திங்கள், 24 ஜனவரி, 2011

சோம்பேறி கண்..குழந்தைகளை தாக்கும் அபாயம்


பெயருக்கு ஏற்றபடி வித்தியாசமான பிரச்சனைதான் இது. ஆங்கிலத்தில் இதை Amblyopia அல்லது  Lazy eye என்று சொல்கிறோம்.பிறந்த குழந்தைகளை பாதிக்கிற இதை சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சையளிக்க தவறினால் பார்வையே பறி போகும் அபாயம் ஏற்படலாம்.
பிறந்த குழந்தைகளுக்கு பார்வையில் முன்னேற்றம் வர வேண்டுமென்றால் பார்வையில் படுகிற  காட்சிகளை துல்லியமாக பார்க்க வேண்டும் பச்சிளங் குழந்தை எதை எப்படி பார்க்கிறது என்பதை மற்றவரால் சொல்ல முடியாது. குழந்தையின் பார்வையில் முன்னேற்றம் ஆரம்பிக்கிறது இந்தக் கட்டத்தில் உண்டாகிற பாதிப்புகளால் அதற்கு முழுமையான பார்வையே வராமல் போகலாம்.
மாறுகண்,பார்வைக்கோளாறு, கேட்டராக்ட்,ஒருகண் மட்டும் கீழே இறங்கியது மாதிரி இருப்பது,வெளிச்சம் உள்ளே போகாதது என எது வேண்டுமானாலும் இந்த பிரச்சனையின் வெளிப்பாடுகளாக இருக்கலாம்.
ஒரு கண்ணில் பார்வை தெளிவாக இருக்கலாம் மறு கண்ணில் தெளிவு இருக்காது.அதனால் இரண்டு கண்களும் ஒன்றாக ஃபோகஸ் ஆகாது,அந்த ஒரு கண்ணை மட்டும் உபயோகிக்கத் தொடங்கும் குழந்தை மூளையும் அதற்கேற்றபடி ஒரு கண்ணால் மட்டுமே பார்ப்பதையும் பழக்கப்படுத்திக் கொள்ளும் இது தான் சோம்பேறிக்கண்.
இதன் அறிகுறிகள் வெளிப்படையாக தெரியாது என்பதால் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையாக இருந்தால் கண்களைப் பரிசோதிப்பது அவசியம் மாறு கண் இருப்பது தெரிந்தால் 2 வருடங்களுக்குள் அறுவை சிகிச்சை மூலம் அதை சரி செய்தாக வேண்டும் காலம் கடந்த சிகிச்கையால் பார்வை வராமலே போகக் கூடும்.
குழந்தையின் நடையில் வித்தியாசம் தெரிந்தாலோ மிக அருகில் உட்கார்ந்து டி.வி பார்த்தாலோ அடிக்கடி தலைவலப்பதாக சொன்னாலோ உடனடியாக கண் மருத்துவரைப் பார்க்க வேண்டும் சில குழந்தைகளுக்கு ஓரு கண்ணில் அதிகப் பவரும் மறு கண்ணில் குறைந்நத பவரும் இருக்கலாம் இதை கண்டுபிடித்து குறைந்த பவர் உள்ள கண்ணை கண்ணாடி போட்டு உபயோகிக்க செய்ய வேண்டும் இரண்டு கண்களின் பார்வையும் சமமாக்கச் செய்கிற பயிற்சியை அந்தக் குழந்தைக்கு தினம் சில மணி நேரம் கொடுக்க வேண்டியிருக்கும்
ஒரு கண் கீழே இறங்கி இருப்பது தெரிந்தால் அதை துாக்கி சரி செய்கிற அறுவை சிகிச்சை தேவைப்படலாம்  பொதுவாக 10 முதல் 12 வயதில் பார்வையின் வளர்ச்சியானது நின்று போய்விடும் எனவே அதன் பிறகு செய்யப்படுகிற சிகிச்சை முழுப் பலனைத் தராது என்பதால் எத்தனை சீக்கிரம் முடியுமோ  அவ்வளவு விரைவாகக் கண்டுபிடித்து சிகிச்சையை ஆரம்பிப்பதே புத்திசாலித்தனம்.

0 கருத்துகள்: