புதன், 18 ஆகஸ்ட், 2010

நாட்டுக்கு அவசியம்

டாஸ்மாக்' ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு திடீரென அறிவித்து உள்ளது. ஊழியர்கள் கடந்த 11ம் தேதி, "ஸ்டிரைக்' நடத்திய நிலையில், திடீர் சலுகை அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளதோடு, ஊழியர்களின் கோரிக்கைக்கு படிந்துள்ளது.








பணி நிரந்தரம் செய்தல், வார விடுமுறை என்பது போன்ற கோரிக்கைகளை, "டாஸ்மாக்' ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர். அரசு கண்டு கொள்ளாததால், தனித்தனியாக போராடி வந்த அண்ணா தொழிற் சங்கபேரவை,ஏ.ஐ.டி. யூ.சி., - சி.ஐ.டி.யூ., - பாட்டாளி தொழிற் சங்கங்கள்ஒன்றாக இணைந்து,கூட்டு நடவடிக்கைகுழுவை துவக்கின. கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 11ம் தேதி ஒரு நாள், "ஸ்டிரைக்' நடத்தின. தமிழக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் மூலம், "ஸ்டிரைக்' முறியடிக்கப் பட்டது. 90 சதவீதத்திற்கும் மேலான கடைகள் வழக்கம்போல் இயங்கின. போராட்டத்தை வெற்றி கரமாக முறியடித்த தமிழக அரசு, தற்போது, "டாஸ்மாக்' ஊழியர் களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்டபல்வேறு சலுகைகளை அறிவித்துள் ளது.







முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிவிப்புகள்: மேற்பார்வையாளர்கள் மாத தொகுப்பூதியம் 4,000த்திலிருந்து 4,500 ரூபாயாகவும், விற்பனையாளர்கள் தொகுப்பூதியம் 2,800லிருந்து, 3,200 ரூபாயாகவும், மதுக்கூட உதவியாளர் தொகுப்பூதியம் 2,100லிருந்து, 2,400 ரூபாயாகவும் உயர்த்தப் பட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆயிரம் பணியாளர்கள் பயன் பெறுவர். "டாஸ்மாக்' பணியாளர் களின், "டிபாசிட்'டுக்கான வட்டி 3.5 சதவீதத்திலிருந்து, 6 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இதனால்,ஆண்டு ஒன்றுக்கு மேற்பார்வையாளர்களுக்கு 1,250, விற்பனையாளர்களுக்கு 375 ரூபாய், உதவியாளர்களுக்கு 250 ரூபாய் கூடுதலாக கிடைக்கும்."டாஸ்மாக்' பணியாளர் களுக்குவழங்கப்படும் ஊக்கத்தொகை 1.5 சதவீதத்திலிருந்து, 1.75 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.







மதுபானவிற்ப னைக்குபின், கடைகளில் தேங்கும் காலி அட்டைப் பெட்டிகள், பணியாளர் களால் ஒப்பந்ததாரர்களுக்கு விற்கப்படுகின்றன. இந்த அட்டைப் பெட்டிகளில் ஏற்படும் சேதம் 2.5 சதவீதமென கணக்கிடப் பட்டுள்ளது.அது, தற்போதுபணியாளர்களின் ஊதியத்திலிருந்து பிடிக்கப் படுகிறது. இனி அட்டைப் பெட்டிகள் சேதத்தினால் ஏற்படும் இழப்பை, நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும். இந்த சலுகைகள் அனைத்தும் வரும் செப்.,1முதல்நடைமுறைக்கு வரும். அரசின் தூய நோக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, தொடர்ந்து பணியாற்றி வரும், "டாஸ்மாக்' ஊழியர்களுக்கு, அரசு உரிய நேரத்தில் சலுகைகளையும், உரிமைகளை அளிக்கும் என்பதற்கு, இது எடுத்துக்காட்டு. இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.







"டாஸ்மாக்' ஊழியர்கள் நடத்திய போராட்டத்தை முறியடிப்பதில் வேகம் காட்டிய தமிழக அரசு, தொழிற்சங்கங்களுடன் கூட ஆலோசிக்காமல், திடீரென பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அரசின் இந்த முடிவு, ஊழியர்களிடம் அரசு படிந்துள்ளதாகவே கருதப்படுகிறது.







முக்கிய கோரிக்கை கதி? "டாஸ்மாக்' தொழிற் சங்க கூட்டு நடவடிக்கை குழு வெளியிட் டுள்ள அறிக்கையில், "தொழிற்சங்கங்களை அழைத்து பேசாமல், அறிவிப்பை வெளியிட் டுள்ளதுமோசமான செயல். பணி நிரந்தரம், வார விடுமுறை, தினமும் எட்டு மணி நேர வேலை போன்ற முக்கிய கோரிக் கைகள் பற்றி, எந்த அறிவிப்பும் இல்லாமல், மற்ற அறிவிப்புக்கள், ஊழியர்களை திருப்திப் படுத்தாது என,தெரிவிக்கப் பட்டுள்ளது.

0 கருத்துகள்: