திங்கள், 27 டிசம்பர், 2010

தமிழ்நாட்டு காவல்துறைக்கு ஸல்யூட்..!





   மிழ்நாட்டு காவல்துறையின் மதிப்பு மிக்க தலைவர் அவர்களுக்கு ஒரு சாமான்ய தமிழனின் பணிவான கடிதம்


  வணக்கம் சார் நல்லா சொளக்கியமாக இருக்கிறீர்கா?


  பாவம் நீங்கள் ஊருக்கெல்லாம் விடுமுறை என்றாலும் உங்களுக்கும் உங்கள் ஊழியர்களுக்கும் விடுப்பே கிடையாது குழந்தை குட்டிகளை கூப்பிட்டுக் கொண்டு ஒரு கோவிலுக்கு போனோம் சினிமா பார்க் என்று ஆறுதலாய் ஒருநாளாவது நிம்மதியாய் இருந்தோம் என்ற சாதாரண மனிதனின் சந்தோஷம் கூட உங்களுக்கில்லை


  ஆனால் உங்கள் சிரமமும் கஷ்டமும் யாருக்கு புரியபோகிறது ஆளுங்கட்சிக் காரர்களின் நெருக்கடி எதிர்கட்சிக் காரர்களின் குடைச்சல் பொதுஜனங்களிள் பிச்சல் புடுங்கல் ஒருநாளாவது அனுபவிச்சால்தான் குறை சொல்பவர்களுக்கு தெரியும்


  சில காவல்துறை நண்பர்களால் ஓட்டுமொத்த துறையே தலைகுனிவை சந்திக்கும் நேரத்தில் கோவை மாநகர காவல் துறையினர் ஊர்மெச்சும் காரியத்தை கைதட்டலோடு செய்திருக்கிறார்கள்


  ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்வு வளம்பெற தங்கள் மாத ஊதியத்தில் ஒருபகுதியை வழங்கி வருவது மக்களின் சல்யூட் பெரும் விஷயம்.


  இந்தப்பணி நாடு முழுவதும் பறவ வேண்டும் உண்மையான மரியாதையை உங்கள் துறை பெற வேண்டும் என்பதே எங்களின் பிராத்தனை


 அது நிச்சயம் உங்களால் நடத்தி வைக்க முடியும் தயவு செய்து மக்களுக்கு தொண்டாற்றி எங்கள் வாழ்வு வளம்பெற உதவுங்கள்  


                                                         http://www.toonpool.com/user/849/files/penetrating_pen_91585.jpg  இப்படிக்கு சாமான்ய தமிழன்

0 கருத்துகள்: