வியாழன், 10 பிப்ரவரி, 2011

வணக்கம் கலைஞர் அய்யா



மதிப்பிற்குறிய உயர் திரு கலைஞர் அய்யா அவர்களுக்கு வணக்கம் தமிழ்மொழி மத்தியஅரசால் நசுக்கப்படுகின்றது என்று அன்று மொழிபோர் நடத்திய தாங்கள் இன்று தமிழன் பொசுக்கப்படுவதைக் கண்டும் கண்டும் காணாமல் இருப்பதென் அய்யா.தியாகிகள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை  போற்றுவதற்கு தயங்கமாட்டேன் என்று கூறிய தாங்கள்

முத்துக்குமரனும் ஒரு தியாகி என்பதை ஏன் மறந்தீர்கள் அய்யா. தமிழ் மக்களுக்காக என் வயதினையும் பொருப்படுத்தாது இரவு பகல் பாராமல் ஓய்வு இன்றி உழைக்கின்றேன் என்கின்றீகளே மீனவன் தமிழன் இல்லையா அவன் கடலிலே தன் காலங்களை கடத்தி விடுவதால் அவனை கைவிட்டு விட்டீர்களா ஈழத்தமிழனால் தான் உங்களுக்கு அரசியல் பயன் இல்லை அதனால் கைவிட்டீர்கள் இந்த மீனவ தமிழனுமாலுமா தங்களுக்கு பயன்யில்லாமல் போய் விட்டான் எங்களைப் போன்றவர்களுக்கு தங்களை போன்ற அதிகாரத்தில் சிறிதெனும் கொடுத்துப்புப்பாருங்கள் அப்போது தெரியும் தங்களுக்கு எங்களை எப்படி காத்துக்கொள்ள தெரியும்.எந்த அரசியல் லாபத்திற்காக ஈழத்தமிழனையும் மீனவதமிழனையும் கொன்றுகுவிக்க  துணைநின்றீர்களோ அந்த அரசியல் அரிசானத்தில் தங்களை துாக்கி எரியும் காலம் இன்னும் சில நாட்கள் தான் நாட்களை எண்ணிக்கொண்டு இருங்கள் தமிழனுக்கு ஒரு தமிழனாய் இழைத்த துாரோகத்தை எண்ணி வீட்டில் இருக்கும் காலம்.பாரதியின் நண்பர் பரணி வருமையில் வாடுவதைக்கண்டு மாதம் 100 ரூ உதவித் தொகை வழங்க ஆணையிட்டேன் என்று கூறும் தாங்கள் இந்த 100 ரூ வைத்து எண்ண செய்ய முடியும் என்று நினைக்கின்றீர்கள் அய்யா.தமிழுக்கு தொண்டு செய்தவர்களை சிறப்பிப்பது எனது கடமை என்று கூறும் தாங்கள் தமிழன் என்று ஒருவன் இருந்தால் தான் அந்த தமிழ் வாழும் என்பதை ஏன் மறந்தீர்கள். 

0 கருத்துகள்: