புதன், 29 டிசம்பர், 2010

இளையராஜாவை சர்ச்சைக்கு இழுக்காதவர்கள் யார் ?



இசை ஞானி இளையராஜாவை சர்ச்சைக்கு இழுக்காதவர்கள் யாரும் இல்லை ..
வீட்டுக்கு போன தனக்கு தண்ணீர் தரவில்லை என அதைக்கூட பிரச்சினையாக்கினார் இயக்குனர் மிஷ்கின் ..
இதை கூட பிரச்சினை ஆக்குபவர்கள் , இலக்கிய விவகாரம் கிடைத்தால் விட்டு விடுவார்களா? 
தாகூர் எழுதிய பிரபல கவிதைகளில் ஒன்று mind without fear 


அதை இளையராஜா மொழி பெயர்த்தது தவறு என்பதே இப்போது பஞ்சாயத்து..
தாகூர் கவிதைகளில் ஆய்வுகள் செய்துள்ள திரு ஆர் நடராஜன் , யுகமாயினி இதழில் இசைஞானி மேல் கடும் தாக்குதல் நடத்தியுள்ளார்..
தாகூரை ராஜா அவமானப்படுத்தி விட்டார்.. 
மைண்ட் என்றால் மனம்..அதை இதயம் என மொழி பெயர்த்தது தவ்று..
மனிதன் தலை நிமிர்ந்து நிற்பதாக தாகூர் சொல்வதை இதயம் தலை நிமிர்ந்து இருப்பதாக குழப்புகிறார்..



Where knowledge is free என்ற வரியை “  சிறைவாசமின்றி அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ..” என நீட்டுகிறார்..








Where words come out from the depth of truth என்பதை ,வாய்சொற்கள் எங்கே மெய் நெறிகளின் அடிப்படையிலிருந்து .. என கூடுதல் வார்த்தைகள் சேர்க்கிறார்..





tireless striving என்ப்தை விடாமுயற்சி என மொழி பெயர்த்தது தவறு,,, 
இது போல பல தவறுகள் இருக்கின்றன,,,
பிளேட்டோவின் படைப்பை மொழி பெயர்க்கும்போது அளவு கடந்த சுதந்திரம் எடுத்து கொண்டதால் Etienme Dolet என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது
அதுதான் என் நினைவுக்கு வருகிறது என்று பாய்கிறார் அவர்..

ஆனால் நான் இளையராஜாவின் மொழி பெயர்ப்பை படித்தபோது, அவர் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்க்காமல் , தாகூர் சொல்ல வந்த கருத்தை அருமையாக தமிழில் சொல்ல வந்தது தெரிந்தது…

இளையராஜா இதயம் என சொல்வது பிசிக்கல் இதயம் அல்ல… மனம் என்பதைதானே சொல்கிறார் ? இது சிறுபிள்ளைக்கும் தெரியுமே?
“ அறிவை சிறைப்படுத்த முடியாது… எனவே விடுதலை என்ற பேச்சு அர்த்தம் அற்றது “ என்பதுதானே கவிதையின் உட்கருத்து..இதை சொல்வதில் என்ன தவறு..
“ வெளிப்படையாக காண்பது வாய்சொற்கள்..இவை மெய்யின் பூரணத்துவத்தை உணர்த்த முடியாது “ என்பது தாகூருக்கு உடன்பாடான கருத்துதான்..

தியானம், முக்தி என நாம் சொல்வது எல்லாமே மனதின் விளையாட்டுதான்… 
போலி சாமியார்கள் உருவாக இது போன்ற ஆசைகள்தான் காரணம் .. 
இதைத்தான் தாகூர் சொல்கிறார்.. அதை சரியாக இளையராஜா விளக்குகிறார்.
“ விடாமுயற்சியும் தளர்ச்சியும் மனதின் கற்பனையே.. ஆனால் அதுவும் பூரணத்துக்குள் உள்ளதுதான் .. அதை நோக்கி கை நீட்ட அது தனி பொருள் அல்ல “
நாம் கற்ற விஷ்யத்தை வைத்து , இன்னொன்றை ஆராய்ந்தால் புதிதாக அதையும் கற்க முடியாது… 
சாய்ஸ்லெஸ் அவேர்னஸ் என்பார் ஜெகே..
அந்த அடிப்படையில் அறிவு பாகுபாடு பார்க்காது என இளையராஜா சொலவ்து மிகவும் சரியான ஒன்றுதான்..
கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் தேட ஆரம்பித்தால் கடவுள் என எதையாவது பார்க்க முடியும்..
கடவுள் இல்லை என்ற நம்பிக்கையுடன் தேடினால் , கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரம் கிடைக்கும்… 
விருப்பு வெறுப்பு இல்லாமல் வாழ்வை பார்க்க வேண்டும்..
நோக்கம் அற்ற நிலைதான் விரிந்த நிலை என இளையராஜா சொல்வதும் சரியானதே..
என்னை பொறுத்தவரை இளையராஜாவின் விளக்கமே சரியானதாக தோன்றுகிறது ..
மூலத்தையும் மொழி பெயர்ப்பையும் பாருங்கள்…உங்கள் கருத்தை கூறுங்கள்..
கவிதை உங்கள் பார்வைக்கு, இதோ…. 

*******************************************************************
Mind without fear 



WHERE the mind is without fear and the head is held high






Where knowledge is free






Where the world has not been broken up into fragments






By narrow domestic walls






Where words come out from the depth of truth






Where tireless striving stretches its arms towards perfection






Where the clear stream of reason has not lost its way






Into the dreary desert sand of dead habit






Where the mind is led forward by thee






Into ever-widening thought and action






Into that heaven of freedom, my Father, let my country awake.






-Rabindranath Tagore



இசைஞானி இளையராஜா மொழிபெயர்ப்பு
இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ..
சிறைவாசமின்றி அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ..
குடும்பத்தின் குறிகிய தடைப்பாடுகளால் வெளிஉலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டு துண்டுகளாக போய்விட வில்லையோ.
வாய்சொற்கள் எங்கே மெய் நெறிகளின் அடிப்படையிலிருந்து 
வெளிப்படையாய் வருகின்றனவோ 
விடாமுயற்சி எங்கே தளர்ச்சியின்றி பூரணத்துவம் நோக்கி 
தனது கரங்களை நீட்டுகிறதோ 
அடிப்படைதேடி செல்லும் தெளிந்த நீரோட்டம் 
எங்கே பாழடைந்த பழக்கம் எனும் பாலை மணலில் 
வழிதவறிப் போய்விடவில்லையோ
நோக்கம் விரியவும் ஆக்க வினை புரியவும் இதயத்தை
எங்கே வழி நடத்தி செல்கிறாயோ
அந்த விடுதலை சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே
விழித்தெழுக என் தேசம் !


வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பு ( திரு நடராஜன் ) 
எங்கே அச்சமின்றி இருக்கிறதோ மனம் 
எங்கே நிமிர்ந்து இருக்கிறதோ தலை 
எங்கே சுதந்திரமாக இருக்கிறதோ அறிவு
எங்கே குறுகிய தேச சுவர்களால் 
கூறுபட விடவில்லையோ உலகம்
எங்கே உண்மையின் ஆழத்திலிருந்து 
வருகின்றனவோ சொற்கள்
எங்கே செம்மைக்கு செல்கிறதோ 
அயர்விலா உழைப்பு
மாய்ந்த பழக்கங்களின் பாழ்மணலில் 
தெளிந்த பகுத்தறிவு ஓடை 
எங்கே பாதை தவறாமலிருக்கிறதோ 
எப்போதும் விரிவுபடும் சிந்தையிலும் செயலிலும் 
எங்கே நீ மனதை செலுத்துகிறாயோ 
என் தந்தையே , அந்த சுதந்திர ஸ்வர்க்கத்தில் 
விழிக்கட்டும் என் தேசம்

0 கருத்துகள்: