புதன், 18 ஆகஸ்ட், 2010

தேசப்பற்றில் 4வது இடம்

தேசத்தின் மீது தனக்கு பற்று இல்லை என்று எந்த நாட்டினரும் எப்போதும் கூற மாட்டார்கள். பலர் தேசப்பற்றை தங்கள் மனதுக்குள் வைத்திருப்பார்கள். சிலர் வெளிப்படையாகக் காட்டுவார்கள். கிரிக்கெட் அணியை தேசத்தின் அடையாளமாகவும், பதக்கம் வெல்லும் மற்றும் சாதனை நிகழ்த்தும் வீரர்களை தேசத்தின் பிள்ளைகளாகப் பார்க்கிறோம். கலைத் துறையினர், விஞ்ஞானிகள் மற்றும் சாதனையாளர்களை "இந்தியர்கள்' என்று கூறி பெருமைப்படுகிறோம். முகத்தில் தேசக்கொடியை வரைந்து கொள்கிறோம். தேசிய தினங்களில் இந்தியாவை நினைத்துப் பார்க்கிறோம். கடந்த 1995-97ம் ஆண்டில் நடந்த ஒரு கருத்துக் கணிப்பில் அமெரிக்கர்கள்தான் உலகிலேயே அதிகமாக தங்கள் தேசத்தின் மீது பாச மழை பொழிகிறார்கள் என்று தெரியவந்தது. இந்த பட்டியலில் வெனிசுலா, தென் ஆப்ரிக்காவுக்குப் பின் 4வது இடம் இந்தியாவுக்கு கிடைத்தது. ஆஸி., ஜப்பான், ரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு பின்னால் இருந்தன. இதுவே நமக்குப் பெருமை என்றாலும் நாம் முதலிடத்துக்கு வர - இன்னும் காட்ட வேண்டிய அன்பு எவ்வளவு இருக்கிறது என்று பாருங்கள்.






0 கருத்துகள்: