திங்கள், 24 ஜனவரி, 2011

தமிழனின் உயிர் 5 லட்சம்

தமிழனின் உயிர் 5 லட்சம் என்று உலகிற்க்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு இதில் கேவளம் என்னவென்றால் இது தமிழன்நாடு பாண்டியன் எனும் மீனவன் படுகொலை நடந்து சில நாட்களுக்குள் மீண்டும் ஜெயக்குமார் எனும் மீனவனின் படுகொலை சிங்கள ரத்த வெறிபிடித்த ராணுவ கொலைகாரனின் அட்டுழியம் மீண்டும் என்ன செய்து கொண்டு இருக்கிறது தமிழக அரசு (இந்திய அரசுக்குத்தான் தமிழன் மீது என்னவெறுப்போ தெரியவில்லை ஈழத்தமிழனையும் கொல்ல துணைநின்று இன்று இந்த தமிழனையும் கொல்ல துணை நிக்கின்றது )

மதிப்பிற்க்குறிய கலைஞர் ஜயா அவர்களே உங்கள் உறவுகளுக்கு (குடும்ப) கடந்த முறை எப்போதெல்லாம் காங்கிரஸ் அரசால் பிரச்சனைகள் வந்ததோ(அந்த பிரச்சனைகளை ஆசாய்ந்து பார்த்தால் ஜந்து பைசா ப்ரோசனம் இல்லாதவைகள்) அப்போதல்லாம் எம்.பிக்கள் ராஜினமா எனும் அயுதம் கொண்டு மிரட்டி உங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொண்டிர்கள் ஆனால் இப்போது ஈழத்தமிழனை கொன்று குவித்தபோதும் சரி இந்த மறத்தமிழனையும் கொன்று குவிக்கப்படும் போது மவுனம் சாதிப்பதேன் தங்களிடம் கேட்டால் கடிதம் எழுதிவுள்ளேன் என்று அறிக்கைவிடுகின்றீர்கள் கடந்த முறை தங்கள் குடும்ப உறவுகளுக்கு சிக்கல் வந்த போதெல்லாம் கடிதம் எழுதாமல் சில மணித்துளிகளில் எப்படி தங்களின் என்னங்களை சாதித்தீர்களோ அந்த ஆயுதம் கொண்டு உடனே நீங்கள் இந்த செயலுக்கு தீர்வு காணாவிடில் ஓட்டுப்போட ஒரு தமிழனும் இருக்க மாட்டான் 

0 கருத்துகள்: