வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

நெஞ்சம் கொஞ்சம் நின்றது.....



மேலே நீங்கள் காணும் காட்சி ஆத்துார் அருகே உள்ள சம்பேரியைச் சேர்ந்த தனியார் மற்றும் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாலைக்கொட்டும் காட்சி கடந்த நான்கு நாட்களாக பால் உற்பத்தியாளர்கள் தங்களின் போரட்டங்களை பல வடிவில் நடத்தி தங்களின் கோரிக்கையினை தமிழக அரசு எதிராக நடத்தி வருகின்றனர் கறைவை மாடுகளுடன் சாலை மறியல் என்று போராடிய நீங்கள்  கடந்த இரு தினங்களாக உங்களின் போராட்ட குணத்தின் போக்கைமாற்றிருப்பது நெருடலாக உள்ளது எதை மூலதனமாக கொண்டு தங்கள் வாழ்ந்து வருகின்றீர்களோ அந்த மூலதனமான பாலை நீங்கள் நடத்தும் முறை கண்டு  நெஞ்சம் கொஞ்சம் நின்றது தான் போகின்றது பாலில் எழுமிஞ்ச சாறு ஊற்றுவது நடு ரோட்டில் ஊற்றுவது என யாறுக்கும் பயன் அற்ற இந்த செயலால் என்ன கண்டீர்கள் நண்பர்களே எடுத்துக்கொண்ட செயலை போராடிவெல்ல வேண்டும்  என்று தொங்கிய நீங்கள் இன்று தடம்மாறி அரசியல்வியாதிகள் போன்று விளம்பரபிரியர்களாக மாறியதன் மர்மம் என்ன எடுத்துக்கொண்ட இலக்கை தடம்மாறாமல் சென்றால் மட்டுமே நீங்கள் வெற்றி அடையமுடியும்.உங்களின் இலக்குமாறாமல் வெற்றிஅடைய எங்கள் வாழ்த்துக்கள்

0 கருத்துகள்: