புதன், 29 டிசம்பர், 2010

இந்திய எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

ஜம்மு : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு படை முகாம்களின் மீது பாகிஸ்தான் ராக்கெட் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது எல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, எல்லை பாதுகாப்புப்படை உதவி ஆய்வாளர் ஓபராய் கூறியதாவது : இன்று அதிகாலை 04.30 மணியளவில் துவங்கிய தாக்குதல், 05.30 மணிவரை நீடித்ததாகவும், நமது படையினர் உஷாராக இருந்ததால் இழப்புகள் தவிர்க்கப்பட்டதாகவும், அத்துமீறலையடுத்து, எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: