும்பச் செலுத்துவதாக வைத்துக் கொள்வோம். ஃபிளாட் வட்டி என்றால் மாதத் தவணை ரூ. 4,028ஆக இருக்கும். அந்த வகையில் மூன்றாண்டுகளில் வட்டி மட்டும் ரூ. 45,000 கட்டி இருப்பீர்கள். இதுவே குறையும் வட்டி முறை என்றால் கடன் தொகை குறையக் குறைய அசலில் அந்தத் தொகையைக் கழித்துக் கொண்டு மீதிக்கு மட்டும் வட்டியைக் கணக்கிடுவார்கள். மாதத் தவணை ரூ. 3,476 ஆக இருக்கும். இம்முறையில் மொத்த வட்டி ரூ. 24,795. அதாவது, குறையும் வட்டி முறையில், ஃபிளாட் வட்டியைவிட ரூ. 20,205 குறைவாகக் கட்டினால் போதுமானது.

முன்கூட்டி அடைக்கலாமா?

பர்சனல் கடனை முன்கூட்டியே அடைக்க பெரும்பாலான வங்கிகள் அவ்வளவு எளிதில் ஒப்புக் கொள்வதில்லை. இடையில் கடனை அடைப்பதாக இருந்தால் அபராதம் கட்ட வேண்டி வரும். இது பாக்கியுள்ள கடன் தொகையில் சுமார் 5% ஆக இருக்கும். சில வங்கிகள் மீதமுள்ள தொகையில் 25% வரை ஓராண்டில் அபராதம் இல்லாமல் கட்ட அனுமதிக்கின்றன. சில வங்கிகள் 612 மாதங்களுக்குப் பிறகே கடனை முன் கூட்டியே மொத்தமாக அடைக்க ஒப்புக் கொள்ளும். இந்த விவரம் லோன் அக்ரிமென்டில் இருக்கும்.நேரம் இருக்கும் பட்சத்தில் ஒன்றுக்கு மூன்று வங்கிகளில் வட்டி விகிதம், வட்டி கணக்கிடும் முறை, பரிசீலனைக் கட்டணம், முன் கூட்டியே கட்டுவதற்கான அபராதம் போன்றவற்றை விசாரித்து முடிவு செய்வது நல்லது.

கிளீன் லோன்

சில வங்கிகள் தனி நபர் கடனை ‘கிளீன் லோன்’ என்ற பெயரில் வழங்கி வருகின்றன. அரசு மற்றும் பொதுத் துறை பணியாளர்கள், முன்னணி தனியார் நிறுவனங்களின் நிரந்தரப் பணியாளர்கள் மட்டும் இக்கடனைப் பெற முடியும். கடன் தொகை, 10 மாதச் சம்பளமாக இருந்தால், 60 மாதங்களிலும், 5 மாத சம்பளமாக இருந்தால் 36 மாதங்களிலும் கடனைத் திரும்பக் கட்டலாம். இதற்கு மூன்றாம் நபர் கேரண்டி இருவர் கொடுக்க வேண்டும். மேலும், கடன் தொகையை சம்பளத்தில் பிடித்துக் கொள்ள தொழில் நிறுவனத்தின் அனுமதி அளிக்கும் கடிதமும் கொடுக்க வேண்டும்.       

திங்கள், 5 செப்டம்பர், 2011

சொத்தை விற்று திருக்குறள்

காட்டாங்குளத்தூர் ஒன்றியம் கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ரூபி ரெஜினா ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன், பாடத்தில் இருந்த திருக்குறள்களை மட்டும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தவருக்கு, அதிலிருந்த கருத்துச் செறிவுகள் பிடித்துப் போக, ஒட்டுமொத்த நூலையும் மாணவர்களிடமும், பொது மக்களிடமும் சேர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.பள்ளிப் பாடநூலில் இருபது திருக்குறள்கள் இருந்தால், பத்து மனப்பாடப் பகுதியாக இருக்கும். அதைப் படிப்பதற்கே மாணவர்கள் திணறிவிடுவர். இதைக் கருத்தில் கொண்ட ரூபி, "அனைத்து திருக்குறள்களையும் படிக்கும் மாணவர்களுக்கு பரிசு' என்று அறிவித்திருக்கிறார். அறிவித்தபடியே திருக்குறள் நூலையும் பரிசளித்திருக்கிறார்.அதற்கடுத்த முயற்சியாக, 100 குறள் சொன்னால் 100 ரூபாய் என்று அறிவித்திருக்கிறார். மாணவர்களிடையே உற்சாகம் கூட, குறள்களின் எண்ணிக்கைக்கேற்ப பரிசுத்தொகையையும் உயர்த்தியிருக்கிறார்.

திருக்குறளை மக்களிடமும் சேர்க்க வேண்டுமானால், ஒரு இயக்கமாக செயல்பட வேண்டும் என்று நினைத்த ரூபி, 2007ல் "உலகப் பொதுமறை மன்றத்தை' தொடங்கியிருக்கிறார்.தான் வாங்கும் சம்பளத்தில், 5,10 புத்தகங்களாக வாங்கி வழங்கிக் கொண்டிருந்த ரூபிக்கு, நிறைய திருக்குறள் புத்தகங்களை வழங்க வேண்டும் என்கிற ஆசை வந்திருக்கிறது.
ரூபி கொடுக்க நினைத்தது, 100, 200 புத்தகங்கள் அல்ல. 1330 குறள்களை 100 மடங்காக்கி, ஒரு லட்சத்து 33 ஆயிரம் புத்தகங்கள்(!) வழங்க திட்டமிட்டிருக்கிறார். ஆனால், அதற்கான பொருளாதார வசதியில்லை . இருந்தும் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற, புறநகர் பகுதியில் வாங்கிப் போட்டிருந்த நிலத்தை, 24 லட்சத்திற்கு விற்று, புத்தகங்களை வாங்கிவிட்டார்.

நிலத்தை விற்று திருக்குறள் வாங்கும் அளவிற்கு, திருக்குறள் மீது அப்படி என்ன பற்று என்று கேட்டபோது, ""இனம், மொழி, மதம் கடந்து அனைவரும் பின்பற்றக் கூடிய உன்னதமான கருத்துக்கள் நிறைந்த ஒரு புத்தகம் எது என்றால் நிச்சயம் அது திருக்குறள் தான்.திருக்குறளை நம் வாழ்விற்கான மையக் கருவாகக் கொண்டு வாழ்ந்தோமானால், அதை விட சிறப்பான வாழ்க்கை எதுவுமில்லை. அக, புற வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விஷயங்களும், திருக்குறளில் இருக்கின்றன.ஒவ்வொரு குடிமகனும் திருக்குறளை நெஞ்சில் நிறுத்தி, அதன்படி வாழ்ந்தால் உலகில் எவ்விதமான குற்றங்களும் நிகழாது. திருக்குறள் என் வாழ்க்கை முறையை மாற்றியிருக்கிறது.இந்தச் சேவையை, என் உறவினர்கள் பலவாறாய் விமர்சிக்கிறார்கள். ஆனால், இது எனக்கு மனநிறைவைத் தருகிறது'' என்கிறார் ரூபி. இவரின் திருக்குறள் "ஆர்வத்தை' கண்ட பல்வேறு அமைப்புகள், இவருக்கு தங்கள் அமைப்பில் முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளன.

""கடந்த ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவின் போது, 133 கவிஞர்கள் கவி பாடிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது மிகவும் சந்தோஷமான தருணம்'' என நெகிழும் ரூபி, சிறைக் கைதிகளையும் விட்டு வைக்கவில்லை.விடுமுறை நாட்களில், மத்திய சிறைச் சாலைகளுக்குச் செல்லும் ரூபி, திருக்குறள் நூலை வழங்கி, அதிலுள்ள அறிவுரைகளை கடைபிடிக்கும்படி வலியுறுத்துகிறார். புத்தகங்களை வழங்குவதில் மட்டுமல்ல, பரிசு கொடுப்பதிலும் ரூபி பிரமிப்பூட்டுகிறார். 1330 குறள்களை மனப்பாடமாகச் சொல்லும் முதல் 33 பேருக்கு, 10,000 ரூபாய் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி, ஏழு பேருக்கு வழங்கியும் விட்டார்.திருக்குறளுக்காய் தன்னை அர்பணித்துவிட்ட இப்பெண்மணிக்கு, திருக்குறள் மாமணி, குறள்நெறிச் செல்வி, குறள் அரசி, தமிழ்த்தென்றல் உள்ளிட்ட 44 விருதுகளை பல்வேறு அமைப்புகள் வழங்கியுள்ளன. இந்தச் செலவுகளுக்காக, யாரிடமும் பணம் வாங்காத ரூபிக்கு, "திருக்குறள் தியான மண்டபம்' அமைக்கும் ஆசை உள்ளது. இப்பணிக்காக நல்லெண்ணம் படைத்தவர்களின் உதவியை எதிர்பார்த்திருக்கிறார். ரூபி நிச்சயம் இதனை செய்து முடிப்பார்.

எப்படி என்பதற்கு விடையாக ஒரு திருக்குறள் சொல்கிறது...
""எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்''
ஒரு பொருளை அடைய எண்ணி, அதனை அடைவதற்குரிய செயலில் வலிமையுடையவராய் இருந்தால், எண்ணப்பட்ட பொருளை எண்ணியபடியே அடைவர்.

கூகுளுக்கு நன்றி


  இணையதளம் உருவாக்க வேண்டும் அதைவிட தேடுபொறியில் தேடும் போது சரியான நேரத்தில் மக்களிடம் எடுத்துச் காட்ட வேண்டும் இதைத்தான் SEO என்று சொல்கிறோம். மிகப்பெரிய நிறுவனங்கள் தேடுபொறியில் தங்கள் தளம் முதலிடம் வைப்பதற்காக பெரிய அளவு தொகையை செலவு செய்கின்றது.


நமது வலைபூவுக்கு கூகுள் நல்ல அதரவு வழங்கி உள்ளது கூகுள் சர்ச்  என்ஜின் மூலம் நமது srbc  என டைப் செய்த உடனே 3 வதாக தேடி கொடுக்கிறது

 ஆதரவு அளித்த வலைபூ  நண்பர்களுக்கும் கூகுள்  நிறுவனத்துக்கும்  நன்றி