புதன், 29 டிசம்பர், 2010

தமிழ் ஒலிபரப்பை விரிவுபடுத்துகிறது சீனா

பீஜிங்: அண்டை நாடுகளுடனான உறவை பலப்படுத்தும் விதமாக இந்திய மொழிகளில் புதிதாக சர்வதேச ரேடியோ ஸ்டேஷனை ஆரம்பிக்கிறது சீனா.நண்பனை போல் பழகு ஆனாலும் எதிரியாக நினை என்பதற்கு ஏற்ப இந்தியாவுடன் நட்புடன் பழகி வருவதாக கூறிவருகிறதுசீனா .ஆரம்ப காலகட்டங்களில் சீனாவின் ரேடியோஸ்டேஷனில் வெளி நாட்டுமொழிகள் ஒலிபரப்பப்பட்டுவருகின்றன.அவற்றில் தமிழும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது மேலும் மூன்று இந்திய மொழிகளில் குறிப்பாக இந்தி, பெங்காலி, உருது, ஆகிய மொழிகளில் ஒலிபரப்பை துவங்க உள்ளது. இதற்காக இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படஉள்ளது.அதுமட்டுமில்லாமல் தன்னுடைய சர்வதேச ஒலி பரப்பான ஏஎம்,மற்றும் எப்எம் ரேடியோ ஒலிபரப்புகளை இலங்கை,மியான்மர் உட்படஏழு நாடுகளுக்கும் விரிவுபடுத்த உள்ளது. மேலும் இந்த ரேடியோ ஒலிபரப்பிற்கு 5மில்லியன் வெளிநாட்டவர்கள் ஆன்லைன் மூலம் வாக் களித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதன்மூலம் சீனாவின் 10க்கும் மேற்பட்ட சுற்றுலாத்தலங்கள் மேம்பாடு அடையும். தற்போதுபீஜிங்நகரத்தில் உள்ள நகரசபை தலைவராக அருண் ஷாகு என்பவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் இந்து மத கோவில்களிலும் இந்தியரையே நியமிக்க உள்ளனர். அதேபோல் மற்றபகுதிகளி<லும் வெளிநாட்டவரையே அந்தந்த இடங்களில் நியமிக்க உள்ளனர். என் சீன சர்வதேச ரேடியோ ஸ்டேஷன் இயக்குனர் வாங் ஜெங்னி யான் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: